ஒன்றாய் தான் உருவானோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
தாயின் கருவறையில்
ஒன்றுபோல் பாசம் காட்டினாள் தாய்
இரு மடங்கு உண்பாள் நமக்காக
இரவு பகல் தொலைத்தாள் நமக்காக
இருந்தும் இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்
ஒரு பிள்ளை இல்லை என ஏங்குவோர் பலர்
இருக்க தனக்கு இரு பிள்ளை பிறக்க போவதை
எண்ணி இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்
பிரசவம் நெருங்கும் நேரம் மருத்துவர்
நுட்பமாய்ச் சோதித்து பார்த்ததில் ஒருவருக்கு ஊனம்
என தெரிந்தது
உன்னிடம் சொன்னால் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாகலாம்
என மறைத்தனர் தந்தை உட்பட
எங்களுக்கு என்ன கவலை வெளியுலகம் காண
ஆவல் கொண்டு எட்டி உதைத்தோம் உன் வயிறில்
மருத்துவமனை அறுவை சிகிச்சை வாசல் வரை
தந்தை பின் உனக்கு துணை நாங்கள் மட்டும்
வலியின் உச்சம் தந்து, மரணத்தின் வாசல் தொட்டு பிறந்தோம்
சில நிமிட இடைவேளையில் பிறந்ததால் அண்ணன் தம்பி ஆனோம்
நாங்கள்
கண் திறந்து எங்களை பார்த்தாய் உன் கண்களின் ஆனந்தம்
குறையவில்லை
இதுவரை என் குறை நீ கண்டதில்லை
இதுவரை இரு வேறு முகம் காட்டியதில்லை
இதுவரை உன் அன்பு குறையவில்லை
இதுவரை என்னை வீழ அனுமதித்ததில்லை
இதுவரை எனக்கு நல்வழி காட்ட தவறியதில்லை
புரியாத புதிர்தான் நீ அம்மா
ஊனம் உடலிலோ கண்களிலோ அல்ல மனதில் என
உணர்த்தி கொண்டே இருக்கிறாய் உலகிற்கு
உன் அன்பிற்கு முன்னால் ஊனம் கூட பலவீனம் ஆகிடும் அம்மா,
எப்பிறவியிலும் வேண்டும் நீயே என் அம்மா !!
*****ஜோக்கர்****