மாக்களாய், மாறி போகும் மக்களே,
நான் எண்ணிலடங்காது இருந்தேன்,
அவ்வப்போது உங்களை மன நிறைவடையும் வரை மகிழ்வித்தேன்,
உனது தேவைக்காக மரம் தானே என்றெண்ணி,
என்னை நீ வேருடன் வீழ்த்தினாய், வீழ்தது நான் அல்லவே,
உன் வாழ்வாதாரமே.
என் அருமை புரிந்தும் என்னை நீ வீழ்த்த துடிப்பது ஏனோ?.
உன் நிழல் உன்னை பிந்தொடரும் முன்பே
என் நிழல் உன்னை அரவணைத்ததை ஏன் மறந்தாய்?
நான் இல்லாது நீ ஏது சிறிதும் சிந்திக்க மாட்டாயா?
மரம் என்ற என்னை வீழ்த்திய பின் மழை என்ற
என் உறவை நாடுவதிலே அர்த்தம் என்ன?
இறைவன் எனை படைத்தது,
படைப்பிணங்களாகிய உங்களை பாதுகாக்கவே.
என்னை வளர்த்தெடுங்கள் , வாழ வழி தாருங்கள்,
நான் வாழ நினைப்பது எனக்காக அல்ல உங்களுக்காக...
நீங்கள் என்னை வீழ்த்த நினைத்த பொழுதும்,
நான் உங்களை வாழ வைக்கவே விரும்புகிறேன்....
ஏழையின் உறவாளனும் நானே,
பண முதலைகளின் பகையாளியும் நானே..
இப்படிக்கு.. மனக்குமுறலுடன் மரம் என்ற நான்....
MNA.... 🤨🤨🤨