பூமி அன்னை கருவில் பிறந்த
மானிட பிறப்புக்களின் மேன்மை,
புனித பிராணனும் வரமான உணர்வுகளுமே!
பிறப்பின் அர்த்தம் புரியா
மூட சமூகத்தின் மேன்மை,
காகிதமான போதை பணம் மட்டுமே!
உதிக்கும் பிஞ்சு நெஞ்சத்தில்
ஒருபோதும் கறையில்லை...
செல்வ ஆசை கொண்ட சமுதாயம்
களங்கமில்லா இள நிலவின் மீதும்
நஞ்சாய் பொழியச் செய்கிறது பணமோகம்!
பணக்கடலில் குளிக்கும் அறியாமை,
பால்மணம் மாறா சிசுவின் கரங்களில்
தொழில்நுட்பம் தந்து வேடிக்கை காண்கிறது...
பள்ளிமணம் தீண்ட வேண்டிய பருவத்திடம்
பசியின் வாட்டமும் வறுமையின் கோரமும் காட்டி
கைக்கட்டி நிற்கிறது...
பணத்திற்கு தான் சுய அறிவில்லை!!!
ஆறறிவு கொண்ட மனிதனுக்குமா
மனிதாபிமானம் துளியுமில்லை..?
தனத்தின் மழையில் நனையும்
தனி உள்ளம் நினைப்பின் உறுதியாய் முடியும்,
வறுமை விளையாடும் மொட்டுக்களின் வாழ்வை
அணைத்து,
கல்வி எனும் ஈரம் தெளித்து,
வாசமிகு வண்ண மலர்களாய் மலரச்செய்ய...
அந்த மணித்துளி உணர்த்தும் அம்மலருக்கு
பணத்திற்கும் தெரியும் மனிதத்தை நிலைநாட்டவென்று...!!!