Author Topic: சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017 வரை)  (Read 5487 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2014ஆ‌ம் ஆ‌ண்டு சனி பெயர்ச்சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து‌ள்ளா‌ர்.


நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசு தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான் இப்போது பூமிக்காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வதால் வியாபாரம் தழைக்கும். மக்களிடையே ஓரளவு பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆனால் பூமிக்காரகன் செவ்வாய் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் பூமி விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும்.

இயற்கை சீற்றங்களாலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களாலும் வெள்ளப் பெருக்காலும் மண் வளம் குறையும். அதேப் போல மணல் தட்டுப்பாடு உலகெங்கும் அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்களுக்கு மணலைப் பயன்படுத்தாமல் வேறு மாற்றுப் பொருள் பயன்பாட்டிற்கு வரும். மணலின் பயன்பாடு குறையத் தொடங்கும். வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்ட, திட்டங்களெல்லாம் நடைமுறைக்கு வரும். வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். ரசாயனப் பொருட்கள், உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், தழை உரங்கள் பயன்படுத்தி உருவாகும் தானியங்களுக்கு மவுசு அதிகரிக்கும்.

சகோதரக்காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும். சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். 20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள். உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும். ஒருபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும், மற்றொரு பக்கம் அதிக விளைச்சல் உருவாகும். பருப்பு வகைகள்  துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.

அறிவியில் அறிஞர்கள், மருத்துவர்கள் பிரபலமடைவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கேன்சருக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும். அதேப்போல முடக்குவாதம் மற்றும் வெண் தழும்புகள், தோல் நோய்கள் இவற்றை தடுக்கவும், இந்த நோய்களை குணப்படுத்தவும் புதிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படும். மனித குலத்தை சீரழிக்கக்கூடிய வைரஸ்கள் நிறைந்த ஏவுகணைகள், வெடி மருந்துகள், ரசாயன குண்டுகள் தயாரிப்பில் சில நாடுகள் இறங்கும். உலகெங்கும் எல்லைப் பகுதியில் அறிவிக்கப்படாத யுத்தம் நடந்துக் கொண்டிருக்கும். உலகெங்கும் எல்லைப் பிரச்னைகளால் அமைதிக் குறையும்.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விலை உயரும். காவல் துறைக்கும், ராணுவத்துறையினருக்கும் ஓய்வின்றி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். காவல்துறை, ராணுவத்துறை அதிகாரிகள் கடத்தப்படவும், பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்திய ராணுவத்திற்காக கூடுதல் தொகைகள் ஒதுக்கப்படும். புதிய தளவாடங்கள், ஏவுகணைகளை இந்தியா வாங்கும். சீனாவுடன் சுமூகமான நட்புறவு உண்டாகும். மக்களிடையே சேமிப்புகள் குறையும். சிற்றின்பத்திற்கு பலர் அடிமையாவார்கள். பகை வீட்டில் சனி அமர்வதால் மக்களிடையே மனஅமைதிக் குறையும். மனயிறுக்கம், அழுத்தத்தினால் தற்கொலைகள் அதிகமாகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

சாஃப்ட்வேர், சினிமா துறைகளில் வேலைத் தட்டுப்பாடு அதிகமாகும். பேங்கிங், இன்சூரன்ஸ் துறைகள் வளர்ச்சியடையும். அரசு பங்குகளின் ஒருபகுதி தனியார் மயமாகும். லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதலின் அச்சம் அதிகமாகும். இந்தியாவில் தீவிரவாதிகள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும். பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். அதேப் போல விலை நிலங்கள், நீர் நிலைகளை பாதுகாக்கவும் சட்டங்கள் வரும். நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள், நதிகளை சுத்தப்படுத்துவதற்கான திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வரும்.

நாடெங்கும் சாலைகள் சீரமைக்கப்படும். புதிய வழிப்பாதைகளும் அமைக்கப்படும். துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். புது துறைமுகங்கள், விமான நிலையங்களெல்லாம் அமைக்கப்படும். விமானப் போக்குவரத்து இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படும். வயதானவர்களின் எண்ணிக்கை கூடும். வயதானவர்களுக்கு ஆரோக்யமும் அதிகரிக்கும். பலத்துறைகளிலும் இளைஞர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நடுத்தர வயதை தாண்டியவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். சனிபகவான் ரிஷபத்தை பார்ப்பதால் ஆடு, மாடுகளை விநோத நோய் தாக்கும். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து. ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள், ஆடுகள், கோழிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

மரபணு மாற்றப்பட்ட காய், கனிகள் சந்தையில் திணிக்கப்படும். பாரம்பரியமான உணவுகளை மக்கள் விரும்பி உண்பார்கள். உணவே மருந்து என்பதையும் மக்கள் உணரக்கூடிய அமைப்பு உண்டாகும். சிவாலயங்கள் பாதிப்படையும். ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல் நிலை பாதிக்கும். சின்ன சின்ன அறுவை சிகிக்சைகளும் வந்துப் போகும். சிம்ம ராசியையும் சனிபகவான் பார்ப்பதால் உலகெங்கும் ஆளுபவர்களுக்கு அருகிலுள்ளவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இரண்டாம் மட்ட அதிகார வர்க்கங்களின் கை ஓங்கும். இதய நோயாளிகள் அதிகரிப்பார்கள். இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு இவற்றால் பாதிப்பவர்களும் அதிகமாவார்கள். மக்கள் நிம்மதியைத் தேடி அலைவார்கள். சனிபகவான் தன் வீடான மகரத்தை பார்ப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்.

பழைய தொழிற்சாலைகள் சீரழியும். புதிய பணக்காரர்கள் உருவாகுவார்கள். உலகெங்கும் அரசியலில் மாற்றம் உண்டாகும். பல வருடங்களாக ஆட்சிப் புரிந்த கட்சிகள் வலுவிழந்து புதிய கட்சிகள் வலுவடைந்து ஆட்சி அமைக்கும். சனிபகவான் வி ருச்சிக ராசியில் அமர்வதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாக பரிக்கப்படும். சனிபகவான் 7&ம் பார்வையால் பெண்ணாதிக்க வீடான ரிஷபத்தை பார்ப்பதால் பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப்படுவார்கள். பெண்களின் உரிமைகள் மறுதளிக்கப்படும். பெண்களும் மாறுபட்ட வகையில் யோசிப்பார்கள். வியாபாரம் மற்றும் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. முகத்தை பாதிக்கும் நோய்கள் உலகெங்கும் பரவும்.

முக சீரமைப்பு, பல் சீரமைப்பிற்கு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகும். மலைகள் அதிகமாக பாதிப்படையும். மலைச்சரிவு, மண் சரிவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். குறுந்தொழில்கள் பாதிப்படையும். வியாபாரத்தில் அயல்நாட்டில் இருப்பவர்களின் முதலீடுகள் அதிகமாகும். அதனால் பாரம்பரியமாக இங்குத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். ராணுவ ரகசியங்கள், அணு உலை ரகசியங்கள், விண்வெளி ரகசியங்கள், செயற்கை கோள் ரகசியங்களை கடத்தும் உளவாளிகள் கண்டறியப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இந்திய நாட்டின் எல்லைப்பகுதிகள் சீரமைக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்படும். பல பெரிய மனிதர்களின் அந்தரங்க தொடர்புகள், அந்தரங்க நட்புகள், அந்தரங்க வாழ்க்கைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். நீதிமன்றங்களின் தீர்ப்பால் சில பிரபலங்களின் வாழ்க்கை சூன்யமாகும். மாணவர்கள், இளைஞர்களிடையே பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். அரவாணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரவாணிகள் பெரிய பதவியில் அமர்வார்கள். அரவாணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விபச்சாரத்தை தடுக்க புதிய சட்டங்கள் வரும். போதை மருந்து தடுப்புச் சட்டம் கடுமையாகும். நதிகள், கடலில் கலக்கும் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்படும். மத்திய அரசில் குழப்பங்கள் உருவாகும். மத்திய அரசில் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும். விபத்துகளாலும் முக்கிய பதவியில் இருப்பவர்கள் உயிரிழக்க நேரிடும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் அதிகரிக்கும். மூன்றணிகள் உருவாகும். தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாகும். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். விளையாட்டுத்துறை நவீனமாகும். ரத்தத்தை பாதிக்கும் நோய் அதிகரிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்து குறைபாடால் பலருக்கும் புதிய நோய்கள் வரும். பொதுவாக மக்களிடையே தூக்கம் குறையும்.
 
ஆகமொத்தம் இந்த சனி மாற்றம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த பணப்பற்றாக்குறை மற்றும் முடக்கம் இவற்றிலிருந்து விடுபட வைப்பதுடன் உலகெங்கும் தாராளமயமாக்களால் வியாபார அபிவிருத்தி பணப்புழக்கம் அதிகரிப்பு, சாதிக்க வேண்டுமென்ற எண்ணம், போட்டிமனப்பான்மை மற்றும் ஆரோக்யத்தின் மீது அக்கறை போன்ற தன்மைகள் உண்டாகும்.
 
பரிகாரம்

பூமிக்காரகன் மற்றும் சகோதரக்காரகனாகிய செவ்வாய் வீட்டில் சனிபகவான் அமர்வதால் விளைநிலங்களை விற்காதீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடர வேண்டாம். இரத்தத்திற்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால் விபத்தில் சிக்கியவர்களுக்கு இரத்த தானம் செய்வது நல்லது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். செவ்வாய் அதிகாரப் பதவிகளுக்குரிய கிரகமாகும் எனவே அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது நல்லது. பொதுவாக விருச்சிக சனி மக்களிடையே பரபரப்பையும், அதே நேரத்தில் அமைதியின்மையையும், அதிருப்தியையும் உருவாக்கும்.
 
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
விசாகம் 4&ல் 16.12.2014 முதல் 24.1.2015 வரை
அனுஷம் 1&ல் 25.01.2015 முதல் 29.04.2015 வரை
 
அனுஷம் 1&ல் 15.3.2015 முதல் 29.4.2015 வரை வக்ரம்
விசாகம் 4&ல் 30.4.2015 முதல் 13.6.2015 வரை வக்ரம்
விசாகம் 3&ல் 14.6.2015 முதல் 05.09.2015 வரை வக்ரம்
 
விசாகம் 3&ல் 01.08.2015ல் முதல் 05.09.2015 வரை வக்ர நிவர்த்தி
விசாகம் 4&ல் 06.09.2015 முதல் 17.10.2015 வரை
 
அனுஷம் 1&ல் 18.10.2015 முதல் 16.11.2015 வரை
அனுஷம் 2&ல் 17.11.2015 முதல் 17.12.2015 வரை
அனுஷம் 3&ல் 18.12.2015 முதல் 19.01.2016 வரை
அனுஷம் 4&ல் 20.01.2016 முதல் 28.03.2016 வரை
 
அனுஷம் 4&ல் 29.03.2016 முதல் 19.05.2016 வரை வக்ரம்
அனுஷம் 3&ல் 20.05.2016 முதல் 17.07.2016 வரை வக்ரம்
அனுஷம் 2&ல் 18.7.2016 முதல் 20.08.2016 வரை வக்ரம்
 
அனுஷம் 2&ல் 12.08.2016 முதல் 20.08.2016 வரை வக்ர நிவர்த்தி
அனுஷம் 3&ல் 21.8.2016 முதல் 15.10.2016 வரை
அனுஷம் 4&ல் 16.10.2016 முதல் 15.11.2016 வரை
 
கேட்டை 1&ல் 16.11.2016 முதல் 15.12.2016 வரை
கேட்டை 2&ல் 16.12.2016 முதல் 16.01.2017 வரை
 
கேட்டை 3&ல் 17.01.2017 முதல் 12.3.2017 வரை
கேட்டை 4&ல் 13.3.2017 முதல் 23.4.2017 வரை
 
கேட்டை 4&ல் 8.04.2017 முதல் 23.4.2017 வரை வக்ரம்
கேட்டை 3&ல் 24.4.2017 முதல் 23.06.2017 வரை வக்ரம்
கேட்டை 2&ல் 24.06.2017 முதல் 13.10.2017 வரை வக்ரம்
 
கேட்டை 2&ல் 05.08.2017 முதல் வக்ர நிவர்த்தி
கேட்டை 3&ல் 14.10.2017 முதல் 18.11.2017 வரை
கேட்டை 4&ல் 19.11.2017 முதல் 17.12.2017 வரை


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக பல கஷ்டங்களையும், நஷ்டங்களை தந்தாலும் ஓரளவு நிம்மதியையும் தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது. எல்லோரும் நல்லவர்கள் என வாரி இரைத்ததையெல்லாம் விட்டு விட்டு சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் புரிந்து செயல்படப்பாருங்கள்.

உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்று பேசுவதெல்லாம் இனி சரி வராது. கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உஷாராக இருங்கள். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ, அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

தோல்விமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 8-ம் வீட்டில் சனி செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்துச் சனியாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு கண்டகச் சனியாக 7-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி, ஃவைப்ராய்டு பிரச்னைகள் வந்துப் போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள்.
 
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனஉளைச்சல், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று பயம் வரும். நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் ஆரோக்ய குறைவு ஏற்படும். அவ்வப்போது சலிப்பு, சோர்வுடன் காணப்படுவீர்கள். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். ஆனால் திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.
     
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதரருக்கு உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரும். தைரியம் குறையும். வழக்கு, கடனை நினைத்து அவ்வப்போது பயம் வந்து நீங்கும்.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய சிக்கல்கள் தீரும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டி சூழல் உருவாகும். ஆனால் நரம்புக் கோளாறு, தூக்கமின்மை, தோலில் அலர்ஜி வந்துப் போகும்.     
 
சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பூர்வீக சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் பிறமொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். இழப்புகள் ஏற்படும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களில் சிலர் தங்கள் பங்கு பணத்தை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உணவு, கட்டிட உதிரி பாகங்கள், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் குறையும். அறிவியல், கணிதப் பாடங்களில் சூத்திரங்களை ஒருமுறைக்கு இருமுறை நினைவுக்கூர்ந்துப் பார்ப்பது நல்லது. விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.
 
இந்த சனி மாற்றம் விபத்துகளையும், சிக்கல்களையும் ஒருபக்கம் தந்தாலும் மற்றொரு கடினஉழைப்பால் முன்னேற வைப்பதாகவும் அமையும்.
 
பரிகாரம்:

கஞ்சனூர் அருகிருலுள்ள திருக்கோடி காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் அல்லது பிரதோஷ நாளில் சென்று பூசணிக்காய் தீபமேற்றி வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ரிஷபம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

உழைப்பால் உயரும் நீங்கள், அடுத்தவர் நிழலில் அமர யோசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து எதிலும் முன்னேற்றத்தை தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். 7-வது வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி வருகிறாரே? என்று பதட்டப்படாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நன்மையே உண்டாகும். இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.

வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்று யோசிக்கும் போது காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் வரும் சின்ன சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.

மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, ஹார்மோன் பிரச்னை, முதுகு தண்டில் வலி வந்துப் போகும். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் அவ்வப்போது நிகழும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 7-ம் வீட்டில் சனி செல்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அலைச்சல், மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள், சிறுசிறு விபத்துகள், மூச்சு திணறல், வேலைச்சுமை, வீண் செலவுகள் வந்துப் போகும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்தை காப்பாற்றுவீர்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். என்றாலும் காய்ச்சல், சளித் தொந்தரவு, சோர்வு வந்து விலகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நகர எல்லையை ஒட்டியுள்ளப் பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. 
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போங்கள். அவ்வப்போது படபடப்பு, பதட்டம் வந்து நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.       
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சளித் தொந்தரவு, தலை வலி, பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். என்றாலும் புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.   
 
சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் விளம்பரத்தில் மயங்கி புது சோப்பு, பேஸ்டு, ஷாம்பு வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் முடி உதிர்வதற்கும், தோலில் நமைச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்திற்கான லைசன்ஸ்சை புதுப்பிக்க தவறாதீர்கள். சிறுசிறு அபராதம் கட்ட வேண்டி வரும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்கு டென்ஷன், இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் மந்தமாக போகும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். புரோக்கரேஜ், கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்த கடன் உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சிலர் உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும்.
 
கன்னிப் பெண்களே! இன்டெர்நெட்டில் அதிக நேரம் அமர வேண்டாம். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். திருமணம் தாமதமாகி முடியும். மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
 
இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சனைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள். கை, கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
மிதுனம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

சமாதானத்தை விரும்பும் நீங்கள், சச்சரவுகளை தவிர்ப்பீர்கள். இதுவரை உங்களின் 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, பிரச்னைகளையும் தந்து உங்களை நிம்மதியில்லாமல் செய்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் அதிரடி யோகம் தரும் 6-ஆம் வீட்டில் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளையும், பணவரவையும் அள்ளித் தரவுள்ளார்.

இதுவரை முன்னுக்குப்பின் முரணாக யோசித்தீர்களே! எப்போது பார்த்தாலும் ஒரு குழப்பத்துடன், முகவாட்டதுடன் காணப்பட்டீர்களே! குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவி வந்ததே! பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தும் அவர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் தென்றல் வீசும். அழகு, ஆரோக்யம் கூடும். சமயோஜித புத்தியாலும், மாறுபட்ட அணுகுமுறைகள் மூலமாகவும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நண்பர்கள், உறவினர்களெல்லாம் மாறி மாறி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவர்களெல்லாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி விலகுவதால் எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டீர்களே! அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

உங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் தருவார்கள். கூடாபழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் அடிமனதில் மறைந்துக் கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தள்ளிப் போய் கொண்டே இருந்ததே! இனி கண்ணுக்கு அழகான மணமகன் வந்தமைவார். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை சிறுக சிறுக பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்களின் சப்தம-ஜீவனாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 6-ம் வீட்டில் சனி செல்வதால் திடீர் இழப்புகள், மனதில் இனம்புரியாத பயம், ஏமாற்றங்கள், பண விரையம், மனைவிக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச் சைகள் வந்துப் போகும். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். திருமணம் சிலருக்கு தள்ளிப் போகும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை சனி உங்கள் ராசிக்கு 5-ம் வீடான துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் செல்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். கர்ப்பிணிப் பெண் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாதக்கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.  சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.     
   
உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் திட்டமிடாத பணிகளில் ஈடுபடாதீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வேற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. தர்மகாரியங்கள் பலவும் செய்வீர்கள்.

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.   
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, முன்கோபம், உறவினர் பகை, அசதி, சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.     
 
சனிபகவான் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் முக்கிய கோப்புகளை கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தலோசிப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.   
 
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இனி மக்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். பிரபலமான இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.   
 
உத்தியோகத்தில் இருந்து வந்த அதிருப்தி விலகும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துக் கொண்டு பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.     
 
கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உடல் ஆரோக்யம் சீராகும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். வேற்றுமாநிலத்தில் அல்லது அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.
 
இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர்யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:

திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
கடகம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

மனிதநேயம் உள்ள நீங்கள், மரம், செடி, கொடிகளையும் நேசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், பணப்பற்றாக்குறையையும் தந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்கவிடாமல் சனிபகவான் அலைக்கழித்தாரே!

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்தித்தீர்களே! முக்கியமான இடத்திற்கு புறப்படும் போதெல்லாம் வாகனம் பழுதானதே! சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அடிக்கடி வீட்டில் தண்ணீர் பிரச்னை, கழிவு நீர் குழாய் அடைப்பு என பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்ததே! இனி அந்த நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயார் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வலி, வேதனையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாரே! அவரின் ஆரோக்யம் சீராகும்.

நோய் குணமடையும். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்தார்களே! இனி அவர்களையெல்லாம் இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கிற்காக கோர்ட், கேஸ் என்று அலைந்து ஓய்ந்துப் போனீர்களே! தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும்.

மனதில் தொக்கி நிற்கும் தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டு பிரிய வேண்டி சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். உறவினர்கள் விஷயத்தில் நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் சஷ்டம-பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 5-ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திடீர் உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும்.   
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாருக்கு எலும்புத் தேய்மானம், கணுக்கால் வலி, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாய்வழி சொத்தைப் பெறுதில் தடைகள், உங்களுக்கும் வீண் பழி, வேலைச்சுமை வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அடகிலிருந்த நகை மற்றும் வீட்டு பத்திரத்தை மீட்க வழி வகைப் பிறக்கும்.
 
உங்கள் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் செலவினங்கள் அதிகமாகும். மற்றவர்கள் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மனைவிக்கு இரத்த சோகை, முழங்கால் வலி, கழுத்து வலி வந்துப் போகும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிறமொழிப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் தன்னம்பிக்கை குறையும். மனதில் ஒருவிதமான அச்சம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் நிலையறியாமல் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும்.
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
 
சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் மற்றவர்களை எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். கண் எரிச்சல், பல் வலி, காது வலி வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். சனிபகவான் லாப வீட்டை பார்ப்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். 
 
வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டங்களை சரி செய்வீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். பழைய சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகளும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலைச்சுமையும் குறையும். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடித்து உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும்.     
 
கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவ-மாணவிகளே! படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நீங்கள் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூர் அல்லது ஹஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:

தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது தசமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
சிம்மம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

சொன்ன சொல்லை நிறைவேற்றும் நீங்கள், தன்னை நம்பி வந்தவர்களை ஆதரிப்பீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு புது முயற்சிகளில் வெற்றியையும், வசதியையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையே கொஞ்சம் சவாலாக தான் தெரியும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றுவது நல்லது.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்க வேண்டாம். ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூட கொஞ்சம் செலவு செய்து, அலைந்து போராடித் தான் முடிக்க வேண்டி வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வீடு, மனை, சொத்து வாங்குவதாக இருந்தால் பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரங்களையெல்லாம் சரி பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாருக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். மின்சாரம், கத்திரி கோள், நக வெட்டி போன்றவற்றை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 4-ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்க விஷயம் சற்று தாமதமாகி முடியும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வீட்டில் குடிநீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது வந்துப் போகும்.   
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனோபலம் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வாகனம், சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள். 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். 
 
உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், வீண் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இரத்த சோகை, தலைச்சுற்றல், பைல்ஸ், மூச்சுப் பிடிப்பு வரக்கூடும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் தனாதிபதியும்-லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பணம் வரும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். வேலைக் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை நீங்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் உண்டு. பூர்வீக சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.       
 
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு, செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழல் உருவாகும். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைபளு, விரும்பத்தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச் செல்லும்.
 
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்கு அதிகம் உழைக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம்.  பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலைச்சுமை இருக்கத்தான் செய்யும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். சக ஊழியர்களில் ஒருசாரார் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரார் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். திடீர் இடமாற்றங்கள் வந்துப் போகும். உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். அன்பாக பேசிபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். திருமணம் நிச்சயமாகும். மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். விளையாடும் போதும் சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக்கழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெற வைக்கும்.
 
பரிகாரம்:

திருப்பனந்தாள் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணஜடேசுவரரை உத்திராடம் நட்சத்திரம் நடைபெறும் நாள் அல்லது அமாவாசை திதியில் தீபமேற்றி வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
கன்னி - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

காதலை மதிக்கும் நீங்கள், கனிந்த மனசுக்கு சொந்தகாரர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்ந்து உங்களை பல வகையிலும் சனிபகவான் கொடுமைப்படுத்தினாரே! பணப்பற்றாக்குறையையும், குடும்பத்தில் பிரச்னைகளையும், உங்களை ஏடாகூடமாகவும் பேச வைத்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தோல்வி முகம் மாறும். இனி முதல் முயற்சியிலேயே எல்லாக் காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள்.

தன்னம்பிக்கை துளிர்விடும். தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். இனி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். சந்தோஷம் பெருகும். மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் உங்களிடம் மனம் திருந்தி வந்து மன்னிப்புக் கேட்பார்கள். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். தூக்கமில்லாமல் தவித்தீர்களே! அந்த நிலை மாறும். இனி ஆழ்ந்த உறக்கம் வரும். உங்களைத் தவறாகப் புரிந்துக் கொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.
       
சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் சுக-சப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 3-ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் விரைந்து முடியும். என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்கள் உங்களை சரியாக மதிக்கவில்லையென்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.   
   
உங்கள் சுகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். வாகனம் சிலர் வாங்குவீர்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி விசாரித்து முடிப்பது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். கடந்த காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.     
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்துப் போகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்துப் போகும்.
 
சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை தூக்க வேண்டாம். சனிபகவான் 9-ம் வீட்டை பார்ப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். தந்தையாருக்கு முதுகுத் தண்டில் வலி, மூச்சுப் பிடிப்பு வந்துப் போகும். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துப் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.     
 
வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடன் உதவிகள் கிடைக்கும். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைச்சுமை குறையும். பதவி உயர்விற்காக உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பெற்றோர் உங்களுடைய ஆசைகளை, எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். திருமணம் விரைந்து முடியும். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வெல்வீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
 
இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துகொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
 
பரிகாரம்:

திருஇந்துளூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபரிமளரங்கநாதரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் அல்லது திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் மலர் மாலை அணிவித்து வணங்குங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
துலாம்-சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

அல்லது செய்தவர்க்கும் நல்லதே செய்யும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களை வெடித்து சிதற வைத்தார். எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை நீங்கும்.

அழகு, இளமைக் கூடும். எப்போது பார்த்தாலும் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலையுடன், சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! வீட்டு விசேஷங்களில் கூட உங்களை அவமானப்படுத்தி உங்களை ஒதுக்கி வைத்தார்களே! அந்த தர்மசங்கடமான நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் எப்போதும் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியதே இனி மகிழ்ச்சிப் பொங்கும்.

வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். இனி அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள். என்றாலும் பாதச்சனியாக வருவதால் வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்திலும் அவ்வப்போது சலசலப்புகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது நிம்மதி குறையும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் திருதியாதிபதி-சஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 2-ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் முடியாவிட்டாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், தலைச்சுற்றல், அல்சர், வாயுக் கோளாறால் வயிற்று வலி, வீண் விரையம், விரக்தி, ஏமாற்றம் வந்துப் போகும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். சில நேரங்களில் தோற்றுவிடுவோமோ என்ற அவநம்பிக்கை வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் குடும்ப வருமானம் உயரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில்  சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் டென்ஷன், எதிலும் ஆர்வமின்மை, பழைய நண்பர்களுடன் பகைமை வந்து நீங்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பூர்வீக சொத்தில் மராமத்து பணிகள் செய்வீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். வெளிநாட்டில் அல்லது அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும். பணம் வரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் என்பதை கண்டறிவதில் தடுமாற்றம் வரும்.   
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.             
     
சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். 8-ம் வீட்டை பார்ப்பதால் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள், நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் செல்வம், செல்வாக்குக் கூடும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 
 
வியாபாரத்தில் மற்றவர்களின் பேச்சை கேட்டு அளவுக்கு அதிகமாக முதலீடுகள் செய்து நட்டப்பட்டீர்களே! இனி லாபம் வரும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் சிடுசிடுவென பேசும் பணியாளை நீக்கி விட்டு அன்பாக அரவணைப்பாக பேசும் வேலையாட்களை நியமானம் செய்வீர்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கண்ஸ்டக்ஷன், ஸ்டேஷனரி, ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உருவாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்றாலும் அவர்களுடன் அளவாகப் பழகுங்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
 
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். அன்பாக பேசிபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! இனி புத்தகத்தைத் தொட்டால் தூக்கம் வராது. மொழி அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டுகளில் நின்று செல்ல வேண்டாம். விளையாடும் போது கவனம் தேவை. சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.
 
பரிகாரம்:

திருப்புன்கூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவலோகநாதரை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
விருச்சிகம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நீங்கள், கொள்கை பிடிப்புடன் வாழ்பவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், தூக்கமின்மையையும் தந்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜன்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஒரளவு நல்லதையே செய்வார். எவ்வளவு தான் சிக்கனம் பிடித்து சேமிக்க நினைத்தாலும் அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே!

முதல் முயற்சியிலேயே எந்த ஒரு விஷயங்களையும் முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி இடம், பொருள் ஏவல் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். அவசர தேவைக்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகி அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக வருவதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும்.

ஆனால் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் அச்சம் வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையும் வந்துப் போகும். கவலைப்படாதீர்கள். சரியான நேரத்திற்கு மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் வேண்டாமே. சர்க்கரை நோய் எட்டிப் பார்க்கும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் பருமனாவதை தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் வரக்கூடும். விளம்பரங்களை பார்த்து ஏமாந்து சோப்பு, ஷாம்புவையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.

தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசி முடிவுகள் எடுக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.

அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் தன-பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே சனி செல்வதால் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். ஆனால் மனஇறுக்கம், வீண் பிரச்னை, குடும்பத்தில் நிம்மதியின்மை, சந்தேகம், ஏமாற்றம், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் வந்துப் போகும். காய்ச்சல், சளித் தொந்தரவு, மூச்சுத் திணறல் வரக்கூடும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு விரையச் சனியாக 12-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். தூக்கம் குறையும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் திடீர் பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.
 
உங்கள் திருதியாதிபதியும்-சுகாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்ற புதிதாக வீடு வாங்குவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தாயாருடனான மோதல்கள் விலகும். சகோதரங்களால் பலனடைவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், பிறமொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது விதிமுறைகளை மீற வேண்டாம்.
     
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சமூகத்தில் மதிக்கத் தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். என்றாலும் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். விசா கிடைக்கும்.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நெடுநாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். 
 
சனிபகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிக்க வேண்டி வரும். ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். தன்னம்பிக்கையும் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
 
வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள்.
 
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். மாணவ-மாணவிகளே! மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள்.
 
இந்த சனி மாற்றம் சற்றே ஆரோக்ய குறைவையும், எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்தாலும் ஒரளவு வருமானத்தையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதியிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
தனுசு - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

தாராள மனசுக் கொண்ட நீங்கள், பேச்சால் சாதிப்பதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு பணப்புழக்கத்தையும், அந்தஸ்தையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் நீங்கள் எதிலும் முன்எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.

ராசிக்கு 12-ல் சனி மறைவதால் உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். கூடாப்பழக்க வழக்கம் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடியும். ஆனால் செலவுகளை சுருக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று பெருமைக்காக கைக்காசை கரைக்காதீர்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம்.

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் இனந்தெரியாத கவலைகளையும், வீண் பயத்தையும் தந்தாரே! எந்த வேலைகளை தொட்டாலும் முழுமையாக முடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினரே! குடும்பத்திலும் சிறு வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! ஆனால் தற்சமயம் விரைய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளிடம் மறைந்துக் கிடக்கும் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள்.

ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வீடு மாற வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். சிலர் வாஸ்துபடி வீட்டை சரி செய்வீர்கள். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாகி முடியும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். என்றாலும் ஏழரைச் சனியின் தொடக்கமாகவும், விரையச் சனியாகவும் இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கப்பாருங்கள். உங்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களை மனைவி சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளபாருங்கள்.

எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடித் தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முடிந்த வரை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் ராசிநாதன்-சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் விருச்சிக ராசி 12-ம் வீட்டில் சனி செல்வதால் அழகு, ஆரோக்யம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணவரவு உண்டு. அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.
 
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பொருள் இழப்பு, வீண் டென்ஷன், முன்கோபம், தோலில் நமைச்சல், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். 
 
சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு என்றாலும் பற்றாக்குறையும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கு நிலவும். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். கண் பார்வைக் கோளாறு, காது வலி, மூக்கு வலி வந்துப் போகும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், இரத்த அழுத்தம், படபடப்பு வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
 
வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. கடைக்கு வரும் அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, போடிங், லாஜிங், வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சனை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். என்றாலும் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சம்பளம் உயரும். சலுகைகளும் உண்டு. சக ஊழியர்கள் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வர்.
 
கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்வியை முழுமையாக முடிக்கப்பாருங்கள். காதல் கசந்து இனிக்கும். பிறமொழிக்காரர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். பின்வரிசையில் அமராதீர்கள்.
இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், கொஞ்சம் அலைச்சலையும் தந்தாலும், வருங்கால முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
 
பரிகாரம்:

சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள்.

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
மகரம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

மந்திரியானாலும் மனதில் பட்டதை பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்ததுடன், உத்தியோகத்திலும் நெருக்கடிகளை தந்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

நீங்கள் எவ்வளவு தான் விழுந்து விழுந்து உழைத்தாலும் பெயரும், புகழும் மற்றொருவருக்குப் போனதே! பணம் வந்தாலுமே பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானதே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! இப்படிப்பட்ட தொல்லைகளெல்லாம் இனி நீங்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனிமேல் உங்களின் ஆலோசனையின்றி ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். எப்போதும் சோர்வு, சலிப்புடன் காணப்பட்ட நீங்கள் இனி உற்சாகமாக செயல்படத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். சிலர் பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள்.

மகளுக்கு உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அவசரத்திற்கு அக்கம்-பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்த முடிப்பீர்கள். மனைவிவழியில் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சமூகத்தில் மதிக்கத்தகுந்த வகையில் கௌரவப் பதவி வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 11-ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். என்றாலும் சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.
 
உங்கள் ராசிநாதன் சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் நீண்ட ஆசைகள் நிறைவேறும். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் வீண் டென்ஷன், விரையம், மந்தம், மறதி, மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும். ஆனால் உங்கள் வளர்ச்சி தடைபடாது. முயற்சிகள் வெற்றியடையும்.

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் சஷ்டம-பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்து கைக்கு வரும். 
   
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் நண்பர்கள், உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும்.
 
சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் இன்பெக்ஷன், செரிமானக் கோளாறு, ஒருவித படபடப்பு, பதட்டம் வந்து நீங்கும். தன்னம்பிக்கை குறையும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.   
       
புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது பொறுப்புகளை மூத்த அதிகாரிகள் உங்களை ஒப்படைப்பார்கள். இழந்த சலுகைகளையும், மதிப்பு மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும். உங்களை உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார்.
 
கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக்கேற்றபடி நல்ல கணவர் அமைவார். முகப்பரு,தோலில் நமைச்சல் நீங்கும். தடைபட்ட கல்வியில் வெற்றியுண்டு. கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். மாணவ-மாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறும். ஏனோ தானோ என்று படிக்காமால் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு,பாராட்டு உண்டு.
 
இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.
 
பரிகாரம்:

விருத்தாசலம் ஸ்ரீஆழத்து விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கண் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
கும்பம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

குனியக் குனியக் குட்டினாலும் கோபப்படாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப்போராட்டங்கள் ஓயும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

உங்களுடைய ஆலோசனைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்னை, வீண் சந்தேங்களெல்லாம் விலகும். இருவரும் மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் தனாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 10-ம் வீட்டில் சனி செல்வதால் சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். தந்தையாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும் வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பிரிவுகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
உங்கள் ராசியாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவீர்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். புது வேலைக் கிடைக்கும்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் சொத்துப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. மனைவி வழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள்.

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் அஷ்டம-பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் கூடாபழக்கங்களிலிருந்து விடுபடுவார். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், முன்கோபம், எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 
 
சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனஸ்தாபதம் வந்து நீங்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவிக்கு அடிவயிற்றில் வலி, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப செலவுகள் அதிகமாகும். சில நாளில் தூக்கம் குறையும். 
     
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை உயர்த்துவீர்கள். போட்டியாளர்கள் திகைக்கும் அளவிற்கு சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வராமலிருந்த பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
 
10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் வதந்திகளும், வீண் பழியும் வரக்கூடும். திடீர் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும்.
கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த சனி மாற்றம் குடத்தில் விழுந்த விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.
 
பரிகாரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை எள் தீபமேற்றி வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
மீனம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

ஏமாற்றங்களைக் கண்டு அஞ்சாத நீங்கள், நேர்மறைச் சிந்தனை அதிகம் உள்ளவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரண காரியமே இல்லாமல் பிரச்சனைகளில் சிக்க வைத்து, வாழ்க்கை மீதே ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இருளில் இருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எப்போதும் கோபப்பட்டு கொண்டேயிருந்தீர்களே! இனி சாந்தமாவீர்கள்.

தொட்டதுக் கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் தான் மிஞ்சியதே. அவையெல்லாம் இனி விலகும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துக்  காட்டுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ என்றெல்லாம் குழம்பினீர்களே! இனி தெளிவுப் பிறக்கும். பல நாட்கள் தூக்கமின்றி அவஸ்தைப்பட்டீர்களே! இனி நிம்மதியாக உறக்கம் வரும்.

உங்களை விட வயத்தில் குறைவானவர்கள், தகுதியில் குறைந்தவர்களிடமெல்லாம் கூனிக் குறுகி அவமானப்பட்டு நின்றீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும். இனி தன்னம்பிக்கையுடன் தலை நிமருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களையெல்லாம் மீட்பீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.  பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த பணத்தை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.

ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே! இப்போது நிறைவேறும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 9-ம் வீட்டில் சனி செல்வதால் பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக 8-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள், எதிலும் பிடிப்பற்றப் போக்கு வந்துச் செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தன்னிச்சையாக செயல்பட தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்-. 
உங்கள் லாபாதிபதியும்-விரையாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள், பிறமொழிக்காரர்களால் ஆதாயமடைவீர்கள். அவ்வப்போது வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும்.

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வாகன வசதிப் பெருகும். தாய் சொத்து கைக்கு வரும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.   
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கள் வந்துப் போகும்.
 
சனிபகவான் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் இருக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
 
வியாபாரத்தில் பழைய பிரச்சனைகளை தீர்க்க புது வழி கிடைக்கும். முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது யுக்திகளை கையாளுவீர்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி அழகு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் அலட்சியப் போக்கு மாறும். வேலைச்சுமை குறையும். தொல்லை தந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.
 
கன்னிப்பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள். பசியின்மை, தூக்கமின்மை, முகப்பரு நீங்கும். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்கள் உணர்வுகளை மதிப்பார்கள். புது வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். 
இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாகவும் அமையும்.
 
பரிகாரம்:

திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள். பழுதடைந்த பள்ளியைப் புதுப்பிக்க உதவுங்கள்.