9
« Last post by Dito on March 26, 2024, 12:10:16 AM »
எப்பப்பபப்ப... எப்படித் தான் முடிகிறது இதனால் மட்டும்..?
கையில் கத்தியின்றி,
இரத்தமின்றி சுற்றி இருக்கும் எல்லோரையும் விரட்டி விட முடிகிறது இதனால் மட்டும்..
இத்தனை நாள் தெரியவில்லை
அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டுக் கொண்ட காரணங்கள்..
இத்தனை நாள் தெரியவில்லை அப்பாவை கண்ட அனைவரும் மிரண்டு ஓடிய காரணங்கள்..
என் நண்பர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள். உன் அப்பாவைக் கண்டால் பயமாய் இருக்கிறது என்று..
இப்போது எனக்கும் பயமாய் தான் உள்ளது...
என் தந்தை கையில் இருந்த உடைந்த மதுபாட்டிலைக் கண்டு..
எனக்கும் மிரட்சியாய் தான் உள்ளது..
எனது தாயின் வயிறு கிழிந்து தொங்கிய குடலையும் கொட்டிய குருதியையும் கண்டு..