Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139  (Read 2944 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 139
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:52:45 AM by MysteRy »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
மனிதா மரங்கள் சொல்கிறது
நான் இன்றி நீ இல்லை.....
உன் சுவாசத்தின் ஆதாரம் நான் என்று.....


நீலமே நிலமதாயான வானமே.....
நிலவின் வீதியே வானவெளியே..... 
வண்ணக் கோலமே.....


சாம்பல் நிற படலமே.....
வந்து கலையும்
வானவெளியின் மாயமே.....


நீல வண்ணமே.....
சாம்பல் உன் தோழியா..... இல்லை காதலியா.....
நாழிகைகள் பிரிவதில்லை எப்போதும்.....
கொஞ்சுவதும் பிணைந்து கலப்பதும்
அன்பின் வெளிப்பாடோ.....
மனிதகுலம் கற்றிட வேண்டுமோ உன்னிடத்தில்.....

வான வெளியில் வளைந்து தோன்றும்
ஏழுவர்ண வளைவே
உன் பெயர்தான் வானவில்லோ
எங்கிருந்து வருகிறாய்
வந்தபின் எங்கே போகிறாய்


வந்து மறையும் நீயே மறுபடி வருவாயா
இல்லை ஒருமுறைதான் உன் வாழ்வா?
ஐயோ ஆயுள் அற்பமா உனக்கு.....


ஒற்றையாய் ஒருமரம் மொட்டையாய்
ஏங்கிப் பட்டுப்போய் பாழாகி நிற்குதே.....
மழை செய்த வஞ்சனையா..... இல்லை
மானுடன் செய்த கொலையது.....


மழைசெய் துரோகமென்றால் சுற்றியெங்கும்
பச்சையேது..... உயிருடன் மரங்களேது.....

கதிர் முற்றி அறுவடையான பயிரின் தண்டுகள்
உண்டே வயலில் மஞ்சளாய்.....
அப்படியானால் மரத்தை கொன்றது மனிதந்தான்
வறட்சியல்ல.....


மனிதா மரங்கள் சொல்கிறது
நான் இன்றி நீ இல்லை.....
உன் சுவாசத்தின் ஆதாரம் நான் என்று.....


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline thamilan

வானவீதியில்  ஒரு மேம்பாலம்
வானவில்
யார் நடப்பதற்கு??......
வர்ணங்களின் வண்ணஜாலம்
வானவில்
ராமன் வளைத்திட்ட வில்லைபோலவே
இறைவன் வளைத்திட்ட வில்லோ
வானவில்

வானவில்
இயற்றுகை வரைந்திட்ட வர்ண ஓவியம் 
வானவில் தோன்றும் போது
வானம் அழகாகிறது
ரசனை கூடும் போது
வாழ்க்கை அழகாகிறது

வாழ்க்கையும் வானவில் போலே
வந்து கலைந்திடும் ஒரு
வண்ண ஓவியம்
வாழ்க்கையும் வானவில்லும்  சொல்கின்றன
போகும் போதே ரசித்துக் கொண்டே போ 
திரும்பி வரமாட்டேன் உனக்காக .....

வானம் அவள்
மழையால் நீர் தெளித்து
வரைந்திட்ட அழகுக்கு கோலம்
வானவில்

வான் மீது கொண்ட காதலை
வர்ண ஓவியமாய்  வரைந்து காட்டிடும்
காதல் மங்கை வானவில்

என் கடந்த கால காதல்களும்
வந்து போகின்றன சில நேரம்
வண்ண வயமாய் வானவில் போலே


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...

கார்முகிலும் வெண் முகிலும் கொண்ட
காதலெனும் பார்வையிலே
இந்த வான்வெளியில் தோன்றினாய் நீ
வானவில் எனும் அழகிய பேரினிலே

எங்கு தொடங்கி எங்கு முடிகிறாய் என்று
தேடித்தான் பார்க்கின்றேன்
என் தேடலோ ஏக்கத்தில் முடிந்திடவே
தோற்றுத்தான் போகின்றேன்

மாரி மழைக்கா கோடை வெயிலுக்கா
நீ என்றும் சொந்தம்
இரு காலங்களின் ஆசையினாலே
தொடங்கியதே உந்தன் பந்தம்

பகலவனின் பார்வையிலே தஞ்சம் கொண்டாய்
அவன் வர்ணங்கள் ஏழு கொண்டு
எம் நெஞ்சம் வென்றாய்

ஆசைகள் தான் முடிந்திடவே மாறிடுதே காலம்
ஆனால் அழியாதே மனதில் என்றும்
நீ கொண்ட வண்ணக்கோலம்
« Last Edit: March 20, 2017, 02:19:14 PM by VipurThi »

Offline ChuMMa

யார் வரைந்ததோ இந்த அழகான
 ஓவியம் வானில் ..?!!
என் பிரமிப்பு நீங்க நெடும் நேரம் ஆனது
ஒரு நாள் பால்ய வயதில் அதிசயமாய்
வானில் கண்ட வானவில் ....

ஏழு வண்ணம் எப்படி கிடைத்தது தேவர்கள்
கையில் வானில் வானவில் வரைந்திட....

தேவர்கள் நடக்கும் பாதை அது என
என் வீட்டு  பாட்டி சொல்ல வாய் பிளந்து கேட்டிருக்கிறேன்

வாலிப வயதில் யோசிக்கையில் அது
யார் யாருக்கோ அனுப்பிய காதல் மடல்
என தோன்றியது ....

காதல் நிராகரிக்கையில் மறைந்திடும் போலும் !?

இல்லை அது வான மங்கையர்
இட்ட வண்ண கோலமோ ?!


விஞ்ஞானம்  நீ தோன்ற பல காரணம்
சொன்னாலும் இன்றும் என்றும்
உன்னை அதிசயமாய் தான் காண்கிறேன் ...

------------சும்மா -----

« Last Edit: March 22, 2017, 04:00:12 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SweeTie

மழை  வந்துபோக  அவள் வந்தாள்
வண்ண பட்டாடையில் வரிவரியாய்  வர்ணம்
ரவிவர்மன்  வரைந்த ஓவியம் போல் அவள் அங்கம்
இத்தனை  அழகையும்  ஒருங்கே படைத்தானா?
அற்புதம் கண்டு  பிரமித்துப் போனேன்!.   
 
மயிலின்  கழுத்தில் குடிகொண்ட   நீல வர்ணம் 
அவள் காதோரம் நீண்ட  நயனங்களின் கோலம்   
மழை முத்துக்கள்  சிந்தியதால்  சிறு கண்மடல்கள்
மூடித்   திறந்தன மின்மினிப்  பூச்சிகளாய்.

இச்சை மூட்டும்   பச்சை பசும் புல்  என்பேனா?
காற்றில் அசையும் இளம் குருத்து   என்பேனா ?
நெஞ்சில் குடிகொண்டாள் வஞ்சியவள் 
கெஞ்சலும்  கொஞ்சலும் வழக்கென்றாள்

கோவை  பழத்தை   உண்டு   வாய் சிவந்தாளோ ?   
கொஞ்சிப்  பேசியே  கொலையும் செய்தாளோ?
ரோஜாவின் செவ்விதழ்களை   வென்றவளோ ?
முட் குத்தியதால் இதழ்   செவ்விதழானதுவோ?     

மஞ்சள் வெயிலில்  தங்கமுலாம்   பதித்தவளோ ?
தக தகவென  ஜொலிக்கும் தேவியிவள்  யாரோ ?
சந்தனக்  கலவையிலே நீராடி வந்தவளோ ?
வெந்தளிர் நெருப்பிலே பிறந்து வந்தவளோ ? 

செருக்குடையாள்   செம்மஞ்சள் நிறத்துடையாள் 
மாலை கதிரவனில்  மையல் கொண்டாள்
சோலைக்குயிலெனவே  கானமிசைத்திட்டாள்
சுந்தரனும் மதி மயங்கி மோகத்தில் மிதந்திட்டான்


ஒற்றைச் சடையில்  ஒருக்கணித்து   ஊதாப்பூ
கற்றைக் குழலி  கவர்ந்தாள்  என் இதயமதை
சற்றே நிமிர்ந்து  தலை  சுற்றிப்  பார்த்தேன்     
இயற்கையின் படைப்பில்  வானவில் எத்தனை அழகு.. 

« Last Edit: March 21, 2017, 06:47:52 PM by SweeTie »

Offline இணையத்தமிழன்


ஆதவனின் அழகினிலே
காதல்கொண்ட வான்மகளோ
எட்டிப்பிடிக்க ஆசைப்பட்டு
ஏங்கி தவித்திடவே
எதிராய்த்தான் இருந்தாலும்
ஏமாற்றமே என்றுமுண்டு   

கார்மேகம் சூழ்ந்தாலும்
கண்ணைப்பறிக்கும் கதிரவனோ
வானந்தனின் கண்ணீராய்
மழைத்துளிகள் பொழிந்தாலும்
கைகூடா காதலிலும்
கண்துடைக்க கதிரவன்தான்
தீட்டிய வண்ணஓவியமே
காற்றிலும் மழையிலும்
கரைந்திடாத கலைந்திடாத
கைப்படாத  ஓவியமே

வானில்பூத்த வண்ணமலர்களே
தொடுவானில் துவங்கிதான்
நடுவானையும் தொட்டிடுமே
வான்மகளின் வர்ணஜாலமே

கதிரவனின் எதிர்திசையில்
கவின்காட்சி தந்திடும்
ஏழுவண்ண வானவில்லே
 
இயற்கைதனின் ஓவியமே
காண்போரின் கண்பறிக்கும்
இயற்கைதனின் காவியமே 

                                     -இணையத்தமிழன்
                                        ( மணிகண்டன் )
« Last Edit: March 21, 2017, 08:58:10 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SwarNa


எனக்காய் விண்ணை வில்லாய் வளைப்பேன்
என்ற என்னவன் வளைத்தான்  வானவில்லை
வளைந்தது விலலே அன்றி நானோ நாணாகவே
அவன் கரங்களில்
அவனுடன் அவனியில் ஒன்றாகிட

வான்மகளின் அங்கமதில்
செங்கதிரோனின் தூரிகைத்
தீற்றல்கள் நினைவூட்டியது
மங்கையவள் வதனமும் சிவந்திட்ட
அதரமும் தான் என்றான்

நிலமகளாம்  இக்குலமகளின்  அழகை
எழு வர்ணம் காட்டி சிணுங்களாய் மழைநீரில்
நர்த்தனமாடி  முத்துக்களை முகத்தில் 
சுமந்தே வருகையில் ஏனோ
தத்தையின் தாக்கம் தாக்கிற்றே
என்றான்  ஏக்கமாய் அவனுள்

மேகத்தில் தூளியும் சங்கில் தாலியும்
சுற்றம் நட்பு சூழ
அக்னிசாட்சியாய் இல்லையில்லை
வானவில் சாட்சியாக
இருவரும் இரு கரம் பற்றியே
வாழும் காலம்வரை வாழ்ந்திட ஆசை <3 <3 <3
« Last Edit: March 24, 2017, 07:34:20 PM by SwarNa »

Offline சக்திராகவா

ஆசையாய் அண்ணார்ந்தபோது
ஆகாயமாளிகையில் அழகழகாய்
அடிவளைந்த நிறப்பிரிகை
நீண்டதொரு வானவில்லாய்


நிறங்கள் படித்தேன் நீ வந்தபோது
நிறையவே சந்தேகம் உனைக்கண்டபின்பு
வண்ணத்துப்பூச்சி உன் வாடகை வீடோ
பறவைகள் யாவும் உன் பக்கத்து தெருவோ

மயில்தோகை நீ குடியேறும் மழைக்கால உறவோ
மலைத்தொடர்கள் நீ தீண்ட நிறம் நீராடுமோ?
கடலுக்கும் கவலையில்லை உன்காலடியிலே
காருக்கும் கவலையில்லை நீ அதன் மடியிலே

மலர்களும் கூட நீ தந்த நிறம் பூசி ஆடிட
நீ மட்டும் ஏன் வந்ததும் போகிறாய்?
வண்ணமில்லாத என் என்னதைக்கூட
உன் ஏழிலே ஏதொ தந்து மாற்றிடகூடதா?

சக்தி ராகவா


« Last Edit: March 23, 2017, 11:46:24 PM by சக்திராகவா »