Author Topic: பூக்களை பறிக்காதீர்கள்  (Read 360 times)

Offline thamilan

மலர் கண்காட்சியில்
முகத்தில்
வியர்வைத்துளிகள் அரும்ப
பனியில் நனைந்த மலரைப் போல
மலரோடு மலராக
புத்தம் புதிதாய் அவள்

என் இமைத்தலில்
எண்ணற்ற
வண்ணத்துப் பூச்சிகள் உருவாகி
அவளை நோக்கி சிறகடித்தன

கண்களால் அவளை
மென்மையாக
கொய்து கொண்டிருந்தேன்
மெலிதாய் இதழ்விரித்து
என் பார்வையை
திசை திருப்பினாள்
'அங்கே'
தொங்கி கொண்டிருந்தது
பூக்களை பறிக்காதீர்கள்  எனும்
அறிவிப்புப் பலகை
   

Offline JeGaTisH

Re: பூக்களை பறிக்காதீர்கள்
« Reply #1 on: November 02, 2017, 04:30:50 PM »
வணக்கம்  தமிழன் அண்ணா
கவிதை பிரமாதம் ....

கண்களால் அவளை
மென்மையாக
கொய்து கொண்டிருந்தேன்
மெலிதாய் இதழ்விரித்து
என் பார்வையை
திசை திருப்பினாள்

கவிதைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா