மலர் கண்காட்சியில்
முகத்தில்
வியர்வைத்துளிகள் அரும்ப
பனியில் நனைந்த மலரைப் போல
மலரோடு மலராக
புத்தம் புதிதாய் அவள்
என் இமைத்தலில்
எண்ணற்ற
வண்ணத்துப் பூச்சிகள் உருவாகி
அவளை நோக்கி சிறகடித்தன
கண்களால் அவளை
மென்மையாக
கொய்து கொண்டிருந்தேன்
மெலிதாய் இதழ்விரித்து
என் பார்வையை
திசை திருப்பினாள்
'அங்கே'
தொங்கி கொண்டிருந்தது
பூக்களை பறிக்காதீர்கள் எனும்
அறிவிப்புப் பலகை