விழிக்கின்ற போதெல்லாம் என்னை தூங்கவும் சொல்லுதடி
விடிகின்ற பொழுதெல்லாம் எனக்கோ ஏக்கமாய் செல்லுதடி
நான் பார்க்கும் யாவையுமே நீ ஆக்கி போனதடி
எனை நோக்கும் யாவையுமே நீதான் என்றதடி
விரல் கொண்டு நீ மீட்ட எனை வீணை ஆக்கியது
விடியாத இரவையும் எனக்கு வெளிச்சம் கொண்டு மாற்றியது
உன் மனதை புரியத்தான் என்னையும் அறிஞன் ஆக்கியதோ
என் காதல் சொல்லத்தான் என்னையும் கவிஞன் ஆக்கியதோ
[/b]