Author Topic: ~ வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை) ~  (Read 3746 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வார ராசி பலன் 28-01-2016 முதல் 03-02-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். நிர்வாகத் திறமை கூடும். முக்கியமானவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.
உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பொருளாதாரத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். தம்பதிகளிடையே சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் சந்திரன், சனியுடன் கூடி 8-ல் உலவும் நிலை அமைவதால் சுகம் குறையும். தாய் நலம் கவனிக்க வேண்டிவரும். நிம்மதி குறையும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. ஜலம் நிறைந்துள்ள இடங்களிலும் வழுக்கும் இடங்களிலும் செல்லும்போது பாதுகாப்பு தேவை. தியானம், யோகாவில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி காணலாம்.



அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்: ராகு, குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் செவ்வாயும், 8-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். மக்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும், ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பட்டங்களும் கிடைக்கும். நண்பர்கள் உடனிருப்பார்கள். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மந்திர சித்தி சிலருக்கு இந்த நேரத்தில் கைகூடும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறைகளில் வருவாய் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தெற்கு. வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை.பொன் நிறம், இளநீலம்.
எண்கள்: 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பயணத்தின் மூலம் காரியம் நிறைவேறும். புதியவர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 4-ல் குருவும், 5-ல் செவ்வாயும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சனி பலத்தால் உழைப்பு வீண்போகாது. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சீரான வளர்ச்சி தெரியவரும். 7-ல் புதனும் சுக்கிரனும் இருப்பதால் தம்பதியினரிடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்களில் விழிப்பு தேவை. தண்டனை, அபராதம் நேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு
நிறங்கள்: நீலம், கறுப்பு.
எண்கள்: 4, 8.
பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம் சொல்வதும் கேட்பதும் நல்லது. முருகனை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே!
கோசாரப்படி பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமாக உலவாததால் குடும்ப நலம் பாதிக்கும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. கொடுக்கல் வாங்கலில் விழிப்பு தேவை. பொய் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கடன் தொல்லை அதிகமாகும். செய்தொழிலில் கவனம் தேவை.
புதிய துறைகளில் ஈடுபட இந்த நேரம் சிறப்பானதாகாது. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை,சிற்பம், ஓவியம், தரகு துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தம்பதியினரிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைபடும். ஜாதகத்தில் நல்ல யோக பலம் உள்ள தசை, புக்தி நடப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
அதிர்ஷ்டமான தேதி: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.
திசை: வடக்கு.
நிறங்கள்: பச்சை. ரோஜா நிறம்.
எண்: 5.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் செவ்வாயும் 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நல்லவர்கள் உதவி புரிவார்கள். கொடுத்த வாக்கு காப்பாற்றப்படும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தெய்வப் பணிகள் கைகூடும். சாது தரிசனம் கிடைக்கும்.
இயந்திரங்கள், எரிபொருள், மின் சாதனங்கள், வெடிபொருட்கள், கட்டடப் பொருட்கள் லாபம் தரும். பொறியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். அலைச்சல் வீண்போகாது. மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பரம்பரையாகச் செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகத் திறமையாலும் செயல் திறமையாலும் சாதனை பல ஆற்றுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 6..9.
பரிகாரம்: நாகரை வழிபடவும். ஹனுமன் சாலீஸா படிப்பது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் கேதுவும் உலவுவதால் நல்ல நண்பர்கள் அமைவார்கள். உறவினர்களால் நலம் உண்டு. நிலபுலங்கள் லாபம் தரும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நிலை உயரும். மாணவர்கள் தங்கள் நிலையில் வளர்ச்சி காண்பர். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும்.
உடன் பணிபுரிபவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்க்கவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புடன் இருக்கவும். பொதுநலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். தம்பதிகளுக்குள் உறவு நிலை சீராகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உள்ளவர்கள் தெளிவான பாதையைக் காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிக்ள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, மெரூன்.
எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: துர்க்கையையும், முருகனையும் வழிபடுவது நல்லது.
துலாம் ராசி வாசகர்களே!
சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானமாக ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. சிறு விபத்துக்கு வாய்ப்புண்டு. எச்சரிக்கை தேவை.
குழந்தைகள் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியமாகும். தவறான தொடர்பை விட்டு விலகவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 31, பிப்ரவரி 3.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: குரு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் பணவரவு கூடும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும்.
செய்தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரும். உடன்பிறந்தவர்களால் சிறு சங்கடம் உண்டாகும். இடமாற்றமும், நிலை மாற்றமும் உண்டு. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். நிலபுலங்கள் விஷயத்தில் விழிப்புடன் ஈடுபடவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, பிப்ரவரி 3.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: முருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். இயந்திரங்கள், எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், மின் சாதனங்கள், செந்நிறப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
கலைத் துறையினருக்குச் செழிப்பு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வாரப் பின்பகுதியில் மனஅமைதி குறையும். வீண் செலவுகள் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. சிலர், குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டிவரும். தந்தைநலனில் அக்கறை தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். பக்குவம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.
எண்கள்: 6, 7. 9.
பரிகாரம்: விரயச் சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசநாதன் சனி 11-ல் இருப்பது விசேடமாகும். செவ்வாய், குரு, சுக்கிரன், ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.
எடுத்த காரியங்கள் நிறைவேறும். சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வளர்ச்சி உண்டு. சமுதாய நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தம்பதியர் உறவு நிலை சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மக்களால் நலம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. வீண் வம்பு வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 29, 31, பிப்ரவரி 3.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 8, 9.
பரிகாரம்: துர்க்கையையும், விநாயகரையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே!
புதன், சுக்கிரன், சனி ஆகியோர அனுகூலமாக உலவுவதால் வியாபார நுணுக்கம் தெரியவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும்.
ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, ஆதயமோ கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். குழந்தைகளால் செலவும் மன அமைதிக் குறைவும் உண்டாகும். அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 31, பிப்ரவரி 3.
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: சூரியனையும் நாகரையும் வழிபடுவது நல்லது.
மீன ராசி வாசகர்களே!
6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவதால் பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெற சந்தர்ப்பம் உருவாகும்.
அரசுப் பணியாளர்களது நிலை உயரும். விஞ்ஞானிகளும் ஆரய்ச்சியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிக்கவும். எரிபொட்கள், மின்சாரம், வெடிப்பொருட்கள், இயந்திரங்கள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. விளையாட்டுகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஜனவரி 29, பிப்ரவரி 3.
திசைகள்: வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 5.
பரிகாரம்: திருமுருகனை வழிபடவும். கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது.