தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 275

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 275

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

எஸ்கே:

காதலனின் நினைவே என்னை விட்டு போக மறுக்கிறது!
காதலின் அத்தியாயம் எழுத நினைத்து!
அதன் வழியில் ஆசைகளோடு பயணித்தேன்!
ஆனால் இப்படி ஒரு பிரிவு ஏற்படும் என்று.
கனவிலும்  கூட நினைக்க வில்லை என் அன்பு காதலனே!

காதலின் பிரிவின் வலி என்னை கொல்லுதடா!!
உந்தன் நினைவே என் கண் முன்னே வந்து வந்து போனதென்ன!!
உந்தன் அரவணைப்பில் நான் எப்போதும்..
பிரிவின் வலியை உணர்ந்தது இல்லையே என் ஜீவனே!!
இதுநாள் வரை பிரிவு என்னும் சொல்லுக்கு..
நான் அர்த்தம் காணாது என்னை பார்த்துக் கொண்டாயே!!

உன் மூச்சு காற்றின் வெப்பம் கூட என்னுடன்...
இன்னும்  உறவாடி கொண்டு தான் உலாவுகிறேன்!!!
தனிமையின் பிரிவு தன்னை கொல்ல பார்க்கிறேன்!!!

உந்தன் நினைவு என்னும் மாய பிம்பத்தை வைத்து...
அந்த மாய பிம்பம் தன்னில்  நான் வாழ்கிறேன்!!!
எந்தன் காதலன் நினைவோடு💞

Mr Perfect:
எவ்வளவுதான் உண்மையாக நேசித்தாலும் அது சில நாட்களிலே மறைந்து விடுகிறது 💘

நீ என்னை மறந்தாலும் உன் உருவமும் நம் நினைவுகளும் என்றும் மறைந்து போகாது 💘

அர்த்தமில்லாத ஒரு சில சண்டைகளால் அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோசங்கள்
 வாழ்வில் தொலைந்து போகின்றன 💘

கனவாகி மட்டுமே போனது  சில ஆசைகளும் பல நிமிடங்களும் 💘

இருக்கும்போது புரிந்து கொண்டு அன்பு காட்டாத எந்த உறவும் 💘

இறந்த பின் அழுது நடிப்பதில் எந்த பயனும் இல்லை 💘

அளவுக்கு அதிகமான அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது பிறருக்கு கொடுக்கவும் கூடாது இரண்டுமே நமக்கு வேதனையை மட்டுமே தரும் 💘

உறவுகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் முதலில் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் 💘

புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தமுள்ளதாக தெரியும் 💘

புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தமற்றதாக தெரியும் 💘

ஏனெனில் நீ தந்த தனிமையில் தவிப்புங்களும் அதிகம் தழும்புகளும் அதிகம்  ஏக்கங்களும் அதிகம் ஏமாற்றங்களும் அதிகம் வெறுப்புகளும் அதிகம் வெறுமைகளும் அதிகம் 💘

நீ இல்லா வெற்றிடம் வெறுமையை மட்டுமே எனக்கு பரிசாக தந்தது💘

வருத்தங்களை மட்டுமே வாரி வழங்கி கொண்டிருக்கிறது💘

இன்றும் என்றும் காத்து கொண்டிருக்கிறேன் இளைப்பாற மனமில்லாமல்💘

உணர்வும் உயிரும் ஒன்றாய் கலந்து விட்ட பிறகு நமக்கு ஏன் பிரிவு💘

நம் உறவு மீண்டும் கைகோர்க்கும் என்று உனக்காக காத்திருக்கிறேன் நீ வேணும் நான் வாழ 💘

AgNi:


தனிமை  என்ற வாழ்க்கையை
பரிசளித்து  சென்றவனே.....
இதயம் வரைந்த ஓவியத்தை
இரக்கமில்லாமல் கொன்று சென்றவனே !

நீ சென்ற பின் ....
மனிதர்கள் அலையும் வெளியில்
மொழியில்லாமல்  அலைகிறேன்....
சலிக்கும்வரை உண்மை நேசத்தை
தேடி அலைந்துவிட்டேன் ...

மரணத்தின் விளிம்பு வரை
அழைத்து   சென்றவர்களையும்
மறக்காமல் மன்னித்து.....
அன்பு செய்து பார்த்துவிட்டேன் ...

திக்கு தெரியாத காட்டில்
திகைத்து வழி தேடி அலுத்து  விட்டேன் ...
சின்னச்சிறு தலைக்குள்  .... 
மலை அளவு புத்தகம் ஏற்றியும் விட்டேன்  ....

எதையோ தேடி ஓடி பயணம் செய்தும்
களைத்து விட்டேன் ............
மலைகளையும் நதிகளையும்
மரங்களையும் பறவைகளையும்
மானுடம் மறந்த மரணங்களையும்
தன் நல பிணங்களையும்
பார்த்து சலித்து விட்டேன் ....

சாவின் பள்ளத்தாக்கையும்
வறுமையின் தாக்குதலையும்
ஒருசேர பார்த்து ...
தூக்கு கயிரையும் தொட்டு  விட்டு
துயரத்தை  தூக்கி போட்டுவிட்டு ...
உயிரை மிச்சமாக்கி விட்டேன் ...

சாத்தியப்பட்ட வழிகளில்
வாழ்கை படி ஏறி வந்தபோதும்
என்னை துச்சமென எண்ணி
வீசி சென்ற உன்னை ....
நீ கொடுத்த வெறுமையை
நஞ்சென அருந்தி கொண்டு இருக்கிறேன்
அனுதினமும் .......

காத்து இருத்தல் சுகம் தான் ..
காதல் தோல்விக்கு பின்னான
சாதலின் வருகைக்கு .....!


Sun FloweR:
உலகெல்லாம் ஆழி சூழ்ந்து கிடக்க
உன் நினைவுகள் சூழ்ந்து கிடக்கின்றேன் நான்...

அவ்வப்போது நீ மூட்டிச்செல்லும் நினைவுகளும்
அவ்வப்போது நான் மூட்டிக்கொள்ளும்
கனவுகளுமே வாழ்க்கையாகிவிட்டது எனக்கு...

விழுகின்ற மழைநீரில்
கரைந்துவிட்ட கண்ணீரைப் போல
உன் நினைவுகளில் மூழ்கி மூழ்கி
கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருக்கிறேன்...

மொத்த சிறகுகளும் பறிக்கப்பட்ட
பறவையின் வேதனைக் குரலாய்
திசையெங்கும் பரவிக் கிடக்கிறது
எனது கதறல் ...

சோர்ந்து போன வேர்களின்
எச்சம் குடித்து உயிர் சுமக்கும்
கிளைகள் போல உன் நினைவுகள்
குடித்து உயிர் வளர்க்கிறேன் தினமும்...

அன்று உன்னோடு உரையாடினேன்,
இன்று உன் நினைவுகளோடு உரையாடுகிறேன்...
அன்று இரவுகள் சீக்கிரம் தீர்ந்தன,
இன்று நீண்டு கொண்டே செல்கின்றன..

நீ இல்லாத வெறுமையை
எதைக் கொண்டு நிரப்புவேன்?
உன் நினைவுகள் கொண்டு மட்டுமே
பசியாற்றிக் கொண்டிருக்கிறேன்...

வண்ணங்களைத் தொலைத்த
வானவில் போல உன்னைத் தொலைத்து
இரக்கமேயில்லாத இந்த வாழ்வின்
பிடியில் சிக்கி மனம் மரித்துக் கிடக்கும்
நான் உயிர் மரிப்பது எப்போது....?

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version