Author Topic: புத்தனின் புன்னகை  (Read 437 times)

Offline Guest 2k

புத்தனின் புன்னகை
« on: December 05, 2018, 05:17:38 PM »
புத்தனின் புன்னகை



எல்லாவற்றையும் துறந்து
தனியே பயணிக்கவென
முடிவெடுத்து
தெருவில் கால் பதித்த
புத்தனுக்கு
முன்னறிமுகமற்றவர் சிறு
புன்னகையை வீசி செல்கிறார்
கண்களில் தாங்கி நிற்கும்
ஒவ்வொரு கணமும் கனம் கூடிப்போன
அப்புன்னகையை
எந்த பக்கம் துறந்து செல்வதென்ற பெருங்குழப்பத்தின் முடிவில்
துறக்கவியலா அப்புன்னகையை
தானே ஏந்தி நிற்கிறான்

Image Source: Google
« Last Edit: December 05, 2018, 07:10:52 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: புத்தனின் புன்னகை
« Reply #1 on: December 05, 2018, 07:06:02 PM »
அருமை ....

இதை படித்தும் எப்பொழுதோ படித்த ஒரு வரி  நினைவில்...

ஆசையே துன்பத்திற்க்கு காரணம்
என்ற புத்தனும்
ஆசையுண்டான் - ஆசையே படுதல்
கூடாதென்று.............

#புத்தனின் புன்னகை :)
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: புத்தனின் புன்னகை
« Reply #2 on: December 05, 2018, 07:14:26 PM »
ம்ம்ம்
// ஆசையுண்டான் - ஆசையே படுதல்
கூடாதென்று :)

பேரன்பும் நன்றியும் நண்பா
 

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: புத்தனின் புன்னகை
« Reply #3 on: December 06, 2018, 06:11:11 PM »


புத்தனின் புன்னகை கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள் சிக்கு

எனக்கு தோன்றிய சிறு கிறுக்கல் இதோ


வறுமை
பாய் போட்டு
படுத்திருக்கும்
வீட்டில்
ஒருவன்

யாரோ சொன்னார் என
ஆசை கொண்டு
வாங்கி வந்தான்
சின்ன சிறிய
சிரிக்கும் புத்தன்
சிலை

அவர் சிரிப்பை கண்டால்
வறுமை மாறும் செழுமை
பொங்கும் என நினைத்து
தினம் தினம் கண்விழித்தான்
சிலையின் முன்

நாட்கள் செல்ல செல்ல
சிரிக்கும் புத்தன் சிலையும்
அழுவதாகவே
தோன்றுகிறது
அவனுக்கு

புரியாமல் யோசித்தான்
இது புத்தனின் குற்றமா ?
இல்லை
இவன் ஆசையின்
குற்றமா ?

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Guest 2k

Re: புத்தனின் புன்னகை
« Reply #4 on: December 06, 2018, 06:54:04 PM »
ஆஹா மிக்க நன்றி ஜோக்கர். அழகான பதில் கவிதை. அன்புக்கு நன்றி :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்