Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 219  (Read 1971 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 219
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline thamilan

மனிதன்
வண்ணங்களால் வாழ்கிறான்
வண்ணங்களுக்காகவே வாழ்கிறான்

மனிதர்கள் எல்லோருக்கும் கண்கள் மூக்கு வாய்
கைகள் கால்கள் எல்லாமே
ஒரே விதம் தான்
மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது
நிறம் தான்

அமெரிக்கனாய் இருந்தாலும்
ஆபிரிக்கனாய் இருந்தாலும்
ஆசியனாய் இருந்தாலும்
சதையும் இரத்தமும் ஒரே நிறம் தான்
உடலின் நிறத்தை வைத்து
பிரிவினை எதற்கு

இறைவனின் படைப்பில்
மிருகங்களைத் தவிர
மனிதர்கள் அனைவருக்குமே
ஆறறிவு தான்
அந்த அறிவை பயன்படுத்துகிறவன்
உயர்ந்தவன் ஆகிறான்
பயன்படுத்தாதவர்கள் தாழ்ந்தவன் ஆகிறான்

வெள்ளைக்காரர்களின் பிச்சைக்காரர்கள் இல்லையா
கறுப்பர்களின் கோடீஸ்வரர்கள் இல்லையா
அமெரிக்கன் மட்டுமா நிலவில் காலடி வைத்தான்
ஆசியனும் நிலவில் கால் வைத்தான்

தோலின் கருப்பை அசிங்கம் என்பான்
கருவிழி கருப்பை வைத்து
கவிதைகள் படைப்பான்
சிவப்பு என்றால் அபாயத்தின் அறிகுறி என்பான்
கன்னச்சிவப்பை காதல் என்பான்

சிலர் தங்கள் உண்மையான‌
வண்ணத்தை மறைத்துக்கொண்டு
உலகை ஏமாற்ற‌
வேறு வண்ணத்தை பூசிக்கொள்கிறார்கள்

சிலர் பச்சோந்திகள்
அடிக்கடி வண்ணம் மாறுவார்கள்
நிறம் என்னடா நிறம் நிறம்
மனம் தானடா நிரந்தரம் 

Poocha

  • Guest
மனிதனின் நிறம்
என்றும் தண்ணீரை போல

இருக்கும் இடத்திரிக்கேற்ப
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி
போல

சூழ்நிலைக்கேற்ப
தன் குணத்தை
மாற்றிக்கொள்வான்

தோலின் நிறம்
அவன் சுபாவத்தை
பிரதிபலிப்பதில்லை
இருந்தும்

வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்லமாட்டான்
என காலம் காலமாய்
நம்பி
பொய் பரப்பி வருகின்றனர்

கண் உள்வாங்கும்
ஒளியினூடே கடத்த படும்
நிறம்
சில நேரம் காட்சிப்பிழை
ஆகலாம்

மரபியல் சுழற்சியில்
பாரம்பரிய மாற்றத்தில்
உண்டாகும் நிறம்கொண்டு
எடைபோடாதே

பழக
தொடங்குகையில்
தோன்றும் நிறம்
பழகிய பின்
நிறமறியதாய் தோன்றலாம்

மனித
மனங்களுக்குள்
இருக்கும்
மிருகமும், மனிதமும்
அவனை
வெளிப்படுத்தும்
அகோரமாகவும்
அழகாகவும்

நிர்வாணமான
குழந்தையை
காணும் கண் கொண்டு
பார்க்க பழகி கொள்
அது உன்னில் கடத்துவது
சஞ்சலமற்ற
புன்னகை மட்டுமே

வெளி நிறம்
ஒரு மாயை
உள் நிறம் காண்
மகிழ்வாய்
வாழ்வாய்

Offline JeGaTisH

வர்ணங்களினால் ஆன பூமி இது
அதில் மனிதர்கள் மட்டும் எத்துணை வகை .

கருப்பு உழைப்போட வர்ணம்
அதை காரணம் காட்டி
விளக்கி வைப்பதுவும் தகுமோ !

பூமி சிரிக்க மழை பெய்யும் மேகம் கருப்பு
அந்தி வானம் அதில் காண்பதுவோ சிவப்பு !

வர்ணத்தில் ஒருவனின் உழைப்பை பார்க்காதே
அவன் திறமையின் உழைப்பை பார் !

வர்ணத்தில் உண்டானது இருள்
அதை ஒளிகொண்டு மாற்றிவிட்டான் மனிதன்  .

மண் அடியில் இருக்கும் மாணிக்கம் கூட
அதன் நிறம் கருப்பு என்பதே அதன் சிறப்பு !

ஓர் பெண்ணின் அழகில் ஆசைப்படுவான்
அவள் மனதின் கணவன் அவதில்லை !

அழகு என்பது சில வருடம் 
அதை அங்கே அங்கே இருக்கும்
மனிதர்களில் அழகை பார்க்காதே
ஒருவர் அன்பு காட்டுபவரா என பார் !


அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்

Offline சிற்பி

     நிற வெறி

அன்பு என்பது
ஒரு மனிதனின் முகவரி
ஆனால் இங்கே
மனிதர்களுக்குள் எத்தனை அடையாளம்

இனம் மதம் மொழி நிறம்
எத்தனை எத்தனை பிரிவுகள்
தன்னைபோல் மனிதனை
தன்னைவிட தாழ்ந்தவனாக
நினைக்கிறான்

கருப்பு வெள்ளை போராட்டங்கள்
இந்த பூமிக்கு ஒன்றும்
புதியதல்ல

வெள்ளை நிறத்தில் நீ இருந்தால்
என்ன மனிதா
உனதுள்ளம் இருளில் இருக்கிறது
கருப்பான மனிதனோ
வெளிச்சத்தில் வாழ்கிறான்

நிறவெறி பிடித்தவனே
உன் கண்களையே பார்
கருவிழி இல்லாமல்
உன்னால் பார்க்க முடியுமா

இரவும் பகலும்
சேர்ந்தால் தான் நாட்கள்
கருப்பும் வெண்மையும்
கலந்தது தான் வாழ்க்கை

வறலாற்றின் சோகம்
கருப்பு இன மக்களின்
விடுதலைக்காக
இருபத்தி ஏழு ஆண்டுகள்
சிறையில் இருந்தார்
நெல்சன் மண்டேலோ

தென்னாப்பிரிக்காவில்
காந்தியடிகள்
இரயிலில் இருந்து
இறக்கிவிடப்பட்டு
அவமானப்படுத்தப்பட்டார்

மனித சமுதாயம்
தோற்றுபோனதற்க்கு
இந்த காரணங்களே இருக்கிறது

இனம் மதம் நிறம்.....................
கடவுள் பூமியை
அனைவருக்கும் சமமாகதான்
படைத்திருக்கிறார்
மனிதர்கள் ஏனோ
இப்படி பிரிந்தே வாழ்கிறார்கள்...

« Last Edit: May 29, 2019, 04:27:08 PM by சிற்பி »
❤சிற்பி❤

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
￰கனவுகளில் இல்லையடா  ஜாதி 
கவியுலகில் இல்லையடா பேதம் 
காசுலகில் தானடா  இந்த நிறமும்  குணமும்  !

தாயின்  கருவறையை நிந்திப்பதும் 
பிறப்புகளை  ஏளனமாய்  தூற்றுவதும்   
மனித மனங்களின் வக்கிரம் 

உச்சிமுடி முதல் உடுத்தும்  உடுப்பு  வரை 
கருமை  உங்களது  ஆடம்பரம்!
வணங்கிடும்  கடவுள்  முதல் வாகனம் வரை
கருமை உங்களது வாழ்வியல்  முறை  !
ஆயினும்  ,
உயிரும் உணர்வுடன்  வாழ்ந்திடும் கருமை
உனக்கு  வேண்டாமா  ?

உடலில்  ஓடும் குருதியின்  நிறம் அறிவாயோ ?
உணர்வுகளின்  பசி  அறியுமோ நிறமாற்றத்தை?
திருமண சந்தையில்  வெள்ளைநிற  மோகம்
கொண்ட  வக்கிரங்களுக்கு 
உடற்பசி  மோகத்தில்  கருமை
கண்ணில்  படுவதில்லையோ  ?

மழையில் நனைவதை  விட குருதியில்  நனைகிறதடா  இப்புவியில்  தளம் ...
குருதியில்  குளித்து  குளித்து வறண்டு  போனதடா
பூமகள்  அவள்  தாய்மடி ...

நேசமாய் நேர்த்தியாய்  செய்யப்பட்ட  ஆயுதம்
அழகாய்  வெட்டி  சாய்க்கிறதடா
நிறம் எனும் மானுடத்தை  !!!

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


வெண்மையில் எத்தனை வண்ணங்கள்?
மனிதரில் எத்தனை நிறங்கள் ?
கருப்பும் வெளுப்பும் இங்கே ...
கதை சொல்லும் காலத்தை !

ஆதி மனிதன் நிறம் கருப்புதான் ..
பாதி காலம் கழிந்த பிறகே ...
வந்தது நிற வெறி !
மேலோர் ..கீழோர்  என வந்தது ஜாதி வெறி !

உயிர் துடிக்கும் வேளையிலும் ...
நிற ,ஜாதி வெறி பார்க்கும் மனிதா ...
ரத்தத்தை  தரம் தான் பிரிக்கும் ...அன்றி ..
நிறம் பார்த்து பிரிப்பதில்லை ..

கருப்பு நிறத்தால் விலகி ஓடும் மனிதா ...
உன் நிறம் ஒரு ஊனமல்ல ...
உன்  தாழ்வு எண்ணம் தான் ஊனம் ...
வாழ்வை வெல்ல நிறம் ஒரு தடை அல்ல ...

நிற வெறியாளர்களே ..
ஒருவேளை நீங்கள் திருந்தினால் ...
கல்லறையில் உங்கள் ரத்தத்தை தெளியுங்கள் ..
இறந்தவனும் உயிர்த்தெழுவான் ..
வேற்றுமையை வேள்வி  தீயில் போட்டு பொசுக்குவோம் .
மனிதத்தின் மகத்துவம்  மலரட்டும் !


Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 547
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
இருள் நிறைந்ந சூழலிலே ..
பிறப்பெடுக்கும் ஓர் இனம்தான்!

இமை திறக்கும் போதினிலே ..
தன் நிலையை தான் மறந்தான்!

விழி கொண்டு காண்கின்ற..,
திசையாவும் பல நிறம்தான்!

பிரித்தறியும் மனிதர்க்கு .,
அத்திறனும் ஓர் வரம்தான்!

நிறம் பிரிக்கும் கதிரவன்தான்!!
அத்தனைக்கும் ஆதியாம்..

நிறம் பிரித்தல் நியாயமில்லை..
அவன் சொல்லும் நீதியாம்!

சுற்றுகின்ற பூமியை.
உற்று நீயும் பார்த்திடு..

கற்று தேர்ந்த நல்லோரின்..
கருத்தை கொஞ்சம் கேட்டிடு..

படைப்புகள் பலவான போதும்..
ஓர் அடைப்புக்குள் யாவரும் சமமே..
என்று நீ உணர்நதிட்டால் போதும்..
உயர்ந்திடும் மனிதத்தின் குணமே!!!

அன்பர்களுக்காக கருப்பன் பீன்....

[/size][/color]
intha post sutathu ila en manasai thottathu..... bean