உன்னை நினைத்து
நான் எழுதும் வரிகள் சில வேளை
கிறுக்கல்கள் ஆகிவிடுகின்றன
உன்னை நினைத்து நினைத்து ஆன
என்னைப்போல
என் வரிகளை
கவிதைகள் என்பாயோ
பிதற்றல் என்பாயோ
குப்பை என்பாயோ
என்னை
மன்னவன் என்பாயோ
உன்னவன் என்பாயோ
முட்டாள் என்பாயோ
இல்லை
வேறெதுவாகிலும் சொல்வாயோ
எதுவாகினும்
சொல்லிப் போ
கூடவே
என்னைக் காதலிக்கிறேன்
என்றும்!!!!!!