புத்தனின் புன்னகை கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள் சிக்கு
எனக்கு தோன்றிய சிறு கிறுக்கல் இதோ
வறுமை
பாய் போட்டு
படுத்திருக்கும்
வீட்டில்
ஒருவன்
யாரோ சொன்னார் என
ஆசை கொண்டு
வாங்கி வந்தான்
சின்ன சிறிய
சிரிக்கும் புத்தன்
சிலை
அவர் சிரிப்பை கண்டால்
வறுமை மாறும் செழுமை
பொங்கும் என நினைத்து
தினம் தினம் கண்விழித்தான்
சிலையின் முன்
நாட்கள் செல்ல செல்ல
சிரிக்கும் புத்தன் சிலையும்
அழுவதாகவே
தோன்றுகிறது
அவனுக்கு
புரியாமல் யோசித்தான்
இது புத்தனின் குற்றமா ?
இல்லை
இவன் ஆசையின்
குற்றமா ?