ஏகாந்த இரவின் அமைதியில் ஒரு பேதையின் பிதற்றல்கள்
இரவின் தனிமையில் கண்ணாடி முன் நின்று , என்னை பார்க்கிறேன் ....
என் கண்களுக்கு என் பிம்பம் அழகியாய் தெரிந்தாள் ....
என்னுள் பேசுகிறேன் ...
அனைவர் கண்களுக்கு அழகியாய் தெரிந்த நான் ....
உன் விழிகளுக்கு மட்டும்,...அகோரமாய் தெரிந்ததேன் ?
என் மகிழ்ச்சியின் எதிரொலியாய் புன்னகைகள் ..
உனக்கு மட்டும் தவறாய் பார்க்க தெரிந்ததேன் ?
அனைவருக்கும் ஒலித்த என் குரலின் இனிமை
உனக்கு மட்டும் விஷமாய் கசந்ததேன் ?
உன்னுடன் ஒரு வார்த்தை யேனும் பேச வேண்டும் என்று ...
நான் ,உன்னுடன் போட்ட பொய் சண்டைகள் .....
உன்னால் புரிந்து கொள்ள முடியாமல், ..........
என்னை எதிரியாய் பார்க்க தூண்டியதேன் ?
உன் அன்புக்காய் ஏங்கிய என் இதயம்
ஒரு நண்பியாய் கூட என்னை நினைக்க , .........
உன் இதயம் இடம்தர மறுத்தது ஏன் ?
அறியாமல் நான் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கும் ...
தாய்மை உணர்வு அற்றவனாய் நீ............
ஆண்டாண்டுகள் கடந்து ..நான்காண்டுகள் ஆன பின்பும் .....
கரையவில்லை'' கல்லாய் உன்மனம் ...........
ஆம் '' கல்லை நீரில் கரைப்பார் யாருமில்லை....
அசத்திய உண்மைகள் ...அறைந்தன என் மனதை ...
அன்பின் இனிமையை ,மனித நேயத்தை உணராத மனதில்
அன்பை தேடுவதில் பயனில்லை ........
நிதர்சனமான உண்மைகள் பாறையாய் அழுத்தின என் மனதை .....
கண்ணாடியில் என் முகத்தை மீண்டும் பார்க்கிறேன் ..
நம்பிக்கை,புரிந்துணர்வு, மதிப்பு ,ஆளுமை, நேர்மை ...
என்னும் அத்தனை அம்சங்களுடனும் ...
பேரழகியாய் ' நான் என் கண்களுக்கு ......
நம்பிக்கையையும் ,மனதில் வேதனையையும் சுமந்தபடி
என் கால்கள் நடை போடுகின்றன ...
எனக்காக காத்து கிடக்கும் ....
அழகிய விடியலை நோக்கி