ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 173
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/173.png)
நீல வானம் எங்கும் விரிய...
நெடுங்கடலும் என்முன் கிடக்க!
தென்றல் காற்றின் குளுமை முழுக்க,
திசைகள் யாவையும் குளிரால் நிறைக்க!
என்னவள் கரம்பற்றி நடக்கிறேன் நானே,
நடப்பதாய் நினைத்து பறக்கிறேன் தானே!!!
இறக்கையை விரித்து பறந்து செல்லும்..,
அவளின் அழகோ இயற்கையை வெல்லும்!
பகலின் ஒளிபோல் முகமும் மலர!
இரவின் அழகாய் விழியும் தெரிய!
பகலை வெல்லும் பால்போல் சிரிப்பும்.,
காண்பவர் யாரையும் அவள்பால் ஈர்க்கும்!
அவளின் அழகினை முழுவதும் சொல்ல.,
உலகினில் பொருத்தமாய் உவமைகள் இல்லை!
அவளது அருகினில் வாழ்ந்திடும் போது.,
அகிலமும் புள்ளி போல் இருப்பதாய் தோன்றும்!
இயற்கையை அழகாய் படைத்திட்ட இறைவன்.,
இவளையும் அழகாய் படைத்ததன் நோக்கம்.,
ரசனை இன்றி பிறந்தவன் என்னை.,
ரசனையால் அவள்பால் ஈர்க்கத் தானோ!!!
காதலுடன் பீன்...
[/font][/size][/color]