Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73782 times)

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
வணக்கம் நண்பர்களே திருக்குறளை கண்டுபிடி இந்த விளையாட்டில் ஒரு திருக்குறளின் வரிகளில் இருந்து ஒருசில வார்த்தைகள் நீக்கப்பட்டு இருக்கும்
விடுபட்ட வார்த்தைகளை கண்டுபிடித்து அந்த குரலை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் இது தான் இந்த விளையாட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை வேறு ஏதும் வரைமுறைகள் இல்லை



உதரணத்திற்கு :
     
                        அகர முதல ---------------------- ஆதி
                        பகவன்
--------------உலகு.


மேலே கொடுகபட்டுள்ள குரலில் விடுபட்ட வார்த்தைகளை நிறைவு செய்து பதில் அளிக்க வேண்டும்

பதில் :
                          அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
                           பகவன் முதற்றே உலகு.

நீங்க ஒரு குரலை கண்டுபிடித்து பூர்த்தி செய்தபிறகு அடுத்து நமது நண்பர்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரலை நீங்கள் பதிவு செய்யலாம்

இதோ தொடங்குவோம் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல்

                           பல்லார் ------------ பயனில சொல்லுவான்
                           --------------------- எள்ளப் படும்


                    KING OF AYODHYA

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #1 on: July 17, 2011, 10:19:23 AM »
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

உரை: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல்


அன்பகத் ________ உயிர்வாழ்க்கை ________
வற்றல் __________ தற்று.



Offline maha

திருக்குறளை கண்டுபிடி
« Reply #2 on: July 17, 2011, 01:43:46 PM »
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

உரை:
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:


________ ராயினும்________  காவாக்கால்
சோகாப்பர்________  பட்டு.



Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #3 on: July 17, 2011, 02:07:42 PM »
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு....


நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல் :

கேடில் ____________ கல்வி ____________
மாடல்ல மற்றை யவை.

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #4 on: July 17, 2011, 02:26:32 PM »
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை



ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:

இனிய _____   _________ கூறல்
கனிஇருப்பக் _____ தற்று.

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #5 on: July 17, 2011, 02:34:19 PM »
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந்  தற்று


நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல் :

அழுக்கா__________ இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற ______

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #6 on: July 17, 2011, 02:53:15 PM »
அழுக்காறு அவா வெகுளி  இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.




நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது

உளர் .... ........அல்லால் .....
களார்.... அனையர் ..... .....
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #7 on: July 17, 2011, 04:35:03 PM »
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர்



 வையத்துள் _________ வாழ்பவன் _______
தெய்வத்துள் ________ படும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #8 on: July 17, 2011, 04:52:31 PM »
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள் :

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது :

அன்புற்று _____ வழக்கென்ப _______
இன்புற்றார் _____ சிறப்பு.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #9 on: July 17, 2011, 06:02:07 PM »
அன்பு உற்று  அமர்ந்த வழக்கு என்ப  வையகத்து
இன்புற்றார்  எய்தும் சிறப்பு .


இவுலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு  அவர் அன்புடையவராக பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர் ..

நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது :

பகல்வெல்லும் -------------இகல் ...
...................வேண்டும் -------------
                    

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #10 on: July 18, 2011, 08:56:15 AM »
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது


பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கண்டுபிடிக்கவேண்டிய அடுத்த குரல்


கொக்கொக்க -------------- பருவத்து -------------
குத்தொக்க ------------இடத்து

                    KING OF AYODHYA

Offline maha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #11 on: July 18, 2011, 10:14:09 AM »
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
 குத்தொக்க சீர்த்த இடத்து.



காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்


நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:

_________  விழுச்செல்வம்_________   யொருவற்கு
_________  மற்றை_________ .
« Last Edit: July 18, 2011, 10:22:10 AM by maha »

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #12 on: July 19, 2011, 09:00:44 PM »
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை


அடுத்த குறள் :

முகநக _________ நட்பன்று _________
அகநக _________ நட்பு. 

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #13 on: July 21, 2011, 08:02:48 AM »
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
 
பொருள் :

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
 
அடுத்த குறள் : 
அல்லவை  ________ அறம்பெருகும் ______நாடி இனிய ________

 




Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #14 on: July 21, 2011, 12:01:12 PM »

அல்லவை  தேய  அறம்பெருகும்  நல்லவை
நாடி இனிய  சொலின் .



ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை  ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்கு பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் ...


பொருள் ---------  ------------ ;அருள் ----------
------------ஆதல் ............ .