மனிதா மரங்கள் சொல்கிறது
நான் இன்றி நீ இல்லை.....
உன் சுவாசத்தின் ஆதாரம் நான் என்று.....
நீலமே நிலமதாயான வானமே.....
நிலவின் வீதியே வானவெளியே.....
வண்ணக் கோலமே.....
சாம்பல் நிற படலமே.....
வந்து கலையும்
வானவெளியின் மாயமே.....
நீல வண்ணமே.....
சாம்பல் உன் தோழியா..... இல்லை காதலியா.....
நாழிகைகள் பிரிவதில்லை எப்போதும்.....
கொஞ்சுவதும் பிணைந்து கலப்பதும்
அன்பின் வெளிப்பாடோ.....
மனிதகுலம் கற்றிட வேண்டுமோ உன்னிடத்தில்.....
வான வெளியில் வளைந்து தோன்றும்
ஏழுவர்ண வளைவே
உன் பெயர்தான் வானவில்லோ
எங்கிருந்து வருகிறாய்
வந்தபின் எங்கே போகிறாய்
வந்து மறையும் நீயே மறுபடி வருவாயா
இல்லை ஒருமுறைதான் உன் வாழ்வா?
ஐயோ ஆயுள் அற்பமா உனக்கு.....
ஒற்றையாய் ஒருமரம் மொட்டையாய்
ஏங்கிப் பட்டுப்போய் பாழாகி நிற்குதே.....
மழை செய்த வஞ்சனையா..... இல்லை
மானுடன் செய்த கொலையது.....
மழைசெய் துரோகமென்றால் சுற்றியெங்கும்
பச்சையேது..... உயிருடன் மரங்களேது.....
கதிர் முற்றி அறுவடையான பயிரின் தண்டுகள்
உண்டே வயலில் மஞ்சளாய்.....
அப்படியானால் மரத்தை கொன்றது மனிதந்தான்
வறட்சியல்ல.....
மனிதா மரங்கள் சொல்கிறது
நான் இன்றி நீ இல்லை.....
உன் சுவாசத்தின் ஆதாரம் நான் என்று.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே