நீல வானம் எங்கும் விரிய...
நெடுங்கடலும் என்முன் கிடக்க!
தென்றல் காற்றின் குளுமை முழுக்க,
திசைகள் யாவையும் குளிரால் நிறைக்க!
என்னவள் கரம்பற்றி நடக்கிறேன் நானே,
நடப்பதாய் நினைத்து பறக்கிறேன் தானே!!!
இறக்கையை விரித்து பறந்து செல்லும்..,
அவளின் அழகோ இயற்கையை வெல்லும்!
பகலின் ஒளிபோல் முகமும் மலர!
இரவின் அழகாய் விழியும் தெரிய!
பகலை வெல்லும் பால்போல் சிரிப்பும்.,
காண்பவர் யாரையும் அவள்பால் ஈர்க்கும்!
அவளின் அழகினை முழுவதும் சொல்ல.,
உலகினில் பொருத்தமாய் உவமைகள் இல்லை!
அவளது அருகினில் வாழ்ந்திடும் போது.,
அகிலமும் புள்ளி போல் இருப்பதாய் தோன்றும்!
இயற்கையை அழகாய் படைத்திட்ட இறைவன்.,
இவளையும் அழகாய் படைத்ததன் நோக்கம்.,
ரசனை இன்றி பிறந்தவன் என்னை.,
ரசனையால் அவள்பால் ஈர்க்கத் தானோ!!!
காதலுடன் பீன்...
[/font][/size][/color]