வாழ்க்கை
என்பது
போர்க்களம்...
வாழ்ந்து பார்
வசந்தமான
பொற்காலம்...
உலகம் என்பது
உனக்காக...
கலகம் என்பது
எதற்காக...
கடமை என்பதை
கண்ணில் வை...
கவலை என்பதை
மண்ணில் வை...
உண்மை என்பதை
உன்னில் வை...
உணர்வு என்பதை
உள்ளத்தில் வை...
உயர்வு என்பதை
உயிரில் வை...
அடக்கத்தை
அள்ளி வை...
ஆணவத்தை
தள்ளி வை...
பொறுமையை
சொல்லி வை...
பொறாமையை
கொள்ளி வை...
வெற்றியை என்றென்றும் தக்க வை!!