இசைக்கு பிறந்தநாள்
இசை உலகில் உதித்த நாள்
இனிய இசைக்கு இந்த உலகமே மயங்கும்
அது போல
யாழிசைக்கு மயங்காத மனம் உண்டோ
கலகலப்பான சிரிப்பு
களங்கமில்லா பேச்சு
கட்டிப்போடும் அன்பு
கலைந்து போக முடியாத நட்பு
இவை அனைத்துக்குமே சொந்தமான
இசை எனக்கு நண்பியானது
இறைவன் தந்த வரம்
நட்பைத் தவிர ஏதும் இல்லை
நல்லதைத் தவிர வேறு சிந்தனையில்லை
நகைச்சுவை பேச்சிக்குப் பஞ்சமில்லை
அரட்டை அடிப்பதில் மிஞ்ச யாரும் இல்லை
தாயை காணாத குழந்தை போல
காணாவிட்டால் மனம் ஏங்கும்
கண்டுவிட்டாலோ சந்தோசத்தில் மனம் எகிறும்
பேசினால் மனம் இளகும்
கவலைகளும் பறந்து போகும்
இசையே எனக்கு ஒரு ஒரு அவா
இது பேராசையாகவும் இருக்கலாம்
என்றும் உனது களங்கபடமில்ல நட்பு
மாசு மருவற்ற உனது அன்பு
என்றும் எனக்கு வேண்டும்
என்றும் எனது உயிர் தோழியாக
நீ வலம்வர வேண்டும்