Author Topic: யாசித்தல் என்பது.......  (Read 448 times)

Offline Guest

யாசித்தல் என்பது.......
« on: September 14, 2018, 01:45:37 AM »
அந்த ஒற்றை காலடிச்சத்தம்
மட்டும் கேட்கவில்லை - கூடவே
ஒரு குழம்பொலி சத்தமும்
கேட்கிறது பலமாக....

அழைக்கும் சப்தம் மூடியிருக்கும்
என் வீட்டுத்தளத்தையும்
தாண்டி என் சமையறைவரை
கணீர் என ஒலிக்கிறது....

நிசப்தத்தின் முன்னால்
மண்டியிட்டிருந்தது அந்த
மதிய நேரம் - வெயிலின்
உச்சம் அவன் தொண்டையை
வரளச்செய்திருக்கவேண்டும்
இரைப்பின் ஓசை காற்றில்
கரைந்துகொண்டிருந்தது......

கிலுகிலுப்பையின் சில்லென்ற
ஒலியை தோற்கடித்தது
சில்லரைகளை குலுக்கும்
அமிர்தப்பாத்திரம்...

பகலின் வெளிச்சம் சீறும் வீட்டில்
என் கதவுகள் மூடியே இருந்தது
என் அறை முழுக்க இருட்டின்
ஆற்பாட்டமான சிவப்பு நிறம்
விழிகள் இழந்த நான்
இமை மூடி எப்போதோ
அறிந்து வைத்திருந்த அந்த நிறம்....

நான் சப்தமிடத்தான் வேண்டும்
குரல்வளை எப்போதோ
தீய்ந்துபோயிருந்தது வெற்றிலையும்
புகையிலையும் சேர்ந்து
மூட்டிய புற்றிலையின் நெருப்பு.....

அவன் மீண்டும் தன் கால்
முன்னெடுத்து வைக்கமுடியாத
பளிங்குத்தரை அது
முன்னெடுத்தாலும் வைக்க
இடம் கொடாத ஏழ்மை மனது....

சில பருக்கை மண் துகள்கள்
பளிங்குத்தரையில் உராயும்
சிராய்ப்புகளின் சப்தம் - அவள்
மெதுவாய் நகர்ந்து செல்வதை
உணர்த்திய அதிர்வுகள்.....

ஒட்டிய குடிலில் ஒரு
துளி தண்ணீர் ஒரு குவளை
பழைய சாதம் கேட்டு
பாத்திரம் நீட்டி கும்பிட்டு
காத்திருக்கிறது அந்த
ஒற்றைக்காலும் உடைந்ததோர்
ஒற்றை மரக்குழம்பும்....

என் தலைவாசல் கதவின்
பி்ன்னிலிருந்து அவள் பேசினாள் ஒற்றை வரியில் வீட்டில்
யாருமில்லை அப்புறம் எங்கேயாவது போய் கேளும் ஓய்
சட்டென இருண்டது அந்த
கிழட்டு யாசகனின் உலகம்...

ஏமாற்றம் என்ற வார்த்தையை
அந்த பழிங்குத்தரையில்
தன் பார்வையால் பதித்துவிட்டு
திரும்பும்போது ஒரு
ஒற்றைத்துளி வியர்வை
தெறித்து வீழ்ந்தது தலைவாசலில்...

மீண்டும் என் காதுகள் கேட்டன
அந்த ஒற்றைக்காலடிச்சப்தம்
ஒற்றை குழம்பொலி சப்தம்
வேறு ஒரு வாசலில் அவனுக்காய்
காத்திருக்கலாம் அவனின்
ஒரு குவளை சோறும்
ஒரு கோப்பை நீரும்.....

என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ