.
வீசப்பட்ட அம்புகளில்
வெறுப்புகளில்லையெனினும்
அம்பு தைத்தலின் வலி
என்பது அகோரமானது.....
தைத்த அம்புகளை பிடுங்கி - எடுக்கையில்
வலித்ததா என்பது அம்பு
தைத்தலை விட வலி மிகுந்தது....
வீசப்பட்ட அம்புகள் தவறானவை
என இயம்புவோரிடம் - என்னிடம்
இருக்கின்ற அம்புகளே வெறுப்பில்லாமல்
வீசப்படுகிறது என்கிறார்கள்...
அம்புகளை வீசாமல் இருக்க
யாதொரு எத்தனிப்பும்
இல்லை...
வார்த்தைகளும் இங்கே சதா
எந்தவித நிபந்தனையும் இன்றி
வீசிக்கொண்டே இருக்கின்றனர்
வார்த்தைகளின் ஆழத்தை
வீசுபவரும்,வீசப்படுபவரும்
உணரவே இல்லை....
உணராமல் போன காலம் ஒன்றில்
இழந்தவையெண்ணி - இன்று
வார்த்தைகள் இன்றி தடுமாறுகிறேன்..