Author Topic: 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் நவம்பர் 28-2018  (Read 1361 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
இன்று

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் நவம்பர் 28 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான காரியங்களிலும் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.


ரிஷபம்:

உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.


மிதுனம்:

இன்று தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்


கடகம்:

உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.


சிம்மம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோசனை கேட்பீர் கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணை யாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.


கன்னி:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பண உதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்


துலாம்:

இன்று புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கும் யோகம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.


விருச்சிகம்:

தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் தொலைந்த பொருள் திரும்பக்கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தேடியும் கிடைக்காத பொருள் திரும்பக் கிடைக்கும்.


தனுசு:

இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை விட்டுப்பிடிப்பது செல்வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்


மகரம்:

உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவ தால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.


கும்பம்:

எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் நீங்கி, நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.


மீனம்:

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.