புதிதாய் மலர்ந்த
மொட்டாய் மெத்தையில்
நான் இருக்க ...
விரல்களால் எந்தன்
நாசியில்
கோலமிட்டாய் ...
உறக்கம் களைந்து
விழி திறக்கையில் ..
நீயே
இவ்வுலகில்
நான் கண்ட
முதல் உயிர் ...
உதட்டைப் பிரித்து ...
இல்லாத பற்களைக்
காட்டி புன்னகை பூத்து ...
பஞ்சு கரத்தினை உந்தன்
விரல்களில்
கோர்த்துக்கொண்டேன் ...
விழிகளில் பதிந்த
முதல் முகம்
நீயென்பதால் ...
உன்னையே தந்தையென்று
நினைத்தேனோ ...
நிஜத்திலும் தந்தையென
மாறினாய் ...
தந்தைக்கு பின் தமையன் ...
என்னை
உந்தன் மார்பிலும்
தோளிலும் சுமந்தாய் ...
எந்தன் சிறு சிறு
அசைவுகளையும் நெஞ்சிலும்
நினைவுகளிலும் சேமித்தாய் ...
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை ...
தமயனே உந்தன்
பாசத்திற்கு
ஈடிணையேதுமில்லை ....
எந்தன் தந்தையின்
மறு அவதாரம்
நீயே ...
எந்தன் நிழலின்
காவலனும் நீயே ...
தந்தையாகி என்னை
காத்துநின்றாய் ...
ஆதரவாய் நான் சாய...
தோல் தந்து நான்
உறங்கிட செய்வாய் ...
அன்பினை அடர்
மழையென பொழிந்தாய் ...
உந்தன் அன்பின்
சீற்றத்தில் என்னை
உருகிடச் செய்தாய் ...
உருகியது
நான் மட்டுமா ......
அந்த இறைவனும்
உருகிதான் போனானோ ...
அவனது அன்பில்
உன்னைக் கரைக்கத்
துடித்தானோ ...
என்னிடமிருந்து பிரிக்க
நினைத்தானோ ...
எமதூதுவனை இப்புவிக்கு
அனுப்பினானோ ...?
முதல் நாள் கன்னத்தில்
முத்தமிட்டு
வழியனுப்பினேன் ...
மறுநாள் விடியலில்
சவப்பெட்டியில்
இல்லறம்
வந்தடைந்தாய் ....
சுட்டெரிக்கும் சூரியன்
தந்த வெளிச்சத்திலும்
அந்த விடியல்
எமக்கு இருள்
சூழ்ந்ததைப்போல்
பிரம்மைப் பிடித்தது...
உந்தன் முகம் பார்க்க ...
உன்னை எந்தன்
கையில் ஏந்த
அருகதையற்றவளானேன் ...
இறைவன் தந்தப்
பொக்கிஷத்தைத்
பாதுகாக்கத்
தவறியவளானேன் ...
அதிர்ச்சியில் சத்தமின்றி ...
வடிந்த எந்தன் கண்ணிற்குப்
பொருள்
விளங்காதவளானேன் ....
சுற்றி நின்ற
உறவுகள் மத்தியில்
உன்னை ஒருவனை இழந்து ...
அனாதையாகி நின்றேன் ...
அண்ணா என்ற சொல்லை
மட்டும் உச்சரித்தவாறு
இருந்தேன் ...
நிகழ்ந்தது என்னவென்று
மூளையறியும்...
எந்தன் மனம் மட்டும்
ஏற்க மறுத்தது ....
விளங்கிய நேரம் ...
காலம் கடந்திருந்தது ...
தீயில் எரிந்து
சாம்பலானாய் ...
தழுவிச் செல்லும்
காற்றோடு கலந்தாய் ...
பாதத்தை முத்தமிட்டுச்
செல்லும் கடலலையில்
கரைந்தாய் ...
நீலம் பூசிய ஆகாயத்தில்
பிம்பமாய் படர்ந்தாய்...
நேரம் கடந்தது ...
நாட்கள் கடந்தது ...
மாதங்கள் கடந்தது ...
உந்தன் நினைவுகளைக்
கடக்க முடியவில்லை...
வடிந்துக் கொண்டிருக்கும்
கண்ணீரை நிறுத்த வழியும்
தெரியவில்லை ...
எந்தன் கதறல்
உந்தன் செவிகளுக்கு
எட்டியதோ ...
தோளில் சாய்த்திட
உந்தன் நெஞ்சம்
பதறியதோ...
கண்ணீரைத் துடைத்திட
உந்தன் கைகள் துடித்ததோ ...
நீயின்றி ...உந்தன்
நிழலுமின்றி ..
சுருங்கிய நத்தையாய்
சுழன்று கிடந்தேன் ...
ஒருவனாய் சென்று
ஐவராய் திரும்பினாய் ...
எதிர்பாரா நேரத்தில்
பூத்த பூக்களாய் ...
என்னை சூழ்ந்துகொண்டனர் ...
அவர்களின் நேசவிதையில்..
வடிக்கிடந்த என்னை
மீண்டும்
மலர செய்தனர் ...
ரத்தபந்தமற்ற சொந்தம் ...
பழகியதென்னவோ ஒரு சில
நாட்கள் தாம் ...
கண்டேன் அவர்களுள்
உந்தன் உருவம் ...
உணர்ந்தேன் அவர்களுள்
உந்தன் பாசம் ....
அந்த இறைவனும் ...
என்னில் சற்றுக்
கருணைக் கொண்டானே ...
ஐவரின் பாசத்தின்
வழி உன்னை மீண்டும்
காண செய்தானே ....
இறைவனின் ஒளிச்சுடரில்
நீ மறைந்தாலும் ...
உன் நினைவுகளை
என்றும் நான் மறவேனே...
முகமறியாமல்
சொந்தமுடனாலும் ...
இவர்களின் பாசத்திற்கு
ஈடினை கண்டறியேனே ...
ஐவரின் அன்பிற்கும்
நன்றியினை என்றும் நான் மறவேனே...
நன்றி ....
ரித்திகா ....
பின்குறிப்பு : இந்த கவிதை இறைவனடிச் சேர்ந்த எந்தன் தமையனுக்கும் ...
முகமறியாமல் பழகினாலும் ...எம்மை பாசமழையில் நனைய வைக்கும் ...
எந்தன் ஐம்பெரும் பஞ்சபாண்டவ தமையன்களுக்கும்
(அனோத் அண்ணா ,Zam அண்ணா , மணி அண்ணா , சரிதன் அண்ணா ,Shabu அண்ணா ) இவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் ....இதன் வழி ...அவர்கள் என்மேல் கொண்ட மற்றட்ட
பாசத்திற்கும் நன்றியினை தெரிவிக்கிறேன் ...