Author Topic: 2014 ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்  (Read 2089 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


2014 ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்
(21. 06. 2014 முதல் 08. 01. 2016)

நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 7-ம் தேதி சனிக் கிழமை உத்தராயணப் புண்ய கால, கிரீஷ் மருதுவில் கிருஷ்ணபட்சத்து நவமி திதி, ரேவதி நட்சத்திரம், சோபன நாம யோகம், கரசை நாம கரணத்தில் மந்த யோகத்தில், பஞ்சபட்சியில் மயில் பலவீனமடைந்த நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் காலை மணி 11. 19க்கு ராகுபகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் இராகுவும், மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் கேதுவும் நுழைகின்றனர்


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பூமிக்காரன் செவ்வாய் வீட்டில் அமர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலைக் கெடுத்து வந்த கேது இப்போது மீனத்திலும், கட்டிடக்காரன் சுக்ரனின் வீடும் வர்த்தக ராசியுமான துலாத்தில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய ராகு இப்போது கன்னியிலும் அமர்வதால் உலதெங்கும் பல அதிரடி மாற்றங்கள் நிகழும்.
 
ராகுவால் ஏற்பட போகும் பலன்கள்
 
கன்னி ராசியில் ராகு அமர்வதால் உலகெங்கும் நிலவிய பணத்தட்டுப்பாடு குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். குறிப்பாக கட்டுமானத் தொழில், லாட்ஜிங், ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலா, வாகனம், கம்ப்யூட்டர், மீடியா தொழில்கள் அபிவிருத்தி அடையும். சினிமாத்துறை பரபரப்பாகும். பழைய கலைஞர்கள் மீண்டும் ஒரு வலம் வருவார்கள்.



அனிமேஷன், மல்டி மீடியா, கேட்டரிங், ஃபேஷன் டெக்னாலஜி, மெரைன், ரோபோ, மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறைகள் பிரபலமடையும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிவேகமாகப் பரவி வரும் கேன்சர் நோய்க்கு புது மருந்து கண்டறியப்படும். சர்க்கரை நோயின் தாக்கமும் குறையும். செங்கல், மணல் விலை குறையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும்.
 
ராகு புதன் வீட்டில் அமர்வதால் தேர்வு முறை மாற்றி அமைக்கப்படும் பாடத்திட்டங்கள் நவீனமாகும். ஆனால் மாணவர்கள் மத்தியில் பாலியல் உணர்வுகளும், மொழி, இன மோதல் எண்ணங்களும் அதிகரிக்கும். சில கல்லூரி இளைஞர்கள் தீவிரவாத குழுக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிக்குவார்கள்.
 
 மக்களிடையே சிற்றின்ப வேட்கை அதிகரிக்கும். பாலியல் பலாத்காரம், பெண் சிசு கருக் களைப்பு, வரதட்சனைக் கொடுமைகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் அமலுக்கு வரும். விதவை, மணமுறிவு பெற்றவர்கள் மறுமணம் புரிந்து செழிப்படைவார்கள். கன்னிப் பெண்களுக்கு கஷ்டங்கள் வரும். அரவாணிகளுக்கு கூடுதல் சலுகை அரசால் கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு அதிகரிக்கும்.
 
பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் பிரபலமடைவார்கள். நகைச்சுவை நடிகர்கள், பின்னனி பாடகர்கள், கார்ட்டூனிஸ்டுகள் பாதிப்படைவார்கள். உலகெங்கும் புதிய கனிம, கரிம, தங்க வளங்கள் பூமியில் மட்டுமல்லாது செவ்வாய், சந்திரன் உள்ளிட்ட கோள்களில் கண்டறியப்படும். காசநோய், தோல் நோய் அதிகரிக்கும். காற்று அதிகம் மாசுபடும். மழை அளவு குறையும். மலை, காடுகளின் வளங்குன்றும். அதிநவீன ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை இந்தியா ஏவும். ராணுவம், மீடியாத் துறைகள் நவீனமாகும். புது வாணொலி, தொலைக்காட்சி சேவைகள் அதிகமாகும். 4, 5ம் எண்கள் அதிக முக்கியத்துவம் பெறும். உணவுக் கலப்படத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும்.

கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்
 
கேது மேஷத்தை விட்டு மீன ராசியில் அமர்வதால் பூமி விலை உயரும். பத்திரப்பதிவுத் துறை நவீனமாகும். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். தங்கப் புதையல்கள், ஐம்பொன் சிலைகள் அதிகம் கண்டறியப்படும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும். மீனவர் பிரச்னை பெரிதாகி பிறகு தீர்வு காணப்படும்

மக்களுக்கு கணுக்கால், பாதத்தை பாதிக்கும் நோய்கள் அரிதில் பரவும். மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவும். அயல்நாட்டிலிருந்து நோய்களைப் பரப்பும் பாக்டீரியா, வைரஸ்கள் இந்தியா மீது திணிக்கப்படும். தீவிரவாதிகள் அதிநவீன அறிவியல் முறையில் தாக்குதல் நடத்துவார்கள். கேது குரு வீட்டில் அமர்வதால் தீவிரவாத இயக்கங்களின் ஆணி வேர் வரைக் கண்டறிந்து அழிக்கப்படும்.
 
ஹவாலா, போதை மருந்து கடத்தல், திருட்டு சி. டிக்கள் அழிக்கப்படும். ஆன்மீகம் தழைக்கும். அனைத்துமத ஸ்தலங்களும் புதுப்பிக்கப்படும். மனஇறுக்கம், அழுத்தத்திற்கு பலர் உள்ளாகுவார்கள். மதமாற்றம் தடுக்கப்படும். பசு வதை பறவை வதை குறிப்பாக தேசியப் பறவை மயில் வதையைத் தடுக்க புது சட்டம் வரும். நதிகள் ஒவ்வொன்றாக இணையும். நீர் வளம், நில வளத்தைப் பெருக்கவும், பொது சொத்துக்களை பாதுகாக்கவும் புது சட்டங்கள் வரும்.
 
சித்தா, ஆயுர்வேதிக், மூலிகை எண்ணெய் மசாஜ், வர்மக் கலை, குரு குலக்கல்வி, சமஸ்கிருதம், ப்ரெஞ்சு ஆகியவை மீண்டும் வளரும். புகழடையும். ஆன்மீகம் தழைக்கும். கோவில் சொத்துக்களை பாதுகாக்க புது சட்டம் வரும். ஆன்மிகவாதிகள் பிரபலமடைவார்கள். 7-ம் எண்ணிற்கு வலிமை கூடும். கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர புது சட்டம் வரும். மகாத்மா காந்தி மட்டுமல்லாது சர்தார் வல்லபாய் படேல், டாக்டர். அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் உருவம் பொறித்த புதிய காசுகள், பணம் புழக்கத்திற்கு வரும். ரிசர்வ் வங்கி தனியார் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புது சட்டங்கள் கொண்டு வரும்.
 
இந்த ராகு, கேது மாற்றம் மக்களுக்கு வசதி, வாய்ப்புகளையும், ஓரளவு நிம்மதியையும் தருவதாக அமையும்.

ராகுவின் பயணங்கள்
 
21. 06. 14-22. 08. 14 வரை சித்திரை 2-ல்
23. 08. 14-24. 10. 14 வரை சித்திரை 1-ல்
 
25. 10. 14-26. 12. 14 வரை அஸ்தம் 4-ல்
27. 12. 14-27. 02. 15 வரை அஸ்தம் 3-ல்
28. 02. 15-30. 04. 15 வரை அஸ்தம் 2-ல்
01. 05. 15-03. 06. 15 வரை அஸ்தம் 1-ல்
 
04. 06. 15-04. 09. 15 வரை உத்திரம் 4-ல்
05. 09. 15-04. 11. 15 வரை உத்திரம் 3-ல்
05. 11. 15-08. 01. 16 வரை உத்திரம் 2-ல்
 
 
கேதுவின் பயணங்கள்
 
21. 06. 14-22. 08. 14 வரை ரேவதி 4-ல்
23. 08. 14-24. 10. 14 வரை ரேவதி 3-ல்
25. 10. 14-26. 12. 14 வரை ரேவதி 2-ல்
27. 12. 14-27. 02. 15 வரை ரேவதி 1-ல்
 
28. 02. 15-30. 04. 15 வரை உத்திரட்டாதி 4-ல்
01. 05. 15-03. 06. 15 வரை உத்திரட்டாதி 3-ல்
04. 06. 15-04. 09. 15 வரை உத்திரட்டாதி 2-ல்
05. 09. 15-04. 11. 15 வரை உத்திரட்டாதி 1-ல்
 
05. 11. 15-08. 01. 16 வரை பூரட்டாதி 4-ல்
 
 
பரிகாரம்
 
சுகபோக, சுயசாம்ராஜ்ய கிரகம் ராகு புதன் வீடான கன்னி ராசியில் அமர்வதால் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு குறிப்பாக மணமுறிவு பெற்றவர்களின் திருமணத்திற்கும் உதவுங்கள். ஞான, வேத கிரகமான கேது குருவின் வீடான மீனத்தில் அமர்வதால் பழைய வழிபாட்டு தலங்களையும், புராதன நீதி நூல்களையும் புதுப்பிக்க உதவுங்கள். வெற்றி நிச்சயம்.