அண்ணனை அடிக்காத நாளும் நாள் அல்ல...
அவனிடம் அடி வாங்காத பொழுதும் பொழுதல்ல..
அவன் பணி முடிந்து வரும் வரை காத்திருந்து...
அவனை திட்டுவதிலும்.... திட்டு வாங்குவதும் ஒரு சுகமே...
சண்டையிட்டே சண்டையிட்டே பாசம் பகிர்ந்தவனே!
தலையில் கொட்டி தவறுகளை உணர்த்தியவனே!
ஆயிரம் பேர் அவனை சூழ்ந்திருந்தாலுமே! அவன் விழிகளோ !
அவன் தங்கை! எனை காத்து நிற்கும் அரணாகுமே!
அன்புக்கு நானென முகம் காட்டும் உறவானவன் நீ
அம்மா அப்பா கலந்து நிற்கும் உருவானவன் நீ
அன்னை கட்டா தொட்டிலை... அண்ணா கட்டி காட்டிடவே
மறுபடியும்... பிறந்து தவழ்ந்தேன் அவன் கைகளிலே!!!
அன்பு அரணாக ஓர் அண்ணன் நிற்க... மறுபுறமோ!!
குறுகுறுவென வம்பிழுக்க தோணும் சின்ன அண்ணா!!
தங்கை தங்கை என சுழன்று சுழன்று அண்ணா வந்தாலுமே!
எனக்கு ஏனோ.. நீல நிற கார் ஒன்று கை அசைத்து சிரிப்பது போல் பிரமை....
அண்ணன் அறியாது அவன் இஷ்ட டீ-ஷர்ட் மறைத்திடுவேன்..
அவன் தேநீர் கோப்பையில், குறுந்செடி வளர்த்து கொடுத்துடுவேன்.
அவனின் தொப்பிகளில் பூங்கொத்து சேர்த்து மேஜைகளை அழகாக்குவேன்
கைக்கடிகாரங்களை என் பூனைகளுக்கு கழுத்திலிட்டு சதிராடுவேன்
அண்ணனிடம் வம்பிழுத்து அடிவாங்குவதே! அலாதி!!
அறிவுக்கு அறிவாய் நின்று வழி கட்டியவன் நீ
தயங்கிய தருணங்களில் தட்டி கொடுத்தவன் நீ
எட்டமுடியாதென நின்றவளை எட்டாவது இடம் தொடசெய்தவன் நீ
என் புத்தகங்கள் நடுவே சிரிக்கும்... பொக்கிஷ அண்ணா நீ!!!
இரத்த சம்பந்தமும் இல்லை... தொப்புள் கொடி உறவும் இல்லை..
ஊரும் ஒன்றில்லை... முகங்களும் அறிந்ததில்லை - இருந்தாலும்
அன்பெனும் மலர் முகம் கொண்டு... பாசமெனும் நூலினால்
கோர்த்த சகோதர பூமாலைகள் நாம் ஆவோமே! அன்பே ஜெயம்!!