ஹாய் RJ வணக்கம்,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் காதல் ரோஜாவே படத்திலிருந்து இளவேனில் இது வைகாசி மாதம் பாடல்
திரைப்படம்: காதல் ரோஜாவே
பாடல்: இளவேனில் இது
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: எஸ்பிபி, சித்ரா
காதல் பிரிவின் துயரை உணர்த்தக் கூடிய பாடல் இது. மென்சோகம் இழையோடும் இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்,
"கண்ணான கண்ணே
உன் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்.
என் தீபம் உன் கோவில்
சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ
இல்லை ஒரு யோகம்.
நான் செய்த பாவம்
யாரை சொல்வது. "
இந்த பாடலை எனக்காக மட்டும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.
நன்றி RJ