மாற்றங்கள் வினா ?
மாற்றங்களே விடை ❤
பூக்களின் மனம்
கண்டேன் உன்னில் ...
என் மூச்சு காற்றாய்
மாறிப்போனாய் ...
குயிலின் பாடல்
கேட்டேன் உன் குரலில் ...
உன்னோடு
கைகோர்த்து பூமியை
வலம் வரவில்லை ..
உன்னோடு
ஓயாமல் பேசி
நாட்களை கடந்தது இல்லை
உன்னோடு
சேர்ந்து விளையாடி
மகிழ்ந்தும் இல்லை
உன்னோடு
தோள் சாய்ந்து
ஆறுதல் சொன்னது இல்லை
நீயோ
உலகின் ஒரு மூலையில்
நானோ
உலகின் மற்றொரு மூலையில்
இருந்தும்
நம் அன்பு
விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும்
தாண்டி
காற்றில் கலந்து நிரம்பி உள்ளது
பல நேரங்களில்
பிறர் தரும் ஏமாற்றங்களை
பழகி அதை சுமந்து வாழும் நமக்கு
நெருக்கமான ஒருவர் தரும்
சிறு சந்தோஷத்தில் நம்மை நாம் மறந்து
திகைத்து போகிறோம்
காயம் பட்ட மனதிற்கு
சிறு புன்னகை மருந்தாய்
சிறு பார்வை வரமாய்
மாறிவிடும் ...
சிலரின் பிரிவு
காயம் பட்ட மனதை ரணமாக்கிவிடும் ...