என் இளையக்கொடியே !
ஏனடி இந்த சோகம் உனக்கு?
கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாய்
கண்ணீருக்குள் அடைப்பட்டாயே...
தூண்டிலில் சிக்கிய மீனாய்
கண்ணீர்த்துளிகளுக்குள் சிக்கினாயே...
ரோஜா மலரை ஏந்தி
உண்மைக் காதலை தாங்கி
பலமுறை வந்தேனடி
உன் முன்னே நானும்...
உன் மீன் விழிகள் என்னை
சுட்டெரித்து உதறி தள்ளின...
எங்கிருந்தோ வந்த வஞ்சகனை
உன் கரங்கள் ஏந்தி அள்ளின...
பொய்யான காதலை நம்பாதே
என நான் உரைக்க,
என் மீது ஆத்திரம் கொண்டு
நீ முறைக்க,
நமக்குள் முரண்பாடுகள்
பயிராக வளர்ந்தன...
ஆனால் இன்று..........
நிஜமற்ற காதலின்
முகத்திரை களைந்தது!
அவன் கொண்ட காதல்
மாயவிம்பம் என
உனக்கும் புரிந்தது!
ஆயினும் கலங்காதே செல்லமே...!
உன் மீது நான் கொண்ட
உண்மை காதலில் துளியும்
மாற்றமில்லை...
என் ஜீவன் உள்ள வரை
உன் வாழ்வில் என்றும்
வாட்டமில்லை...
ஊற்றாய் பெருகும் உன் கண்ணீரை
எப்பாடுபட்டும் அணையாய் மாறி
நான் நிச்சயம் தடுப்பேன்...
உடைந்த உன் இதயத்திற்கு
எத்துன்பம் தாண்டியும் வந்து
இன்ப உலகை காட்டிடுவேன்...
வேதனையில் உலையென கொதிக்கும்
உன் மனதிடம் கூறு கண்ணே...
பொய்மைக்காதல் ஒருபோதும் சிறக்காது
உண்மைக்காதல்உன்னைஎன்றும்மறக்காது!
தந்தையாய் உன் தலை தாங்க
என் மடியுண்டு
தோழனாய் உன் வசந்தம் காண
என் விழிகளுண்டு
காதலனாய் உனைக் காத்திட
என் காதல் மனமுண்டு
அன்பு கணவனாய் உன் கண்களில்
ஆனந்த கண்ணீர் கொடுத்திட
என் வாழ்நாளுண்டு...
இன்று தான் உன் கருவிழிகள்
சோக நீர் வடிக்கும் இறுதி நாள்...
இறைவன் துணையால்
உன் கரம் பற்றுவேன்!
நான் நீயாக மாறி
காலம்தோறும் உன்னை
என் மூச்சாக சுவாசிப்பேன்...
உன்னுடன் நான் வாழும் வாழ்க்கை
அனைத்து கன்னிகளுக்கும் உணர்த்தும்!
உண்மையாய் நேசித்து
காதல் சொல்ல வரும் ஆடவனின்
காதலை ஏற்றால்,
அவன் காட்டும் எழில் உலகில்
நானும் ஓர் மகாராணியே என்று....!!!