நான் விரும்பி காத்திருக்கும் என் வாழ்க்கையின் அழகனே...
பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு
ஒருவருக்கொருவர் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வது
அழகிய திருமணமே....
தனக்கு ஏற்ற, தன்னை முழுவதும் புரிந்து கொண்டு நடக்கக்கூடிய,
மனப்பொருத்தம் நிறைந்த துணை கிடைப்பதோ அரிது
இந்த மாய உலகிலே...அதிலும்
நான் தேடும் என் காதல் இளவரசனோ புதிது...
இந்த கொரோனா நிறைந்த உலகிலே...
என் வாழ்க்கையின் ஒட்டு மொத்த சந்தோசமே...
ஓர் உடல் ஓர் உயிர் கொண்ட இனிய உறவே...
உன்னோடு நான் ஒட்டி பிறக்கவில்லை...
நம் இருவரும் ஒரே இரத்தமும் இல்லை...
ஒரு தாய் வயிறும் இல்லை...
எங்கோ பிறந்து...எங்கோ வளர்ந்து...ஆளாகி...
எனக்காக பிறந்தவன் நீயடா...
உனக்காக பிறந்தவள் நானடா...என்று
இறைவன் போட்ட முடிச்சில் விழுந்தது
நம் இருவரின் திருமண பந்தம்...
என் உணர்வில் கலந்திட்ட உறவே...
கற்பனை உலகத்தில் உன்னை நினைத்து வரைகிறேன்...
திருமண உறவில் நான் உனக்கென்று
ஆழமாக கட்டி வைத்திருக்கும் காதல் சாம்ராஜ்யத்தை...
அதை யாரால் உடைக்க கூடும்...
என் உடல் ஆரோக்கியமும்... என் மன ஆரோக்கியமும்...
நீ தானே பேரன்பே...
நம் உறவு நீடிக்க உன்னிடம் அதிகம் பேசிக் கொள்ள ஆசையே...
உன்னை நன்கு புரிந்துக் கொண்டவளாக இருந்திட ஆசையே...
உனக்குள்ளே நுழைந்து உன்னை தினம்...தினம்
நான் விரும்பி படிக்கும் நாவலாக...நீ இருந்திட ஆசையே...
உன்னை மதித்து , உன் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தவளாக,
உனக்கு பிடித்த ஆசை நாயகியாக மாறிட ஆசையே...
உன் நம்பிக்கையின் பாத்திரமாக நான் மாறிட ஆசையே...
உன்னுடன் எந்த ஒரு ஒளிவு மறைவும்ன்றி பழகிட ஆசையே...
உனக்கு இனிப்பான வாழ்க்கையை
கற்றுக் கொடுக்க ஆசையே...
என்றுமே சலிப்பு தட்டாத வாழ்க்கையை
உனக்கு ஆயுள் முழுதும் தந்திட ஆசையே...
நான் பாதுகாப்பாக உணரகிறவருடன்
வாழ்க்கை முழுவதும் நேசிக்கவும்,வாழ்ந்திடவும் ஆசையே...
இப்படி உன்னையே நினைத்து நினைத்து
ஏங்கும் என்னையும்...
உன்னை உயிருக்கும் மேலாக நேசிக்கும்
என் இதயத்தையும்...
ஒருநாளும் நிக்க வைத்து
உன்னை கேள்வி கேட்க வைத்துவிடாதே
என்னுயிரே...
என்றும் அன்புடன்,
உன் வருகையின் நாளுக்காக
சொல்ல முடியாத சுகங்களுடன்
ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கும்
உன் மணவாட்டி Jerusha JSB