உன்னை காதல் செய்வதால் நானும் ஒரு பித்தனே
தினம் உன்னை நினைத்து எனக்குள் நானே சிரிக்கிறேன்
நீ என் முன்னே வந்தால் மூச்சும் மௌனம் ஆகிவிடுகிறது
பேச முயன்றாலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை
உன் கண்கள் மெல்ல மெல்ல மூடி திறக்கும் போழுது
என் மனம் மெல்ல மெல்ல ஊஞ்சல் ஆடுகிறது
உன் வாய் பேசும் வார்த்தைகளை உன் கண் பேசுகிறது
உன் காதில் ஆடும் கம்மல்களையும் வண்ண கூந்தலையும்
என் கண்கள் ரசிக்கின்றன....
வெவ்வேறு கருவில் உருவாகி
காதல் என்னும் வலையில் வீழ்ந்து
கல்யாணம் என்னும் பெயரில் கலந்து
இருவர் ஒருவரணோமே....
மண்ணுக்கு மழை காதலி
காற்றுக்கு இசை காதலி
மலருக்கு முள் காதலி
எனக்கு நீ தானடி....