திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1960
ஆ... ஆ... ஆ.......
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே ஆ..
பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே
பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்து துள்ளிடவே
முழு நிலவென அழகு மலரென முகம் காட்டியே பருவ மங்கை வடிவாய்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்
வாசமலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்
வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்
வாசமலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்
கனி மொழியுடன் கருணை விழியுடன் களிப்பூட்டவே கலைஞான வடிவாய்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்