சுவரோடு தலை சாய்ந்து
கற்பனை தனில் மூழ்கி...
கண்ணீரில்
உனை வரைகின்றேன்...
என் முன்னே
பிம்பமாய் வருகின்றாய்...
காற்றினில் கண்கட்டி
வித்தை காட்டும் - அந்த
கானல் நீரினை போல...
மறுகணமே
மறைந்து போகின்றாய் எனை நீங்கி...
மாயையாக கூட
ஒரு மணித்துளியேனும்....
எனக்காக
நீ இல்லை என்றானவனாய்...
உனை.........
பார்த்த நொடி முதல்
பிரிந்த இந்த நொடி வரை...
பழகிய நாட்கள் எல்லாம்- எனை
பந்தாடிச் செல்கின்றதே
உறங்காத இராப் பொழுதுகளோடு...
நிஜம் இல்லையேல்
ஓர் நிழல் தோன்றுமோ...
நீ இல்லையேல்
என் நெஞ்சம் தூங்குமோ...
நீங்காத உன் நினைவுகள்
நிதம் என்னை கொல்லுதடா...
நடைப்பிணமாய் நான் அல்லோ
நாலு சுவற்றுக்குள்ளே...
உனைப் பார்க்க
உள் நெஞ்சம் ஏங்குதடா...
உன் கை கோர்த்து
தோள் சாய ஓர் நொடி வேண்டுமடா...
வார்த்தை இன்றி
தவிக்கின்றேன் என் வலிகள் சொல்ல...
கேட்டுப்பார்,
வழிந்தோடும் விழிநீர் தாங்கிய - என்
தலையணை கூறும் அதை மெல்ல...
எனை நீங்கிச் சென்றாலும்
உனை தாண்டி என் உள்ளம்
இன்னோர் உறவை தேடாதே...
ஒருவேளை.........
இறுதி வரை நீ வரவில்லை என்றால்........
விலகிச்சென்ற உன்னிடம்
ஓர் விண்ணப்பம்........
வலிகள் சுமந்த என்னுயிர்
மாண்டு விழும் நாள் வரும்- அன்று
உன் மடி தருவாயா
எந்தன் தேகம் தாங்கும்
உறங்கு மேடையாக
இப்பூமி என்னுடல் ஏந்தும் முன்...
பாரடா எனதன்பே
காற்றோடு கலந்த- என்
கண்ணீர் துளியின்
ஈரம் இன்னும் காயவில்லை...
அதற்குள் மறுபடியும்
வந்து, மறைந்து செல்கின்றாய்
மாய பிம்பமாய் என் முன்னே....
அன்புடன் Hunter