Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201  (Read 1950 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 201
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
உழவு நசிந்ததனால் நானும்
நிலவு க்கு பொழைக்க போனேன்
செலவு செய்ய காசு இல்லே
நிலவையே விற்க போறேன்...

களவு மனம் எனக்கில்லை
உழைக்கவும்  வழியுமில்லை
பிஞ்சு வயறு பசிப்பதனால்
பெற்ற வயறு துடிப்பதனால்
நிலவையே விற்க போறேன்...

ஓடி உழைச்சாலும் இப்போ
ஒருகாசு மிஞ்சலையே
கணவன் குடிக்க இப்போ
கை காசு காணலையே
நிலவை பிடிச்சு நானும் 
வீதியில விற்க போறேன்...

ஓலை குடிசையில்
ஒளிவீசி வந்தவளே
காதலர் கற்பனையில்
கனவாய் மிதந்தவளே
ஏழை என் கூடைக்குள்
எப்படித்தான் வந்தாயோ?

கூடைக்குள் வந்த நிலா
கூப்பாடு போடும் முன்னே
எடைக்கு எடையாக
யாரேனும் பொன்கொடுத்தால்
இறங்கி வரும் அவளை
இப்போதே விற்றிடுவேன்...
« Last Edit: October 08, 2018, 05:54:10 PM by பொய்கை »

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
அந்தி பதுங்கும் பொழுதினிலே
  பனிமழை வரப்போகும்  வேளையிலே
மானிடம் ஓய்வு நாடும் நேரத்திலே
  மின்னலையே கொய்யும் புன்னகையுடன்
பல ஏக்கங்கள் மனதினுள் தாளமிட
  வீடு திரும்புகிறாள் பொண்ணுத்தாயி...

கட்டாந்தரையின் தோல் நெய்யும் வெப்பமும்,
  வியர்வையின் நாசி வெறுக்கும் மணமும்
அவளின் இனிப்பான கனவுகளை கலைத்திடக்கூடுமோ...!

உழைப்பின் தீவிர அயற்சியும்,
  வறுமையின் அதீத வாட்டமும்
அவளின் வெறிகொண்ட முயற்சிகளை சிதைத்திடக்கூடுமோ...!

கல்வியேட்டின் வாசனையை
  தான் நுகராவிடினும்
அவள் வாரிசு நுகரவோ
  இப்பாடுபடுகிறாள்...!?
தன் பாதங்கள் ஏந்தும்
  சூட்டுக் காயங்களை
அவள் பிஞ்சு ஏந்தாதிருக்கவோ
  இப்பாடுபடுகிறாள்...!?

அவளின் கரு இரவுகள்
  வெண் பகலாய் மாறுமோ...!
அவளின் இம்சை வாழ்க்கையில்
  குதூகலம் குடியேறுமோ...!

ஒரு வரியாய் உள்ள உன் சீவியமும்,
  புகழ்பெற்ற காவியமாகுமே...!
ஒரு துளியாய் உள்ள உன்
காலமும்,
  ஆனந்தம் நிறைந்த சாகரமாகுமே...!

உன் அயரா முயற்சியால் உன் நகல்,
  ஓர் நாள் பெருமையேந்தி விண்ணை வெல்வான்!
உன் உண்மை உழைப்பால் உன் மகன்,
  ஓர் நாள் புன்னகையேந்தி மண்ணை ஆள்வான்!

இருளாய் இருக்கும்
  உன் வாழ்விலே
ஒளியேற்ற இதுவரை யாருமில்லையோ..?

கலக்கம் கொள்ளாதே தாய்மையே...!

உன் அவலம் கண்டுதானே
  ஒளிரும் கதிரவனும்
உன்னோடு வருகிறான்,
  உன்னை பதம் பார்க்கும் ஏழ்மைக்கு ஒளியேற்றவல்ல...
  நீ விடாது பின்தொடரும்
உன் முயற்சியின் பலனுக்கு ஒளியேற்ற...!!!
« Last Edit: October 08, 2018, 05:07:37 PM by AshiNi »

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
வாழ்க்கையில் போராட வேண்டி இருக்கிறது

வாழ்க்கையே போராட்டமாய் இருக்கிறது

பொறுப்பற்ற கணவனிடம்

போராட தைரியமும் இல்லை ..

உடலில் வலிமையும் இல்லை ..



வறுமை நிறைந்த எங்களுக்கு

வாழ வழியும் இல்லை இந்நாட்டில்

சோதித்து பார்ப்பதோ ஆண்டவனின்

விளையாட்டு..

பசியும் பட்டினியும் எங்களுக்கு

புதிதல்ல..

என்பிள்ளை வாழ்க்கைக்கு சேர்த்துவைக்க

கையில் ஒன்றும் இல்லை ..


வேறு தொழிலும் அறியாமல்

நடவு நட நானும் போனேன்

வியர்வை சிந்தி உழைத்த

கடமைக்கு கூலி கிடைத்த

இன்பத்திலே....


பச்சிளம் குழந்தையின் பசியை போக்க

அந்தி சாயும் மலையிலே

கதிரவனை ஏந்தி வந்தேன் வீதியிலே ..

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
கதிரவன் விற்பனைக்கு 

கருவாகி  உருவாகினேன் 
அன்னை மடியில் ...
கள்ளிப்பாலில்  தப்பித்து  ...
கனவுலகை  ஸ்தாபித்து ...
பிள்ளை  பருவத்தை 
அடுக்களையில்  பறிகொடுத்து  ...
பருவ  வயதில் பெண்மையை 
காக்க  ஓடிகளைத்து  ....
தந்தை எனும்  ஆண் சமூகம்  விட்டு...
கணவன்  எனும் ஆண்
கரம்பற்றி
கனவுகளை  விற்று   அடிபெயர்தென்
புகுந்த  வீடு  எனும் புகலிடத்தில்  ....
என்னையும்    பெண்ணாய்
உணர  வைத்து  மகவு  எனும்
மாணிக்கத்தை  தந்து 
இறைவனடி   சேர்த்தனன்...
 மகளாய்,  சகோதரியாய்,
மனைவியை  , மருமகளை
பிறருக்காக  வாழ்ந்து   வாழ்ந்து
சிதிலமாகி  போன  என் வாழ்வை 
புதுப்பிக்க  வந்த எனதருமை 
மகள்  /  மகன்  காக  ...
கனவுகள் தொலைத்த 
நான் கதிரவனை  விற்கிறேன்  ...

வீழ்வேனென்று   நினைத்தாயோ
சமூகமே... சமுகமே...

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


சூரியன் பிம்பத்தை ....
தூக்கி பிடித்த நிலா..

சுமந்த  கூடையும் ...
ஓவியமாச்சு !

கையில்  பிடித்த  குட்டி  நிலவும் ...
ஊர் வலம்  போச்சு ....

உழைத்த  களைப்பு  ..
தெரியும்  விழிகளிலும்..

பரந்து வலிக்கும்  ...
பாரத்தை சுமக்கும்...
பத்து  விரல்களும் ...

நடையில் தெரியும் ...
சிறு  அயர்வும் ...

மழலை பிடித்த..
தோள் வலி கைகளுக்கு ....

கை  வீசி  நீ  நடந்தாலும் .
அழுக்கு உடையிலேயும்...

உன்  அழகிய  சிரிப்பில் ...
அலை   பாய விட்டாய் அடி!

கால்  கடுக்க ..நீ  நடக்கையில் ...
உளவு  பார்க்கும்  கதிரவன் ....

உன்  கூடையில்  குடியேறியது  ஏன் .?
பொதி  சுமக்கும்  உன்னை ..
நெஞ்சில்  சுமப்பவர்  யாரோ ....

வாழ்க்கை பயணம்...
வெகு  தூரம்  இருந்தாலும்.....

வாழும்  முறையும் ...
வகுத்து  தந்தது அல்ல ....

ஆனாலும்  உன்  நடையில் ...
தெரிகின்ற   கர்வம் ...
உலகை வென்ற..
பெருமிதம் காட்டுதடி...


Offline ReeNa

இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
இரு நிமிடம் சூரிய கதிர்கள் என்னை தொட்டது
இயற்கை உயிர் ஊட்டிய சூரியன்
இயலாமையில்  இருந்த என்னை பார்த்து சிரித்தது

அந்தி  நேரம் ஆனந்த நேரம்
அலைந்து தீர்ந்த கால்கள் ஓய்வெடுக்கும் நேரம்
கூடையில்  எடுத்து  செல்ல ஒன்றும் இல்லாமல் கசந்தேன்
கூடவே வந்த செல்லப்பெண்ணை நினைத்தேன்
வாடிய அவள் முகத்தை புன்னகை செய்ய

வானத்தின் அலங்காரமாய் இருந்த சூரியனை
வாடின என் பெண்ணுக்கு  பரிசாய் குடுக்க எண்ணினேன்
ஓரமாய் கள்ள சிரிப்பை சிரித்தேன்
ஒற்றை பாதையில் வேகமாய் கூடையில்
சூரியனை அள்ளிக்கொண்டு ஓடினேன்

ஒளித்து வைக்க வழி தேடினேன்
கதிரவன் உஷ்ணம் என்னை வாட்டியது
பிரபஞ்சமே அவனை தேடியதால்
அவனை சிம்மாசனத்துக்கே அனுப்பிவிட்டேன்

சுட்டெரிக்கும் சூரியனை
சுட்ட பெருமை எனக்கே உரியது
மனதில் தோன்றியது 
ஒரு புதிய நம்பிக்கை!!   

Offline SweeTie

வாய்   வயிற்றைக் கட்டி  சேனையில பயிர் செஞ்சு
சேய்  வயிற்றை நிரப்ப காலையில போனவள் நான்
சாய் பொழுது வேளையில சந்திரனும் உதிக்கையில
போனவளை காணல்லன்னு  தேட யாரும்  இல்லாம
ஓலை குடிசையில  ஒண்டியா  வாழ்கிறவள்   

சீர் சிரத்தை இல்லாம  செஞ்சுவைச்ச கலியாணம்
சொந்த பந்தம்  தொலையாம  செஞ்சுவைச்சா  பெரியவங்க 
மருதாணி வைச்சு அழகுபார்த்த ஆச மச்சான்
 கால  புடிச்சு கால் கொலுசு போட்ட மச்சான்
இன்று  சீர் வரிசை கேட்டு  காலால் அடிக்கிறானே

பால்போல் நிலவெறிக்க  பாய் விரிச்சு படுத்த திண்ணை
உண்ட களைதீர  உருண்டு படுத்த திண்ணை
இப்ப  வெறிச்சோடி போய்கிடக்கு மச்சானும் போயாச்சு
ஊர்க்கண்ணு  உறவுக்கண்ணு  நாய்க்கண்ணு நரிக்கண்ணு
யாரு கண்ணு பட்டுச்சோ   எங்க உறவும் போயாச்சு

பொண்ணாக  பொறந்துட்டா கண்ணுறக்கம் ரெண்டுமுறை
பிறப்பு ஒரு உறக்கம்  இறப்பு  மறு  உறக்கம்
பெத்தவனும் போயாச்சு  கொண்டவனும் போயாச்சு
அப்பன் இல்லாப்  புள்ளைக்கு  அப்பனுமாய் நானிருக்கேன்
அரை வயிறு  நிரம்ப  ஆடி ஓடி  உழைக்கின்றேன்


 

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
எல்லா பெண்ணையும் போல் தான்
என்கனவும் சிறகடித்து பறந்தது
கன்னி பெண் வயதில்

மன்னனின் மகளும் அல்ல
அரண்மனை இளவரசியும் அல்ல
அது என் தவறும் அல்ல

தினம் உழைத்து தின கூலி வாங்கி
தினம் தினம் செத்து  பிழைக்கும்
நாடோடியாய் வாழ்வது தான்
நான் வாங்கி வந்த வரமா ?

எந்த கவலையும் இல்லை
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
இந்த சூரியன் மட்டும் தினம்
உதிக்க வேண்டும் என்பதை தவிர

காய்கறிகளை கூடையில் விற்று
கிடைத்த காசு என் மடியில் உண்டு
என் கை பிடித்து நடக்கும்  என் குட்டி
மகள் உடன் உண்டு

ஒரு வாரமாய் பெய்த மழையில்
பசி மறந்து தண்ணீரே மருந்தென்று
இருந்தோம்

மழையில் காணாமல் போன சூரியனும்
இதோ
இன்று தான் காலை தான் உதித்திருந்தான்

இன்று என் மகளுக்கும், கணவனுக்கும்
பிடித்த உணவு சமைத்து
இரவு வரும் நிலவின் ஒளியில் அமர்ந்து
சாப்பிட வேண்டும்

கட்டாந்தரையில் பாய் விரித்து
மகளுக்கு நிலவை காட்டி
தாலாட்டு பாடிட 
மகளும்,, என்  கணவனும்
என் மடியில் தூங்கிட வேண்டும்

இன்பம் என்றும்  இது போதும்
இரவு இது நீண்டிட வேண்டும் என்று தான்

இதோ

இந்த சூரியனை கூடைக்குள் இட்டு
ஒளித்து வைக்க இடம் தேடி ஓடுகிறேன்

நீங்களும் சொல்லிடாதீங்க
சூரியனை காணாளனு பிராது
ஏதும் குடுத்திடாதீங்க  ;D ;D ;D

                    ****ஜோக்கர் ****

« Last Edit: October 09, 2018, 12:12:59 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "