ஒரு இரயில் பயணம்
----------------------------
தொடர் வண்டியில்
படார் சத்தங்கள் இன்னும்
தீர்ந்தபாடில்லை - மின்
கம்பியை உரசிச்செல்வதால்
புகையை தின்று நம்மை
பகைத்திருக்கிறது....
*
கை வண்டியும் கஷுவண்டியும்
கேரள இரயில் நிறுத்தங்களில்
இப்போதும் இருக்கின்றன - இதயத்தை
விட்டு விலக மறுக்கும்
முதல் காதல் போல்
போர்டர்களின் கைகளை விட்டு
அகல மறுக்கிறது சிவப்பும் கை கை வண்டியும்....
*
கண்ணாடி விலகி
காகித டம்ளர்களானபோது
இரயில் வண்டிக்குள்
காஃபி கம்மியாகி விலை
வளர்ந்துபோயிருக்கிறது....
*
இப்போதெல்லாம்
பக்கத்து இருக்கைகள்
பேசுவதே இல்லை - செல் ஃபோண்
பக்கங்களை தேய்த்து தேய்த்து
சாங்கேதிக யுத்தம் நடத்துகின்றன
வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும்....
*
பிணங்களோடு பயணிப்பதுபோல்
ஒரு நிசப்தத்தின் மொழியும்
தனியே சிரித்துக்கொண்டு
திடீர் நிமிர்தலில் அகலக்கண் விரித்து
பீதி கொள்ளும் பார்வைகளில்
சந்தேகத்தின் முகங்களாகிப்போகிறது
சந்தோஷமான பயணங்கள்கூட....
*
கைபேசியின் உயிர்
ஊசலாடும்போதுகூட
என் பெயர் கேட்டு
மதமென்னவன்றறிந்து
சார்ஜர் கேட்கிறது
முன்னிருக்கை...
*
இரயில் நிறுத்தங்களில்
இதயம் நனைக்கும்
கண்ணீருக்குப் பஞ்சமில்லை - தொண்டை
நனைக்கும் தண்ணீருக்கு
மட்டுமே பஞ்சம்....
*
ஆணோ பெண்ணோ
ஏதோ ஒரு முகம் என்னைப்பார்த்து
சிரிக்கவேண்டும் என்று
என் மனம் ஆசைப்படுகிறது
பயணத்தினூடே சிலபல காரணங்களேதுமின்றி....
*
எல்லா நிறுத்தங்களிலும்
ஒலி பெருக்கிகள் இன்றும்
கரகரத்து அடங்குவது
புரிபடாத அதே மொழிகளோடும்
மறந்துபோகாத வசனங்களோடும்...
*
காடுகளை மட்டுமே
அதிகமாய் சுற்றுகிறது
இரயில் பெட்டிகள் -மனிதர்களை
வைத்துக்கொண்டு ஊழையிடும்
சத்தத்தில் வெளிப்படுவது
ஆயிரமாயிரம் அலங்காரமும் அழுகையும்தான்...
*
எழுதத்தோன்றுகிறது
வார்த்தைகள் பிரழ்கிறது - வாசிக்க
தூண்டும்போது கண்கள்
தூங்கநினைக்கிறது...
*
ஒரு இரயில் பயணம்
ஒராயிரம் இலக்குகளை
சுமந்து செல்கிறது - ஒராயிரம்
இலக்குகளில்....