Author Topic: பாசப் பறவைகள்  (Read 1748 times)

Offline JeGaTisH

பாசப் பறவைகள்
« on: October 17, 2018, 03:09:11 PM »




படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்:கங்கை அமரன் 
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், சித்ரா


தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனைப் பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே

வாழ்த்தி உன்னைப் பாடவே
வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்துக் கண்ணிலே
பாசம் மாறவில்லையே

அன்பு என்னும் கூண்டிலே
ஆடிப்பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றவே
அண்ணன் உன்னைப் போற்றவே

தாவி வந்த பிள்ளையே
தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே
தாயைப் பார்த்ததில்லையே

தாயைப் போல பார்க்கிறேன்
வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம்
கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனைப் பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே

தேகம் வேறு ஆகலாம்
ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும்
அண்ணன் என்னைப் பாரம்மா

கோவில் தேவை இல்லையே
நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே
நாளும் வாழும் தேவனே

கூடு வாழும் குருவிகள்
பாடும் பாசப் பறவைகள்
கூடு வாழும் குருவிகள்
பாடும் பாசப் பறவைகள்

வாழ்த்துவேன்
உன்னைப் போற்றுவேன்
வாழ்வெல்லாம்
உன்னை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும்
சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனைப் பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக் குயிலே