Author Topic: 2014 ராகு-கேது பெயர்ச்சி ராசிப் பலன்  (Read 3473 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2014 ராகு-கேது பெயர்ச்சி ராசிப் பலன்

ராகு - கேது வழிபாடுகள்


விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்தவர் ராகு. அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் அமுதம் குடிக்கும் ஆசை ஏற்பட்டது. தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் எப்போதும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். எனவே தேவர் கள் சாகாமலிருக்க பாற்கடலைக்கடைந்து அமுதத்தை உண்ண எண்ணினார்கள்.
 
பாற் கடலை ஆதிசேஷன் என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு கடைந்து கொண்டே வரும்போது அமுதமும் விஷமும் கலந்தே வந்தன. மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதத்தைக்கிண்ணத்தில் ஏந்தி கரண்டியால் கொடுப்பதற்காக தேவர்களை ஒருவரிசையாக அமரச் சொன்னார்.
 
இதை சூசகமாகக்கண்டு பிடித்த அசுரகுல ராகு, சூரிய சந்திரர்கள் மத்தியில் அமர்ந்துவிட்டான். எல்லாரும் அமுதத்தை உண்டபின் சூரிய சந்திரன் அமுதமண்டராகுவை யாரெனக்கண்டு பிடித்து மகா விஷ்ணுவிடம் கூற அவர் அசுரனான ராகுவின் தலையைக் கையிலிருந்த கரண்டியால் வெட்டிவிட்டார்.
 
கரண்டியால் துண்டிக்கப்பட்ட பிறகும் இந்த இரண்டு முண்டங்களும் அமுதம் உண்டதால் இறவாமல் உயிருடன் வாழத் தொடங்கின. தலைப்பாகம் ராகுவென்றும், உடல் பாகம் கேது என்றும் பெயர் பெற்றன. அவன் அவசரப்பட்டுச் செய்த காரியத்தால் அரக்கர்களும் அவரை தங்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை.
 
தேவர்களும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவன் கவலையுடன் பிரும்மாவிடம் சென்றான். அவர் பாதங்களில் பணிந்து தன் நிலையை வருத்தத்துடன் சொல்லி உடலையும் தலையையும் ஒன்று சேர்க்கும்படி கேட்டுக் கொண்டான். பிரும்மாமனம் இரங்கினார்.
 
"கசியப முனிவரின் பேரனே, உன்முன்னோர்களின் காரணமாக உனக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் திருமால் உன் தலையைத் துண்டித்திருக்கிறார். அதை ஒன்று சேர்க்கும் வல்லமை எனக்கு இல்லை. உன் உடலும் தலையும் பிரிந்து போகாமலிருக்க ஒரு வரமளிக்கிறேன். சூரியர் சந்திரர்களால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டது.
 
அவர்களுக்கு எதிர் திசையில் நீங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் ஒருவனாக இருப்பாய். உன் தலைப்பகுதி ஒரு பக்கமும் அதற்கு நேர் எதிர்ப்பக்கம் உடல் பகுதியும் இருக்கும் தலைப்பகுதி என்பது ராகு என்றும் உடல்பகுதி கேது என்றும் பெயர்பெறும்.
 
ராசி மண்டலத்தில் உங்களுக்குச் சொந்தராசி இல்லாவிட்டாலும் நீங்கள் எந்த ராசியில் சஞ்சரிக்கிறீர்களோ அந்த ராசிக்கேற்ப பயன் அளிப்ப வராவீர்கள். எல்லா கிரகங்களின் வல்லமையும் உனக்கு ஏற்படும். ஜாதகத்தின் பாப புண்ணியத்திற்கேற்ப பயன் அளிப்பவராகவும் பழிவாங்குபவராகவும் செயல்படுவாயாக.
 
உன்னை ராகு-கேது-சாயா கிரகம்-நிழல் கிரகம் என்ற பெயரால் அழைப்பர். உன்னைக் காட்டிக் கொடுத்து இந்த நிலைக்குள்ளாக்கிய சூரிய சந்திரரை மறைத்து ஒளிமங்கச் செய்து கிரகணதோஷம் ஏற்படுத்தக் கூடியவராக விளங்குவீராக'' என்றார். அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றினார். கற்றறிவே இல்லாத சுவர்பானுவுக்கு நவக்கிரக பதவி அளிப்பது அவ்வளவு நல்லதல்ல.
 
ராகு கேது என்ற இரண்டு கிரகமாக அவன் சாஸ்திரங்களையும் கற்க வழி செய்ய வேண்டும் கடகராசியில் கேது, ருக், யஜ×ர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரகனாகவும் மகர ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரனாகவும் விளங்க அருள் புரிந்தார். நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள்.
 
ராகு தசை, கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத்தவறமாட்டார். ஜாதகத்தில் ராகு கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.
 
ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக்கொண்டு வருவதாகவும் அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
 
ஒருவர் ஜாதகத்தில் ராகு கேதுகளால் தோஷங்களிலிருந்தால் காளஸ்திரி சென்று காளஸ்தீஸ்வரரையும், ஞானபர குணம்பிகையையும் வழிபடலாம். ராகு கேதுக்கு இல்லமோ வாரமோ இல்லாததால் எந்தக்கிழமையும் அவர்களுக்கு ஏற்றதே.
 
நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் முறையாக அந்தக்கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மாந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும்.
 
நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம், தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை படைக்கவும். ஐந்துவிதமாக மலர்கள் பூஜைக்குத் தேவை. பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்து நமஸ்காரம் செய்யவும்.
 
பொதுவாக, ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். கேதுவால் ஆதிக்கம் செலுத்தப்படு கிறவர்கள் ஆன்மீகத்துறையில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார்கள்.
 
யோகம் மாந்திரீகம் போன்றவற்றில் இரகசியமாக ஈடுபடுவார்கள். நீதியும் நேர்மையும் தவறாமல் ஒழுக்கமாக வாழ்வார்கள். இவர்களில்  பலரிடம் முன் கோபம் காணப்படும். இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம்.
 
எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக ஆடையணிவதில் விருப்பம் இராது. ஆனால் எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள். எதிலும் நிதானமாகவே நடந்து கொள்வார்கள்.



2014ஆ‌ம் ஆ‌ண்டு ராகு - கேது பெயர்ச்சி ராசிப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து‌ள்ளா‌ர்.

« Last Edit: June 20, 2014, 08:27:43 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மேஷம்


குடும்ப நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் நீங்கள், தன்னலம் இல்லாத தியாகியைப் போல் வாழ்பவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் இடைவெளியை ஏற்படுத்தியனாரே! திறமை இருந்தும் வெளி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே! தாழ்மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.
 
 வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்யம் சீராகும்.
 
மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
 
 மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்களின் வருகை உண்டு. என்றாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரங்கள் ஆதரவாகப் பேசுவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். 
 
சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.
 
ராகுபகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! உங்களின் திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மதிப்புக் கூடும். 
 
கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.
 
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
வியாபாரிகளே! இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரரா£க அறிமுகமாவார்.
 
உத்தியோகஸ்தர்களே! உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சுறுத்தலையும், அவ்வப்போது படபடப்பையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருக்கும் கேது ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
 
உங்களின் பலவீனங்களையெல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பேசத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள்-. ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துப் போகும்.
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.
 
பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வி. ஐ. பிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.
         
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் மகோபலம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், தோல்விமனப்பான்மை, வீண் பழி, முன்கோபம் வந்துச் செல்லும். 
   
உங்கள் ஜீவனாதிபதியும்-லாபாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் வேலைச்சுமை, குடும்பத்தில் சச்சரவு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும்.   
 
கேதுபகவான் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
 
வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும் சுடுதல் நேரம் ஒதுக்கி பணிப்புரிய வேண்டிய நிலை ஏற்படும். சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் அழகு, ஆரோக்யத்தையும், பணம், பதவியையும் தரும்.
 
பரிகாரம்
 
கும்பகோணம் நகரத்தின் மையத்திலுள்ள நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - ரிஷபம்


பொன், பொருள் கொடுத்துப் பொய் சொல்லச் சொன்னாலும் புறங்கூறாத நீங்கள் நீதிக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் 21. 06. 2014 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், வருமானத்தையும் தந்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல. . என்றாலும் உங்கள் யோகாதிபதி புதனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார்.
 
குடும்பத்தில் இருந்த சச்சரவு ஒரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியுமோ, முடியாதோ என்றவொரு தடுமாற்றம் வரும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
சிலர் அவர்களின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமூகமாக தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வக் கோவிலுக்குச் சென்று காணிக்கையை செலுத்துவீர்கள்.
 
 மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது. மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே அவரின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள்.
 
அக்கம்-பக்கம் விட்டாருடன் அனுசரனையாக நடந்துக் கொள்ளுங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுத்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தாய், தாய் மாமன் வகையில் மனத்தாங்கல் வரும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, தலைச்சுற்றல், தூக்கமின்மை, பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அடகிலிருந்த நகையை மீட்க உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சகோதர வகையில் மோதல்கள் வந்தாலும் பாசம் குறையாது.
 
ராகுபகவான் சேவாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை செல்வதால் சவால்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு.   
 
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை ராகுபகவான் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வங்கிக் லோன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான விவாதங்களெல்லாம் விலகும். அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். விளையாட்டு, இசை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
 
வியாபாரிகளே! வழக்கமான லாபம் உண்டு என்றாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாதீர்கள். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். ஹோட்டல், துணி, பெட்ரோ-கெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் மூத்த அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் மனசு மாறும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து பயணங்களால் அலைச்சல்களையும், சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்களையும், மனஇறுக்கத்தையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கிய என்பதை உணர்வீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள்.   
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் தன-பூர்வபுண்யாதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் வராது என்றிருந்த பணம் வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும்.
 
உங்கள் பாக்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேதுபகவான் பயணிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது வேலைக் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அரசாங்க விஷயம் உடனடியாக முடிவடையும். பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிகள் வரும்.
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், மாநிலத்தவர்களால் பயனடைவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும்.   
 
கேதுபகவான் அஷ்டம-லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், இரக்கப்பட்டு ஏமாறுதல், பண இழப்புகள், இரத்த சோகை, ஹார்மோன் பிரச்னை, பசியின்மை வந்துச் செல்லும். அவ்வப்போது குடும்ப வாழ்க்கையில் பற்றில்லாமல் போகும். மற்றவர்கள் யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த உதவிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சொந்த-பந்தங்களில் ஒருசிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு பார்க்க விட்டால் ஒரு பேச்சு என்றிருப்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் சங்கடங்கள் வரும்.
 
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளை சரி செய்வீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.   
 
இந்த ராகு-கேது மாற்றத்தில் ராகுவால் மனநிம்மதியற்றப் போக்கு ஏற்பட்டாலும் கேதுவால் திடீர் யோகமும், வசதி, வாய்ப்பும் உண்டாகும். 
 
பரிகாரம்:
 
சென்னை-குன்றத்தூர் தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மிதுனம்


தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். 21. 6. 2014 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் சேர்ந்து உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு திசைக்கொரு பக்கமாக பிரச்சனைகளை கொடுத்து நாலாவிதத்திலும் பாடாய்படுத்தினார். உங்களை நிம்மதியில்லாமல் மனஉளைச்சலுக்கு ஆக்கினார். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவித்தீர்கள். இப்போது ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் இனி எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை தருவார்.
 
5-ம் வீட்டை விட்டு ராகு விலகியதால் பல முறை சிகிச்சை பெற்றும் குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணமும், பொறுப்பற்ற போக்கும் மாறும். இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
 
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு உங்களிடம் கருத்து மோதல்களுடன் இருந்து வந்த பழைய உறவினர்கள் இப்போது வலிய வந்துப் பேசுவார். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் அரசு அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.
 
தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும். அவர் கோபப்பட்டு பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். புதிதாக வரும் விளம்பரத்தை கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.
 
அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் சச்சரவு, வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வீண் சந்தேகம் வந்துச் செல்லும். புதுப் பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது. வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
 
தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் சுறுசுறுப்பாக செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிக்க அதிகம் உழைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும். பழுதான வாகனம் ஓடும்.
 
ராகுபகவான் உங்களின் சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். நிண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். புதிதாக கடன் வாங்கி அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும்.
 
மாணவ-மாணவிகளே! தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள். மற்றவர்களின் சிபாரிசின் பேரிலும், அதிகம் செலவு செய்தும் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர வேண்டி வரும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம்.
 
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தாலும் தளர வேண்டாம்.               
 
வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ செய்யப்பாருங்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். சம்பளத்தை தவிர அதிக சலுகைகள் தந்தும் நன்றி இல்லாமல் இருக்கிறார்களே! என்று ஆதங்கப்படுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். இரும்பு, கடல் உணவுகள், மூலிகை, கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
 
உத்தியோகஸ்தர்களே! சூழ்ச்சிகளையும் தாண்டி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை உயரதிகாரிகள் மத்தியில் பரப்புவார்கள். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் கூட போராடி பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து திடீர் யோகங்களையும், செல்வம், செல்வாக்கையும் தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமையால் பதட்டம், சோர்வு வந்துப் போகும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில், முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் நீங்களும் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும், வாக்குறுதியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்களோ அல்லது தலைக்குனிவான சம்பவங்களோ நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துப் போகும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை விட்டிற்கு அழைத்து வர வேண்டாம். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
 
மற்றவர்களுக்காக இரக்கப்பட்டு ஏமாற வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். தடைப்பட்டு தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடையும்.
 
எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வந்து சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அனுபவப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள்.   
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் ராசிநாதனும்-சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அழகு, அறிவு, ஆரோக்யம் கூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 
 
உங்கள் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு உங்களுடைய பெரிய பரிந்துரை செய்யப்படும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
கேதுபகவான் ஜூவனாதிபதியும்-சப்தமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வீண் விரையம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
 
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 
 
வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களை கவர விளம்பர யுக்திகளை கையாளுங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை காலத் தாமதமின்றி செலுத்திவிடுவது நல்லது. பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோக ஸ்தானத்தில் கேது அமர்வதால் விரும்பத்தகாத இடமாற்றங்கள், சின்ன சின்ன அவமானங்கள், வேலையிழப்புகள் வந்துப் போகும். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். சிலர் உங்களை அவதூறு வழக்குகளில் சிக்க வைப்பார்கள்.
 
இராகு-கேது மாற்றம் சேமிப்புகளை கரைப்பதுடன், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக இருக்கும்.
 
பரிகாரம்
 
நாகர்கோவில் தலத்தில் அருள்பாலிக்கும் நாகராஜாவை தரிசித்து விட்டு வாருங்கள். கோயில் உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கடகம்


கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். சாயாகிரகங்களான இந்த ராகுவும், கேதுவும் 21. 06. 2012 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு வீண் பழியையும், மனதில் ஒருவித அச்சத்தையும், உங்களுக்கும் தாயாருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திய ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்தமர்தால் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சவால்கள், விவாதங்களிளெல்லாம் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
 
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு கட்ட சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.
 
கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி. ஐ. பிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சொந்தம்-பந்தங்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். 
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜுவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் வேலைக் கிடைக்கும். தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் மதிப்பார்கள்.
 
ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பேச்சில் கனிவு பிறக்கும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவி உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
 
ராகுபகவான் உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். பால்ய நண்பர்களால் பலனடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். நீண்ட நாட்களாக போக வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள்.
   
மாணவ-மாணவிகளே! பொது அறிவுத் திறன் வளரும். மதிப்பெண் கூடும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஆசிரியின் அன்பை பெறுவீர்கள். இசை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
 
கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வேலைக் கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும்.
 
கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். யதார்த்தமான படைப்புகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களின் கற்பனைத் திறன் வளரும்.
 
வியாபாரிகளே! கூடுதல் லாபம் கிடைக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாகமாக நடந்துக் கொள்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். ரியல் எஸ்டேட், துணி, காய், கனி , ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புது கிளைகள் அல்லது தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த தொந்தரவுகள் விலகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும்.
 
உத்தியோகஸ்தர்களே! உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். அவர்களின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல பொறுப்பில் அமர வாய்ப்பிருக்கிறது. மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து அடுத்தடுத்த வேலைகளால் பதட்டத்தையும், உத்தியோகத்தில் இடமாற்றத்தையும், அவமானங்களையும் சந்திக்க வைத்த கேதுபகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள்.
 
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். ஆனால் தந்தையாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். அவருக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும்.
 
தந்தைவழி சொத்துகளைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் விரையாதிபதியும்-சேவகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் மனோபலம் கூடும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பயணங்களால் பயனடைவீர்கள். புதியவரின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களையெல்லாம் ஒதுக்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.   
 
உங்கள் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம், விபத்துகள், கை, கால் மரத்துப் போகுதல், உடம்பில் இரும்பு, கால்சியம் சத்து குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. 
 
  கேதுபகவான் பாக்யாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிதுர்வழி சொத்தைப் போராடி பெறுவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். உத்தியோகத்தில் இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட «ண்டாம். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வரும். பதவி உயர்வை எதிர்ப்பார்க்கலாம்.
 
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் ராகுவால் திடீர் யோகமும், செல்வாக்கும் பெற்றாலும் கேதுவால் அலைச்சலும், செலவினங்களும் வந்துச் செல்லும்.
 
பரிகாரம்
 
மன்னார்குடிக்கு அருகே உள்ள பாமணி நாகநாதரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - சிம்மம்


யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்கள். உங்களுக்கு 21. 06. 2014 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்
 
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், தன்னம்பிக்கையையும், சவால்களில் வெற்றியையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் வந்து அமர்கிறார். ஓரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது.
 
கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்குக் கண்ணாடி அணியக் கூடும். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்துப் போகும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் முடிந்த வரை அநாவசியப் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை தவறாகப் புரிந்துக் கொண்டு வம்பில் சிக்க வைப்பார்கள். எனவே இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது.
 
குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தால் முக்கிய ஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடும். சந்தோஷமாக ஓர் இடத்திற்குப் போக வேண்டுமென்று திட்டம் போட்டுக் கிளம்பினால் ஏதாவது சங்கடம் எதிர்பாராமல் குறுக்கே வரும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.
 
வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் திருத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவர்களை கொண்டுவர வேண்டும். அதைப் புரிந்துக் கொண்டு செயல்படப்பாருங்கள். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் பாக்யாதிபதியும்-சுகாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
 
சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். திக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துகளை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
உங்களின் விரையாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். தோலில் நமைச்சல், அலர்ஜி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வீட்டிலும் மின் கசிவு, கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 
 
ராகுபகவான் உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்ட தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பலனடைவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள், இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். 
 
மாணவர்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வப்போது விடைகளை எழுதிப் பாருங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாடும் போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது-. பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. 
 
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். புதிய இளைய கலைஞர்கள் மூலமாக வெற்றியடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பரிசு, பாராட்டுகள் உண்டு. 
 
  விவசாயிகளே! நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். பக்கத்து நிலக்காரரை அனுசரித்துப் போங்கள். தானிய வகைகள், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள்.
 
வியாபாரிகளே! சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். அவர்களை திருப்திபடுத்த முடியாமலும் போகும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு முழு ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சட்டத்திற்கு புறம்பான முயற்சிகளை தவிர்த்துவிடுவது நல்லது.   
 
உத்தியோகஸ்தர்களே! சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சில சமயங்களில் மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக நினைப்பீர்கள். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகளும் வரும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தையாருக்கு ஆரோக்ய குறைவையும், சேமிப்புகளையும் கரைத்த கேது பகவான் இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் விலகும். வங்கிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.
 
பழைய பிரச்னைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைத்தாலும் புதிது புதிதாக சில பிரச்னைகளும், சிக்கல்களும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும். தந்தைவழி சொத்திலிருந்த சிக்கல்களெல்லாம் விலகி உங்க கைக்கு வந்து சேரும். வழக்கால் இருந்த அச்சம் நீங்கும். ஆனால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஊடல் அதிகரிக்கும். எந்த சூழ்நிலையிலும் மனைவியை மரியாதைக் குறைவாக பேச வேண்டாம். சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம்.
 
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ, அசிங்கப்பட்டுவிடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைத்தூக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் அஷ்டம-தனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். உறவினர்களில் ஒரு சிலர் உங்கள் நிலைமை புரியாமல் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். எதிர்பாராத உதவிகள் வி. ஐ. பிகளிடமிருந்து கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துப் போகும். மாற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். 
 
உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் வீண் விமர்சனங்கள், மறைமுக எதிர்ப்புகள், கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவி உங்கள் குறை, நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
அவருக்கு கழுத்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். திருமணப் பேச்சு வார்த்தை தாமதமாகும். 
 
கேதுபகவான் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் செல்வம், செல்வாக்கு உயரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட சிலர் இப்போது உங்கள் பக்கம் ஆதரவாக திரும்புவார்கள். தொழிலதிபர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும்.
 
 ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மகளுக்கு வேலைக் கிடைக்கும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அவருக்கு நல்ல வாழ்க்கையும் துணை அமையும். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்டுவீர்கள்.
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். சக ஊழியர்களிடம் அன்பாகப் பேசுவதாக நினைத்து அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
 
இந்த இராகு-கேது மாற்றம் குடும்பத்தில் விவாதங்களையும், மருத்துவச் செலவுகளையும் தந்தாலும் சுற்றுச் சூழலுக்குத் தகுந்தாற் போல் நடந்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் தருவதாக அமையும். 
   
பரிகாரம்
 
நாகூர் தலத்தில் அருளும் நாகநாதரை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவி செய்யுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கன்னி


தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப்பொருட்களை பாதுகாப்பவர்கள். உங்களுக்கு 21. 6. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு சாதாரணமாகப் பேசப் போய் சண்டையை ஏற்படுத்தினார். சிக்கனமாக இருக்க நினைத்தாலும் அடுத்தடுத்து செலவுகளை கொடுத்து விழி பிதுங்க வைத்தார். குடும்பத்திலும் அமைதியில்லாமல் அலைக்கழித்தார். அப்படிப்பட்டவர் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் இனி பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள்.
 
வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சரளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை கவனம் செலுத்துங்கள்.
 
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சை கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
 
இன்பெக்ஷன், அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
 
உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். முக்கிய விஷயங்களையெல்லாம் மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சிலர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
உங்கள் திருதியாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் ஒருவித படபடப்பு, பயம், வீண் செலவுகள், முன்கோபம் வந்து விலகும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். கடன் தொகையில் அசல் அடைபடவில்லையே, வட்டிப் பணம் மட்டுமே தானே தரமுடிகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள்.
 
  லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்.
 
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். மூத்த சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 
 
 ராகுபகவான் உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் திடீர் பயணங்களால் செலவுகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மனஉளைச்சலால் ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். அரசாங்க விஷயங்கள் அலைச்சலின் பேரில் முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர், கையழுத்திட வேண்டாம். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.     
   
மாணவ-மாணவிகளே! மந்தம், மறதியால் மதிப்பெண் குறையும். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மொபைல் போனில் பேசுவது, டி. வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக நுழைய வாய்ப்பிருக்கிறது. 
     
கன்னிப் பெண்களே! கல்யாணம் தள்ளிப் போகும். காதல் விஷயத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். இன்பெக்ஷன், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்பிற்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். 
 
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும். போட்டிகள் அதிகமாகும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வியாபார பிரச்னைகள் சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்துவிடாலாம் என்று முடிவெடுப்பீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் மூளும். மருந்து, கண்ஸ்ட்ரக்ஷன், கன்சல்டன்ஸி, கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
 
உத்தியோகஸ்தர்களே! பழைய பிரச்சனைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப் பாருங்கள். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று அலுத்துக் கொள்வீர்கள்.
 
அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. பதவி உயர்வு, சம்பள உயர்வை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் தாமதமாகும். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு பலவிதமான இன்னல்களையும், அவஸ்தைகளையும், கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி விபத்துகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள்.
 
எந்த நேரம் என்னவாகுமோ என்ற அச்சமெல்லாம் விலகும். எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். ஆனால் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும். சின்ன சின்ன பிரச்னைகளெல்லாம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள்.
 
ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள்.
 
உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைப்பீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பை சரியாக பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் ராசிநாதனும்-தசமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சாத்வீகமான எண்ணங்கள் வரும். புது வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வழக்கு சாதகமாகும்.     
       
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
                                 
கேதுபகவான் சுக-சப்தமாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வீண் விரையம், பண இழப்புகள், எதிலும் ஆர்வமின்மை, அசதி, சோர்வு வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். தாயாருக்கு வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, தைராய்டு பிரச்னை, கர்பப்பை வலி வந்து நீங்கும். 
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். பழைய அனுபவமிக்க பங்குதாரர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுக் கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது.
 
இந்த இராகு-கேது மாற்றம் வேலைச்சுமையையும், குடும்பத்தில் சலசலப்புகளையும் உண்டாக்கினாலும் ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்
 
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பேரையூர் நாகநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

« Last Edit: June 20, 2014, 08:50:29 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - துலாம்


உள்மனது சொல்வதை மட்டும் செய்யும் நீங்கள், தகுதியற்றவர்களை புகழமாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை பல விதமான பிரச்னைகளிலும் சிக்க வைத்தார் ராகு பகவான். எதையுமே நிதானமாக ஆர அமர யோசிக்க விடாமல் ஒரு பதட்டத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினார். வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறதே என்று அவ்வப்போது ஒரு வெறுப்பும், சலிப்பும் அடைந்தீர்களே! முகத்தில் ஒரு மலர்ச்சியே இல்லாமல் ஒரு நிமிடம் சிரித்தாலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தை உண்டாக்கினார். ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்த விடுபடுவீர்கள்.
 
மருத்துவச் செலவுகள் குறையும். ஏமாற்றங்கள், தர்ம சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். சோர்ந்திருந்து களையிழந்த உங்கள் முகம் இனி மலரும். குடும்பத்தினராலும் ஒதுக்கப்பட்டீர்களே! இனி எல்லோருடனும் மனம் விட்டு பேசும் சூழ்நிலை உருவாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிரும், புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள்.
 
வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி அடுத்தடுத்து நடந்தேறும். மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். என்றாலும் விரைய ஸ்தானத்தில் ராகு அமர்வதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
 
கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். ஆன்மிகவாதிகளின் ஆசிப் பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் பணத்தட்டுப்பாடு, எதிலும் பிடிப்பற்றப்போக்கு, சிறுசிறு நெருப்புகள் காயங்கள் வந்துச் செல்லும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சகோதர வகையில் மனவருத்தம் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பழைய கடன் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
 
ஜுவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய வேலைகளையும் முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்த அழைப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 
 
ராகுபகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், அரசால் நெருக்கடிகள், முன்கோபம், வீண் டென்ஷன் வந்துச் செல்லும். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.  வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.
 
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைவாற்றல் கூடும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். ஆரோக்யம் சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் கைகூடும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று புது வேலையில் அமருவீர்கள். பெற்றோர் பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
 
கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது வாய்ப்புகளும் வரும்.
 
வியாபாரிகளே! ஆர்வம் பிறக்கும். சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றி விட்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்துவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. புதிய நண்பர்களால் வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உணவு, ஷேர், சிமெண்ட், கல்வி கூடங்களால் ஆதாயமடைவீர்கள். 
 
உத்தியோகஸ்தர்களே! ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு மூத்த அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இடம் மாறுவார். புது அதிகாரி உங்கள் திறமையை சரியாகப் புரிந்துக் கொள்வார்.

கேதுவின் பலன்கள் :   
   
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு கணவன்-மனைவிக்குள் பிரிவையும், கருத்து மோதல்களையும், மனைவிக்கு மருத்துவச் செலவுகளையும் தந்தாரே! சில வேலைகளை போராடி முடிக்க வைத்ததுடன், மனஇறுக்கத்தையும் ஏற்படுத்திய கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் தடைகளெல்லாம் விலகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
 
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவிக்குயின் உடல் நிலை சீராகும்.
 
பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்களிலிருந்து மீட்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். சொந்த ஊரில் இழந்த மதிப்பு, மரியாதைக் கூடும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெளிநாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் வருமானம் உயரும். பாகப் பிரிவினை சாதகமாக முடியும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். புதிதாக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
         
உங்கள் சுக-பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மகளுக்கு திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனின் பொறுப்புணர்வு அதிகமாகும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 
 
கேதுபகவான் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வி. ஐ. பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரிகள் உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கே மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.
 
பரிகாரம்
 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருப்பாம்புரம் பாம்புரநாதரை தரிசித்து வாருங்கள். ஏழையின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - விருச்சிகம்


திறமைகள் அதிகமிருந்தாலும், நிறைகுடம் ததும்பாது என்பதனைச் சுட்டிக் காட்டுபவர்களே! உங்களுக்கு 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அலைக்கழிப்புகளையும், அடுக்கடுக்கான செலவுகளையும், தூக்கமின்மையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்பத்திய ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
 
உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். பங்குச் சந்தை மூலமும் லாபம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
 
குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
 
அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தள்ளிப் போன திருமண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டத்தை வாங்கி தருவீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வழக்கு சாதகமாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயமடைவீர்கள். 
 
பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்களும் விலகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். சொந்த-பந்தங்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
       
ராகுபகவான் உங்களின் ஜுவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவீர்கள். சிலர் புது வீட்டிற்கு குடிப் புகுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் புது வேலைக் கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கைக்கு வரும். சொந்த ஊர் பொது காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 
 
மாணவ-மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும். வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி ஆசிரியரைக் கேள்வி கேட்பீர்கள்.   
 
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது வேலையும் கிடைக்கும்.
 
கலைத்துறையினரே! விமர்சனங்கள், கிசுகிசுக்களிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.
 
வியாபாரிகளே! புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பற்று வரவு உயரும். உங்கள் ரசனைக் கேற்ப கடையை அழகுப்படுத்தி, நவீனமாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். மதிப்புக் கூடும். 
 
உத்தியோகஸ்தர்களே! உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பதவி உயர்விற்கான தேர்வில் வெற்றி பெற்று புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி. ஐ. பிகளின் பட்டியலில் உங்களை இடம் பிடிக்க வைத்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் கேது அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்களும் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
 
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளை நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் அஷ்டமாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் கை, கால் அசதி, சோர்வு, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். 
 
உங்கள் சேவகாதிபதியும்-சுகாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துப் பார்த்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். இளைய சகோதர வகையில் விவாதங்கள் வந்தாலும் பாசம் குறையாது.
 
வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவருக்கு மூச்சுத் திணறல், மூட்டு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.   
 
கேதுபகவான் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் உருவாகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.   
 
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், மக்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.
 
உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
 
இந்த ராகு மாற்றம் திடீர் யோகங்களையும், அந்தஸ்தையும் தருவதாகவும், கேது மாற்றம் அவ்வப்போது முன்கோபத்தையும், மனஇறுக்கத்தையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம்
 
நாகப்பட்டினத்தில் அருளும் காயாரோகணேஸ்வரரையும், நீலாயதாட்சியையும் தரிசித்து வாருங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - தனுசு


சரிநிகர் சமத்துவத்திற்காக போராடும் நீங்கள், ஆண்டவன் படைப்பில் அடிமை யாருமில்லை என்று நினைப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும்.
 
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
 
அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். தலைக்குனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர் பயணங்கள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும்.   
                                           
அஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் சிம சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன், கழுத்து வலி, தொண்டை வலி, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி வந்து நீங்கும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. 
 
ராகுபகவான் உங்களின் பாக்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் பிதுர்வழி சொத்து பிரச்னை தீரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவரின் ஆதரவுப் பெருகும். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் உதவிகளும் கிடைக்கும்.   
 
மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.   
 
கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். தைரியம் கூடும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும்.
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அண்டைமாநிலம், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும்.
   
கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும், விமர்சனங்களும் அதிகமாகும். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள்.
 
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாறுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். கமிஷன், துணி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம்.     
 
  உத்தியோகஸ்தர்களே! ராகு 10-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல், பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்து, சொந்த-பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்திய கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டீர்களே! இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தயக்கம் இருந்து வந்ததே, இனி உங்களின் வாழ்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும்.
 
வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார். அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
 
 உங்களை மதிக்காமல் சென்ற சொந்த-பந்தங்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள். என்றாலும் கேது 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை, கணுக்கால் வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கழிவு நீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்சனையும் வந்துப் போகும்.
 
எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்தப் பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். வீடு வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சப்தமாதிபதியும்-தசமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் திடீரென்று ஒருவித மனோபயம், முன்கோபம், வீண் டென்ஷன், அலர்ஜி, நரம்புச் சுளுக்கு கோளாறு, தோலில் நமைச்சல் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விரும்பத்தாக இடமாற்றங்கள் வரக்கூடும்.       
     
உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் பயனடைவீர்கள். தள்ளிப் போன சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும்.
   
கேதுபகவான் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் அழகு, அறிவு, ஆரோக்யம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளி மாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஷேர் மூலம் பணம் வரும்.
 
வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்குக் கூடும். உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பொறுப்புகள், பதவிகளுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் ஒய்வெடுக்க முடியாத அளவிற்கு பரபரப்பையும், அதிக நேரம் உழைக்க வைப்பதாக இருந்தாலும் அந்தஸ்தையும் ஓரளவு உயர்த்துவதாக அமையும்.
 
பரிகாரம்
 
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு அருகேயுள்ள கோடகநல்லூர் ஈசனை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணிகளில் கலந்து கொண்டு இயன்ற அளவு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மகரம்


மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடைய நீங்கள் மற்றவர்கள் செய்யும் தவறை இங்கிதமாக எடுத்துரைப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்தியோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களின் அறிவாற்றலையும், திறமைகளையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
 
தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்திலும் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமல் தவித்தீர்களே! இனி குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் ராகு 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாருக்கு இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்துப் போகும்.
 
பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும்.
 
பாகப்பிரிவினை பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமை, வி. ஐ. பிகளுடன் கருத்து மோதல்கள், களைப்பு, ஒருவித வெறுப்புணர்வு வந்துச் செல்லும். உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீட்டில் கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுது, மின் கசிவுகள் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். 
 
சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பாசப்பிணைப்பு அதிகரிக்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பாதியில் நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். உங்களுடைய புதுத் திட்டங்களை ஆதரிப்பார். டி.வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன் சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். 
 
ராகுபகவான் உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். தூக்கம் குறையும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
 
மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
 
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.
 
கலைத்துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும்.
 
  வியாபாரிகளே! அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்-. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களின் விடுப்பால் நீங்கள் இறங்கி செய்ய வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோ-கெமிக்கல், பிளாஸ்டிக், கண்சல்டன்ஸி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் பிரச்னை தந்தாலும் மற்றொருவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். 
 
உத்தியோகஸ்தர்களே! எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமைப்போல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித்தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும். பணியிலிருந்த தடைகள் விலகும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றிப் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.
 
 வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஷேர் மூலமாக பணம் வரும்.
 
மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வி. ஐ. பிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். விருந்தினர் வருகை, சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள்.
 
உங்கள் ராசிநாதனும்-தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
கேதுபகவான் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும். சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். யாரும் தன்னை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம். சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.
 
வியாபாரம் செழிக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் உணர்வார்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
 
இந்த ராகு-கேது மாற்றத்தில் ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கேதுவால் வீடு, மனை வாங்கும் யோகமும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி பணவரவும், அதிகரிக்கும்.
 
பரிகாரம்
 
கும்பகோணம் திருவாரூர் பாதையிலுள்ள நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கும்பம்


நகைச்சுவையாகவும், நாசுக்காகவும் பேசும் நீங்கள், நல்லது செய்தே நலிந்தவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு சேமிப்புகளை கரைத்ததுடன், உங்களுக்கு தந்தையாருக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்திய ராகு பகவான் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார்.
 
ராகு எட்டில் மறைவதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அவருடனான மோதல்களும் விலகும். பாகப்பிரிவினைப் பிரச்னை சுமூகமாக முடியும். என்றாலும் 8-ல் ராகு அமர்வதால் பயணங்கள் அதிகமாகும். இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள்.
 
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.
 
திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.
 
கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். புது வேலைக் கிடைக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் அதிகமாகும். சொத்து வாங்கும் முன் தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரும். சகோதரங்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.   
 
சஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் எதிர்ப்புகள், விமர்சனங்கள் அதிகமாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசாங்க அனுமதிப் பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும்.
 
ராகுபகவான் உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். அவருக்கு அடிவயிற்றில் வலி, நெஞ்சு எரிச்சல், தலைச்சுற்றல் வந்துப் போகும். திருமண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
கன்னிப்பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு.
 
வியாபாரிகளே! பற்று வரவு சுமார் தான். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள்.
 
அயல்நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். ரியல் எஸ்டேட், ரசாயனம், இரும்பு, எலக்ட்ரிக்கல்ஸ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போங்கள்.
 
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சில சூட்சுமங்களை அறிந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவுவார்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. சம்பள பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்கும் துணிச்சலையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். குடம்பத்திலும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள்.
 
வெளிவட்டாரத்திலும் யாரையும் விமர்சிக்க வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 
யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். தேடிக் கொண்டிருந்த தொலைந்துப் போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும்.                 
     
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் பூர்வபுண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. புதிய யோசனைகள் மனதில் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். பயணங்களால் பலனடைவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். 
 
உங்கள் ராசிநாதனும்-விரையாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் அழகு, அறிவுக் கூடும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது டிசைனில் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுப்படுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சொந்தமாக சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.   
     
கேதுபகவான் தனாதிபதியும்-லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வருமானம் உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாக பணம் வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
 
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி-வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். சில சலுகை திட்டங்களும் கிடைக்கும். நிறுவனத்தின் சார்ப்பாக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சக ஊழியர்கள் மத்தியிலும் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
 
இந்த ராகு கேது மாற்றம் செலவுகளையும், திடீர் பயணங்களையும் தருவதுடன் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேச வைப்பதாக அமையும்.
 
பரிகாரம்:
 
நாகை மாவட்டம், பூம்புகாருக்கு அருகேயுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் தலத்தில் அருளும் கேது பகவானை தரிசித்து வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மீனம்


திடமாகவும், தீர்க்கமாகவும் யோசிக்கும் நீங்கள், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
 
 வி. ஐ. பிகளின் நட்பால் சில விஷயங்களை சாதிப்பீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும். என்றாலும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
 
தாம்பத்யம் கசக்கும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை வந்துப் போகும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மறதியால் விலை உயர்ந்த ஆபரணங்கள், செல் போனை இழக்க நேரிடும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். தந்தையாரின் ஆதரவுப் பெருகும். அவருக்கிருந்த நோய் விலகும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகம். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.   
 
பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
 
ராகுபகவான் உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, ஒற்றை தலை வலி வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சில சமயங்களில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.   
 
மாணவ-மாணவிகளே! டி. வி. , சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர்களுக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். 
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வியாபாரிகளே! போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். லாபம் மந்தமாக இருக்கும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம்.
 
அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது.
 
உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவாதீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் பிரச்னைகள் வெகுவாக குறையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். தந்தையாரின் ஆதரவுப் பெருகும். அவருக்கிருந்த நோய் விலகும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகம். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.   
 
பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
 
ராகுபகவான் உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, ஒற்றை தலை வலி வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சில சமயங்களில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.   
 
மாணவ-மாணவிகளே! டி. வி. , சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர்களுக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். 
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளே! போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். லாபம் மந்தமாக இருக்கும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம்.
 
அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது.
 
உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவாதீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி இதமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் அமைதி திரும்பும். என்றாலும் கேது ராசிக்குள் அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, முடி உதிர்தல், காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்துச் செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அரவே தவிர்த்து விடுங்கள்.
 
இரும்புச் சத்து குறைவு, ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
 
குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள். நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னம்பிக்கை குறையும். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சுக-சப்தமாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். தாயாரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
உங்கள் லாபாதிபதியும்-விரையாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். கௌரவப் பதவி தேடி வரும். என்றாலும் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சில நாட்கள் தூக்கம் குறையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.   
 
கேதுபகவான் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். தோற்றப் பொலிவுக் கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
 
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். சின்ன சின்ன நட்டங்கள், ஏமாற்றங்கள் வரும். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்துக் கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். அவர்களை திருப்திபடுத்த முடியாமலும் போகும். உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உரிமையை தக்க வைத்துக் கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
 
இந்த ராகு-கேது மாற்றம் குடும்பத்தில் சலசலப்பையும், ஆரோக்ய குறைவையும் தந்தாலும் ஆன்மீக பலத்தால் சாதிக்க வைக்கும்.
 
பரிகாரம்
 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் அருளும் ராகுபகவானை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.