Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
அறிமுகம் - Introduce Yourself / a very little about me by Nyrmal
« Last post by Nyrmal on July 17, 2025, 11:47:45 AM »
Hi everyone! I’m Nyrmal.

Just a little about me—I was born in a historic town in Tamil Nadu called Cuddalore. Not many may have heard of it, but fun fact: it was the first capital of Tamil Nadu during British rule. That’s enough history for now—I don’t want to bore you. 😄

I was raised in Pondicherry (now Puducherry), where I currently live. I could go on and on about this place—French town vibes, Auroville, the Ashram, nightlife, and yep, the liquor scene too. It’s got its own charm.

I joined FTC recently, and honestly, I was overwhelmed (in a good way!) by the warm welcome from the community. You all treat each other like family, and that’s what made me want to stick around. So thank you for including me!

A bit about me—
I love movies, music of all genres (depends on the mood), traveling, food (my true passion), and I’m a proud thalassophile. I do read books occasionally, but I love reading quotes and listening to stories. Also, shopping and perfumes are a bit of an addiction. Oh, and I sing—just not publicly (a certified bathroom singer 🎤😂).

I enjoy chatting with people, exchanging thoughts, ideas, emotions, and just having a good laugh.

Currently, I’m running a business, single, and genuinely love working and being punctual (a rare combo, I know 😅).

Anyway, I think I’ve said more than enough. Looking forward to hanging out with you all!

Cheers!
92
Many More Happy returns of the day dear megha sis 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹
93

Happy Birthday my dear friend Megha


94
ஆன்மீகம் - Spiritual / Re: BIBLE VERSE of THE Day ✝️ 🙏
« Last post by MysteRy on July 17, 2025, 09:09:41 AM »
95
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on July 17, 2025, 09:08:52 AM »
97
Happy birthday partner megha ...ipavum pola yeppavum happy ah irukkanum
 



98
Happy Birthday Megha Dude ♥️🎁
Keep smiling always 😇😇...

99

பொதுவாக பழங்களை சாப்பிடுவதை விட, அதை ஜூஸ் செய்து குடிப்பது தான் பலருக்கு பிடிக்கும். நார்ச் சத்து அதிகம் உள்ள பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட, அப்படியே சுத்தம் செய்து பழமாக சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைத்துவிடும்.

விளையாட்டு வீரர்கள் அனைவரும் பழங்களை நேரடியாக சாப்பிடுவதை விட, ஜூஸ் செய்து குடித்து வந்தால் நல்லது. அப்படி ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களின் நீரிழப்பை சமன் செய்து விடும்.

அப்படி பழச்சாறுகளை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் நாம் கவனிக்க வேண்டியவை பல உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்.

பெரும்பாலானோர் வீடுகளில் பழச்சாறுகள் செய்து குடிப்பதை விட கடைகளிலே வாங்கி குடிப்பர். கடைகளில் பழச்சாறுகள் குடிப்பது தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஜார்களை சரியாக கழுவாமல் அப்படியே நாள் முழுவதும் உபயோகிப்பார்கள். இதனால் பாட்டீரியாக்கள் எளிதில் உற்பத்தியாகிவிடும். அதை நாம் குடிக்கும் போது வயிற்றுப்பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

பொதுவாக ஜூஸ் குடிக்கும் போது சிலர் அதில் சர்க்கரை போட்டு குடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அது நல்லதல்ல. இது உடல் எடையை கணிசமாக கூட்டிவிடும். ஏனென்றால் பழங்களிலேயே தேவையான அளவு சுக்ரோஸ் இருக்கிறது. இதில் கூடுதலாக நாம் சர்க்கரையை சேர்க்கும்போது அதன் முழு நன்மைகளும் கிடைக்காமல், கலோரியை அதிகரித்து விடும். ஆகவே சர்க்கரையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தற்போது உள்ள கணினி காலத்தில் வேலைக்கு செல்வோர் ஜூஸ் அளவுக்கு அதிகமாக போட்டு குடித்து விட்டு மீதியை குளிர்சாதனப் பெட்டி(பிரிட்ஜ்) வைத்து விட்டு, மீண்டு வந்து குடிப்பார்கள். இது பெரிதும் பலன் அளிக்காது. காரணம் அப்போது தயாரித்து அப்போதே குடித்துவிட வேண்டும். இதனால் முழு சத்துக்களும் கிடைக்கும். பிர்ட்ஜில் வைப்பதால் சில நுண் சத்துக்கல் அழிந்துவிடுகின்றன. ஆகவெ எந்த பழச் சாறையும் ப்ரஷாக குடித்து விடுங்கள்.

எல்லா வித பழங்களிலும் பால் கலந்து மில்க் ஷேக் குடிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும்.திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள். மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாம். மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது.

காய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்.
100

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் வெந்தயத்தில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
* பெண்களின் கருப்பை சம்பந்தமானப் பிணிகளை விரட்டும் ஒப்பற்றக் கீரை. வெந்தயத்தை முளைக்க வைத்து கீரைகளைச் சாறாகப் பயன்படுத்தும் சமயம் பல கொடிய பிணிகளை விரைந்து நீக்குகிறது. கசப்பானது. குளிர்ச்சியானது. குடல் புண்ணால் நெடுங்காலம் அவதியுறுபவர்கள் கூட வெந்தயக்கீரைச் சாறால் அருமையான நலம் பெறலாம்.
* ஆசனவாய் பிளவு, மூலநோய், அதிக அமிலத்தன்மை, ஒபேசிட்டி, உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும். பெண்களின் தீராவியாதிகளான மாதவிடாய் தொல்லைகள், சூதக வியாதிகள், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல், பெண் உறுப்பு அரிப்பு, காம்பு நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தருவது வெந்தயம்.
* இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
* ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, சிறிதளவு பெருங்காயத்தையும் வறுத்து ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். பொடியை தினமும் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
* மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
* ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
Pages: 1 ... 8 9 [10]