மலேசியாவில் பிரீஸின் பொங்கல்
நான் சொர்க்க வாசல்ல
ஊஞ்சலில் ஆடியபடி இருந்தேன்
இதமான ஒரு கனா
திடீர்னு நேரம் ஆகிடுச்சுனு ஒரு குரல்
அது என் சித்தியோட கனத்த குரல்
என் கபாலத்தை
சுத்தியலால அடிக்குற மாதிரி
டொக் ! டொக் ! என்ற சத்தம் ..
அந்த சத்தத்தில் அப்படியே
ஷாக் ஆகி எழுந்த இந்த பைங்கிளி
ஐயகோனு முணு முணுக்க ..
வேறு வழியே இல்லாம எழுந்து
குளித்து, புத்தாடை அணிந்து
இந்த மதி முகத்தாள்
எல்லாருமே பொறாமை படுற அளவுக்கு
என்னை நானே அழகுபடுத்தி
என்னை நானே கண்ணாடில பார்த்து
முன்னும் பின்னும் ஒரு லுக்கு விட்டு ..
வாவ் அப்பிடி சந்தானம் ஷ்டைல்ல
சொல்லி போகிறேன் கீழ் அறைக்கு....
வீட்டுக்கு முன்னாடி நேற்று
நான் கட்டின தோரணம் ஆட ..
பொங்க வைக்க நான் கட்டின செங்கரும்பு ..
அழகு சேர்க்க மஞ்சள்கிழங்கும் ...
பூஜைக்கு ரெடி பண்ணி வச்ச
பழங்கள் ஆப்பிள் ஆரஞ்சு கிரேப்ஸ் ..
ஹ்ம்ம் கிரேப்ஸ்னாலே என் வாய் ஊறிடும் ..
ஆஹா என்ன சுவை !
அதை அப்படியே அலேக்கா திருடி சாப்பிட்டு விட்டு
ஹலோ அப்புறம் என்ன பாஸ்னு
ஒன்னுமே நடக்காத மாதிரி
பழம் தட்ட எடுத்து
பூஜை அறையில் வச்சு ..
அப்புறமா என்னோட சித்தியோ
விறகு அடுப்பு பத்த வைக்க ..
பத்த வச்ச உடனே நாமெல்லாம் கை தட்ட .
மண்பானைய எடுத்து வச்சு பால் ஊத்தி ..
பால் பொங்குமா பொங்குமா
என காத்திருந்த நானோ
அந்த பொங்கல் நுரை
அப்பப்போ பொங்குற மாதிரி
வெளிய வந்து புஸ் என்று உள்ளே போக
நானோ செம கடுப்பாகி விட .....
அப்புறம் என் சித்தி கரும்பு வெல்லம் சேர்த்து
அதை கிண்டி ஒரு பக்குவம் வர
அதுல பாதாம் முந்திரி சேர்த்து
நெய் விட வாசம் மூக்கைத் துளைக்க
என் மனமோ “ஐயகோ எப்போபா பொங்கல் தயார் ஆகும்”
என ஏங்க…….
ஒரு வழியாக
பொங்கல் தயார் ஆக
சூர்யா எனும்
சூரிய கடவுளுக்கு படையல் போட்டு
பூஜை பண்ணி கடவுளை வணங்கி
ஐயகோ அந்த பொங்கல்
எப்போபா சாப்பிட தருவீங்கன்னு கோபம் அடைய
(வெளில கோபத்தை காட்டினா கண்டிப்பா
நமக்கு பொங்கல் கிடைக்காது ) ..ஆகவே
அத காட்டிக்காம சமத்தா நா இருந்ததால
பொங்கல் சோறு சாப்பிடுங்கனு சொன்ன
அந்த ஒரு நொடி
அவ்வ்வ்வ் எனக்கு பொங்கல் ரொம்ப பிடிச்சிருந்தது
கடைசியில பொங்கல் வச்சி
சூரிய கடவுள வணங்கி
பொங்கல் சாப்பிடுற சுகம் இருக்கே
ஹ்ம்ம் சுவையின் உச்சம் ! ..
நன்றி சொல்லவேண்டும் விவசாயிகளுக்கு .
அவங்க இல்லன்னா .சோறு அரிசி இல்லாம
பொங்கல் திருநாளே இல்லாம போய் இருக்கும் ...
ஆகவே வாங்க நண்பர்களே நாம எல்லோரும்
உழவருக்கும் கதிரவனுக்கும் எருதுகளுக்கும்
தலைவணங்கி நன்றி சொல்வோம்