நான் பிறந்த செழிப்பு மிக்க தேசமே...
என்னை வாழ வைக்கும் தேசமே...
நான் அதிகம் நேசிக்கும் தேசமே...
இன்று தேசத்தில் மக்கள் சக்தியால்...
சக்தி வாய்ந்த அரசுகளும்...தலைவர்களும்
தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள தேசமே...
தேசத்தில்...
புதிய சட்டங்கள் பிறந்து
பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு
இன்று பணத்தை செலவழித்தால் தேர்தலில் மட்டுமல்ல
வாக்காளர்களையும் வெற்றி பெற்று விடலாம் என்ற மனநிறைவும்
பின் செலவழித்த பணத்தை திரும்ப பெற...
பல மடங்கு ஊழல் செய்யும் நிலையும்...
கண்கொள்ளாக் காட்சியாக...
படமெடுத்துக் காட்டுகிறதே...
வாக்காளர்களே...
வாக்களிக்க மறக்காதவர்களே...
வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும்
பணம்,இதர சலுகைகளை எதிர்ப்பாராமல்...
தங்கள் கைகளிலுள்ள ஆயுதத்தைக் கொண்டு...
ஜாதி, மதம், இனம் பாராமல்
நீதியோடு...நேர்மையோடு...துணிந்து நின்று...
மாபெரும் சட்டமைக்க உறுதியோடு போராடுங்கள்...
வாக்களிக்க பதிவு செய்யாதவர்களே...
வாக்களிக்க மறந்து போனவர்களே...
வாக்களிப்பது என் கடமை...
அது என் உரிமை...என்று
சிந்திக்க மறந்தது ஏன்?...
வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது
என்பதை ஆழமாக இதயத்தில் பதிவு செய்து...
தேசம் பற்றெனும் காந்தம் கொண்டு
கண்ணியமாக வாக்களியுங்கள்...
வாக்களிக்கும் குடிமகன், குடிமகள், குடிமக்கள்
என்பதில் பெருமை கொள்ளுங்கள்...
என்றும் அன்புடன்,
உலக தேசங்களுக்காக
திறப்பில் முழங்காலில் நிற்கும்
ஜெருஷா JSB