Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 182  (Read 3337 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 182
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 12:33:40 PM by MysteRy »

Offline thamilan

இந்தியத் தாய் நாடே
அடிமை விலங்கினை உடைத்திட
அந்நியனை விரட்டிட
எத்தனை போராட்டங்கள்
எத்தனை உயிர் பலிகள்

சுதந்திரம் கிடைத்தது
நாட்டுக்கு மட்டுமே
பெண் விடுதலை வெறும் ஏட்டில் தான்
இந்திய தாய் நாட்டில் இல்லை
இந்த பாரத மாதா
துயில் உரியப்படுகிறாள் தினமும்

இந்தியாவை தாய் நாடு என்பர்
கடலை  கடல் அன்னை என்பர்
நிலத்தை பூமா தேவி என்பர்
அஃறிணையான பொருட்களுக்கெல்லாம்
அன்னையவள் பெயரை சூட்டிடும்
நம் மனிதகுலம்
உயர்திணையான மதிப்புமிக்க பெண்குலத்தை
அஃறிணையை விட கேவலமாக
நடத்துவதும் ஏனோ

பெண் என்பவள் இன்பம் கொடுத்திடும்
ஒரு கருவி
பிள்ளை பெற்றிடும்
ஒரு இயந்திரம்
காலை முதல் மாலை  வரை  பணிகள் செய்திடும்
ஒரு பணிப்பெண்
மொத்தத்தில் பெண் என்பவள் ஒரு அடிமை
இது தானே உலகம் பெண்களுக்கு கொடுத்திடும்
சான்றிதழ்

ரயிலில் கற்பழிப்பு
ஓடும் பேருந்தில் மானபங்கம்
காதலை மறுத்த பெண்
குத்திக் கொலை
தினமும் வரும்  செய்திகள் இவைதானே

வக்கிரமம் பிடித்த ஆணினம்
கையில் பெண்கள்
குரங்கு கையில் கிடைத்த பூமாலை
கடவுளுக்கு சாத்த வேண்டிய பூமாலையை
காலில் போட்டு மிதித்திடும் குலம்
இன்றய   மனித குலம்

இந்த நிலை மாறும் வரை
இந்திய வரைபடம் மட்டுமல்ல
உலகத்தின் வரைபடமே
அவலட்சணமாகத் தான் தோன்றும்
« Last Edit: April 16, 2018, 01:52:27 AM by thamilan »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
எத்தனை எத்தனை கனவுகளோடு
என்னை  கருவில் சுமந்து
பேறுகால கஷ்டங்களையும் சுகமாய் உணர்ந்து
என்னை  பெற்றுயிருப்பாய் அம்மா!!
நம் குலம் சிறக்கவந்த குலவிளக்காய்
பூரித்து பூஜித்திருப்பாயே!!!

ஈனசமூகத்தின் வன்மபார்வைக்கு நான்
தெருவிளக்காய் தெரிந்திடுவேனென முன்பே அறிந்திருந்தால்
உன்கையால் கள்ளிப்பாலை கொடுத்து
என்னுயிரின் மேலான மானத்தை காத்திருப்பாயோ!!!

போய் தொலைவோம் உலகை துறந்து
நம்மை வெறும்சதையாகவும் போகப்பொருளாகவும்
பார்த்துவதைக்கும் ஆண்வர்கத்தின் முன் சதைப்பிண்டமாய்
வாழ்வதை விட மரணம் கொடித்தல்ல

வாழவழியற்று ஓடத் துரத்தியடிக்கும்
ஆண்களோடு போராடும் பெண்களாக
நித்தம் பார்வைகளாலும் செய்கையினாலும்
துகிலுரிக்கப்பட்டு கேட்க நாதியற்று
அற்பபுழுக்களாக கூனிக்குறுகி வாழ்வதைவிட
மாசற்ற எம்தாயின் கருவிலே
காற்றோடு கவுரவமாக கரைந்துபோயிருப்போமே!!


நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மனிதர்களை காண்கையிலே...

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
பெண்மையின் மகத்துவம் அறியா
    மானிடமே விரைந்து வாரீர்
ஓவியமே ஓர் காவியமாகி
    கதை பேசுகிறதிங்கு...

சாதனைப் படைக்கும் சாம்ராஜ்யமே
    பெண்மைக்குள் அடக்கம்
இன்னும் மிகையாக வேறெப்படி
     நவில்வது விளக்கம்...

கன்னியவள் நினைப்பின்
     பாரதமாதாவாக மட்டுமல்ல
அண்ட சராசரமாய் மாறிடினும்
       அதிசயம் ஒன்றுமில்லை

பெண்ணின் எண்ணம்
       மண்ணையும் பொன்னாக்கும்
பெண்ணின் வன்மம்
       கடல்நீரையும் எரிமலையாக்கும்

பெண்மையின் அசைவுகள்
      சாதனைகள் படைக்கும்
புரிந்து உணரின்
       வையகம் சிறக்கும்

பெண்ணவள் பெருமை
     வரிகளில் மட்டும்தான்
உயிர் வாழ்கிறது
     இயல்பு நிலை சிந்திப்பின்
பேனையும் சீற்றம் கொள்கிறது...

தேசமே அவளுக்குள் அடக்கமாம்
     எனினும் அவள் கனவுகள்
என்றென்றும் முடக்கமே...

கண்களில் கண்ணீரும்
    இதயத்தில் ரணங்களும் தந்தே
சமுதாயம் விநோதம் கொள்கிறது

அவள் கால்கள் ஓடுகிறது
     கனவுகளை தேடியல்ல!
அராஜகமும் பலாத்காரமும்
     மரதன் களத்தில் துரத்துவதால்...

என்று தான் விடியும்
      என ஓடும் பெண்மைக்கு
காமக் கொடூரத்தையும்           
      அடிமைத்தனத்தையும் கைகழுவி
கரம் கொடுங்கள் சமுதாயமே!

அன்று ஒரு ஓவியன்
     நிச்சயம் வருவான் !
அன்பாலே உருவான
      தேசம் எப்படி வரைவது
 என விடை தேடி...

Offline JeGaTisH

பெண்னை ஒரு தெய்வமாக வணங்கும் நாடே
பெண்ணை ஓட ஓட துரத்துகிறதே

அன்று பெண்களை போற்றிய கைகள்
இன்று ஆனதேனோ அவளை சூறையாடும் கைதிகள்

உயிரை படைக்கும் சக்தி பெண்ணிடமே உள்ளது
அவளை அழித்தால் அழியும் உலகு முடிவு
உன்னிடமே உள்ளது

அன்புக்கு இலக்கணம் அம்மா
அவள் அன்பையே இழிவாக்குவது தகுமா

அச்சத்தின் விளிம்பில் இருக்கிறாள் பெண்
அவளை காப்பாற்ற வேண்டிய நாடோ சதியின் பின்

வீதியில் காலடி எடுத்துவைக்க தயங்குகிறாள்
அவள் வாழ்க்கையின் பயத்தை எண்ணி

சுதந்திரமான குடிமக்கள் இருக்கும் நாட்டிலே
சுதந்திரம் இல்லையே பெண்களுக்கே

பெண் என்பவள் நாட்டின் கண்
அவளை இழிவு படுத்தினால்
நம் வாழ்க்கை மண்

 அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
« Last Edit: April 18, 2018, 04:02:03 PM by JeGaTisH »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........

பக்தியோடு பார்த்தாய் 
தெய்வமாய்
ஆதலாலோ என்னவோ 
சந்நிதானத்திலே
வைத்து சமாதி கட்டுகிறான் ....

இலகுவான மனதோடு
இருப்பவளை ஏனோ உவமைக்காய்
 நிலவோடு ஒப்பிட்டு
பெருமை பிதற்றுகிறான்   ....

அறிவுவளர்க்க ஆசானிடம்
சென்றால் கனிவோடு நடவாமல்
களியாட்டம் ஆடுகிறான்  ....

கடைக்கண்ணி செல்ல
அண்டை வீட்டில் விட்டாலும்
பசுந்தளிர் என்றும்
பாராமல் பாம்பாய்
முழுங்க துடிக்கிறான் ....


பெண் சிசுவென, இருந்தாலும் 
காப்பது அரிதாகி போகிற
எழுபதாண்டுகளை கடந்த சுதந்திர இந்தியா
தீர்வு தான் என்ன ?

சாட்டையை கையிலெடுத்து
சட்டத்தை மாற்று
மிருகமாய் மாறினவனை
மிருகக்கூண்டில் அடை
செய்வதறியாது மரணபயத்தை
அவனும் உணர்ந்தே மரணிக்கட்டும் .....

மகள்களை அரவணைத்து
காத்த பெருமிதத்தில்
என் சுதந்திர தேவி
தலைநிமிர்வாள் .......
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline SweeTie

பாரதமே ! ஓவியன் என் விழிகளில் நீ அழகு மங்கை
கவிஞன் என் கற்பனையில்  இளைய கன்னி
குழந்தை நான் கொஞ்சி விளையாடும் அன்பு அன்னை
வந்தோரை வாழவைக்கும் எங்கள் குலமாதா

கங்கையும் காவிரியும் வைகையும் புரண்டடோட 
உழவுக்கும்  தொழிலுக்கும் வந்தனை செய்தோம்  அன்று
பசும் வயல்வெளிகள்  வெறிச்சோறி போனதுடன்
உழவர்களை வாழவைக்க  நீருமில்லை
வேற்று நாட்டிடம் கையேந்தி வாழ்கிறோம்  இன்று

அடிமை வாழ்வு வேண்டாமென  நீ பெற்ற சுதந்திரம் எங்கே
அஞ்சுக்கும் பத்துக்கும் அலையும் அரசியல்வாதிகள் கையில்
நீயும் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டாய்  தாயே
நீயும் பெண் என்பதால் உனக்கும் இக்கதியோ  இன்று 

பெண்மையை போற்றிய  பாரத தேசம் எங்கே
புகலிடம் தேடி அஞ்சும்  பெண்கள் நிலை  இங்கே
கொலை களவு பொய் புரட்டு   பித்தலாட்டம்  இவை தாண்டி
பெண்கள் படுகொலை  பெண்கள் கற்பழிப்பு 
பஞ்சமாபாதகத்தின் உச்சக் கட்டம் .

 கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்களை கொன்றதுபோய்
பாலியல் வன்முறையால்  பெண்வர்க்கம் அழிகிறது இன்று
காமுகனே  உன்  மனசாட்சியை தொட்டு பதில் சொல்
பெண்ணினம்  செய்த பாவம்தான் என்ன ?

உன்னை பெற்றவளும்  பெண் என்பதை மறந்தாய்
உன் கருவை சுமப்பவளும்  பெண் என்பதை மறந்தாய்
உடன்பிறந்த  பெண்களையும்  மறந்தாய்
பெண் என்றால் பேயும் இரங்கியதாம்  முன்பு
பேயும்   பெண்ணானால் விட்டுவையான் இன்று.

யாரிடம் செல்வோம்   யார்கெடுத்துரைப்போம்
பெண்களை அற்பமாக  நினைக்கும்  ஆணாதிக்கம் ஒருபுறம்
பெண்களை போதைப்பொருளாக எண்ணும்  காமுகர் மறுபுறம்
கூறு போட்டு கொண்டாடும்  கொலைகார கும்பலுடன்
 இவற்றை கண்டும் காணாமல் இயங்கும் அரசாங்கம்

இத்தனைக்கும் யார் பதில் சொல்லபோகிறார்கள்?
படைத்த இறைவனா?   தூக்கி வளர்த்த   சொந்தங்களா?
வாழ்ந்த சமூகமா?   இல்லை எதுவுமே தெரியாததுபோல்
கண்மூடி காமுகர்களை வளர்க்கும் அரசாங்கமா?

பதில் சொல்லுங்கள்!!!




 
« Last Edit: April 24, 2018, 07:12:22 PM by SweeTie »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
அன்று இந்திய தேசம் போற்றியது
பாரத மாதாவின் பெண்ணியம்
இன்று அதுவே போராட்டமானது
காக்க வேண்டிய அவள் கண்ணியம்

தாயாய் தாங்கியவள்
சகோதரியாய் நேசிப்பவள்
தோழியாய் தோள் கொடுத்தவள்
தாரமாய் துணையானவள்
இத்தனையும் செய்யுமிவள்
போற்றப்பட வேண்டிய பெண்ணானவள்

அவள் கண்ணியம் காக்க வேண்டிய
சமுதாயம் கை கட்டி நிற்கிறது
பெட்டிக்குள் பூட்டிய சட்டங்கள்
வெளிவரத் துடிக்கிறது

நீதி தேவதை நியாயம் சொல்ல
பார்ப்பதில்லை யாரென்று
அவள் கண் கட்டை அவிழ்க்க
முயல்கிறார்கள் கயவர்கள்
பணம் எனும் போதை கொண்டு

தலைமுறைகள் தாண்டிய பின்னும்
இந்த தவறுகள் நடப்பதேனோ
பெண் சமத்துவத்தின் சிறப்பு
மனதினிலே பதியப்படாததினாலோ


இனி வரும் சந்ததிக்கே
இந்த சிந்தனையை விதையுங்கள்
பெண்ணியம் போற்றிட என்று
அவர்கள் கவனத்தில் பதியுங்கள்


                         **விபு**

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பாரத தாய்
அவளிடம்  இன்று
புதியதாய் ஒரு வண்ணம்
கண்டேன்

இவ்வண்ணம்
வறுமையின்
வண்ணமல்ல

மங்கை அவள்
நெற்றியை
அலங்கரித்த
வண்ணமுமல்ல

கன்னி அவள்
கைகளை
மருதாணியிட்டு
வரவைத்த
வண்ணமல்ல

பிறந்ததும்
தொப்புள்கொடி
வெட்டியதும்
வந்த வண்ணமல்ல

பெண் குழந்தை
என தெரிந்தும்
கள்ளிப்பால்
கொடுக்காமல்
வளர்த்தெடுத்த
பெற்றோரின்
மனது விரும்பிய
வண்ணமல்ல

கணவனை
தெய்வம் என கொண்டு
அவன் இறந்தால் உடன் கட்டை
ஏறியதும் வந்த வண்ணமல்ல

இது
அபாயத்தின்
வண்ணம்

பிஞ்சு உடலை
பஞ்சு என கொண்டு
பிய்த்தெறிந்ததும்
தெளித்த குருதியின்
வண்ணம் இது

இது வண்ணம் என
கொண்டாடும்
பேதைகளின்
வன்மம்
எதை கொண்டு இதை
களைய போகிறோம்

கள்ளிப்பாலுக்கு
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்

உன் சாதிக்கு இரையாக்க
பார்த்தீர்
தப்பித்தாள்

மாய காதல் வலையில்
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்

உடன்கட்டை ஏற்ற  நினைத்தீர்
தப்பித்தாள்

தப்பி பிறந்தவள்
வாழ்வதே தப்பு தானோ ?

யார் இதற்கு காரணம்
சட்டமா ? இந்த நாடா ?
இல்லை இந்த நாட்டின்
அரசியல்வாதியா ?

இல்லை
மாற்றம் உருவாக
வேண்டும்
மக்களாகிய
நம்மிடமிருந்து

பெண்மையை போற்றுவோம்
தாயை போற்றுவோம்
தாய் நாட்டை போற்றுவோம்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "