சூரியன் உதித்த நேரம்
சட்டைய்பையில் மடலோடும்
கரங்களில் மலரோடும்
நெஞ்சுகுளியில் சிறு பயத்தோடும்
என் காதலை ஏற்பாயா என ஏக்கத்தோடு
மலரை பரிமாறிக்கொள்ளும் இரு இதயம்...!!
சொல்ல முடியாத
துயரத்திலும்
தூக்கம் இல்லாத
இரவுகள்
என்னில் எத்தனையோ...
அதை நீ அறிய வாய்ப்பில்லை
உன்னிடம் சொல்லமுடியாத
எத்தனையோ வலிகள்
உனக்குள் ஒரு பக்கம் இருந்தாலும்
என் காதலை ஏற்க மனம் வந்த
என்னவளின் உண்மை அழகு தான் !!
மனித மிருகங்களின்
ஜாதி வெறியில் பிடிபட்டு
கிடக்கும் சில காதல்
காமத்தின் பிடியில் சில காதல்
அழிவில் மிதக்கும் சமுதாயம்
சமுதாயத்தின் வேற்றுமை
மக்களின் ஏமாற்றம்
இவை அனைத்திலும் சிக்கிக்கொண்ட
பெண் ஆணின் காதலை
ஏற்க மறுக்கும் என்னவளின்
இதயம் அழகு தான் !!
நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருந்தால்,
அவர் நீங்கள் விரும்பும் விதமாக மட்டுமே இருக்க வேண்டும்
நீங்கள் விரும்பும் வகையில் மட்டுமே
நடந்து கொள்ளவேண்டும்
என்ற எதிர்பார்ப்பை வெறுக்கும்
என்னவளின் காதல் அழகு தான்..!!!
தனெக்கென்ன ஒரு தற்காப்பு , தனக்கென்ன ஒரு வாழ்கை
தனக்கென்ன ஒரு முடிவு என வாழும்
என்னவளின் தனித்துவ வாழ்க்கை அழகோ அழகு தான்
சுதந்திரமான இந்த உலகில் சுதந்திரமற்ற
பறவைகள் பெண்கள் தான்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்...
அதிலும்
ஆண் பறவைகளை விட பெண்
பறவைகளே அதிகம்...!
மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு...
மனமில்லாமல் போவது ஒருவனோடு....
உன் காதலை ஏற்றுக்கொண்டால்
நான் இறந்துவிடுவேன்
நீ உன் குடும்பத்தை இழந்து விடுவாய்
என கூறிய அம்மாவின் வார்த்தை நினைவில்
மனதை கல்லாய் மாற்றிக்கொண்டு
என்ன செய்வது என தெரியாமல்
பரிதவித்து நிக்கும் பெண்ணின் இதயம் !!!
உன் மனம் கல்லாக
இருந்தாலும் கவலையில்லை
அதில் கொஞ்சம் இடம் கொடு
என் அன்பை செதுக்கி
வைத்துவிட்டு செல்கிறேன் - சொல்லும் மறு இதயம்
இவன் நம்மை ஏமாற்றித்தான் போவான் -என தெரிந்தும்
ஆணின் சந்தோசம் தான் முக்கியம் என
மலரை வாங்க துடிக்கும் ஒரு இதயம் !!
ஐயோ , எப்போ டி எண் காதலை ஏத்துக்குவா
என துடிக்கும் மறு இதயம் - இரண்டுமே அழகு தான்
எப்போது ஜாதி மறையுதோ
அப்போது தான் காதல் மலரும்
மனம் உண்டால் மார்க்கம் உண்டு