இரவுகள் கடந்துபோகும்
நினைவுகள் தேங்கி நிற்கும்
கேள்விகள் பல உதிக்கும்
பதில்களை தேடி நிற்கும்
கவலைகள் சிறகு விரிக்கும்
காற்றோடு கலக்கத் துடிக்கும்
கண்ணீர்த் திவலைகள் சிந்தும்
கைகள் அதை மூடி மறைக்கும்.
எண்ணற்ற ஆசைகள் எழுந்து
இதயத்தை கூறாக்கி ரணமாக்கும்
கண்ணுக்கு இனியவளைக் காணாது
மண்ணுக்கு இரையாகி விடுவேனோ??