21
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340
« Last post by விழியாள் on April 16, 2024, 11:59:51 AM »அச்சச்சோ , எனது ஓய்வு நேரம் முடிந்தே போனது .
இந்த சிகப்பு நிற பெட்டிக்குள் கொஞ்ச நேரம் சிறை வாசம் வேறு
காய்ந்து போன களிமண் போல
கடின உழைப்பால் இறுகி போன இவன் கைகள்
என்னை எத்துணை சாதுரியமாக கையாள்கிறது !
அப்பப்பா! எத்துணை ஆர்வம் எத்துணை ஆர்ப்பரிப்பு இவன் கண்களில் ,
நான் யார் என்றா கேட்கிறீர்கள்
அதற்குள்ளே மறந்தால் எப்படி,
பள்ளிக் காலங்களில்
அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசா காசுக்குள்
அவளுக்கு நீ வாங்கிக் கொடுத்த கைச்சுத்து முறுக்காகவும் வேர்கடலையகவும்
கல்லூரியில் அவனுக்கு நீ வாங்கிக் கொடுத்த ஐம்பது ரூபாய சாக்லெட் ஆகவும்
முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த கதர் சேலையாகவும்
தேவையையும் தவிப்பையும் ஒருசேர நிறைவேற்றும் நான்
எடுத்த பல அவதாரங்கள் தான் இவை
நான் இறைவனல்ல!
ஆனால் எங்கும் நிறைந்திருப்பேன்
விலை கொடுத்து வாங்கி விடலாம்
ஆனால் விலை மதிப்பில்லாதவன்
என் முதலாளியின் அன்பே என்னை தீர்மானிக்கும் மின்னணு தராசு .
அப்பாடா!சிறை வாசத்திலிருந்து விடுதலை.
ஆனால்;
"அன்பே மன்னித்துவிடு நான் உன்னை காதலிக்கிறேன் இனிமேல் நம் காலம் இனிதாய் அமையும் "
எனச் சொல்லி அவள் கைகளில் என்னை ஆயுள் கைதியாய் சேர்த்து விட்டான்
அவளோ எனக்கும் அவனுக்கும் முத்தமிட்டாள் !😊
யாருக்கு முதல் முத்தம் என்பதை கூட கணிக்க முடியாமல் இலயித்துப் போய் அவள் கைகளை பற்றிக் கொண்டேன் .
Glarina,lakshya,tinu,Saravanan,sunflower,vethanisha,hazel ஆகியோரின் கைகளில் தவழும் பரிசுகளும் என் அவதாரங்களே '
என்னை புகழும் அவர்களிடம் எப்படிச் சொல்லுவேன்
அவளுக்கு அவனும்
அவனுக்கு அவளும்
பரிசாய் மாறிப்போய் இருக்க இங்கே எனக்காக ஓர் பரிசு!😍
கைக்கடிகாரம் நான் இனி ஓட வேண்டியது இல்லை
அவள் முகம் பார்த்து என் இதயம் துடிப்பதே
நேரம் ஆகிப் போகும்.
இனி நிற்காது துடிக்கும் என் இதயம் !
இந்த சிகப்பு நிற பெட்டிக்குள் கொஞ்ச நேரம் சிறை வாசம் வேறு
காய்ந்து போன களிமண் போல
கடின உழைப்பால் இறுகி போன இவன் கைகள்
என்னை எத்துணை சாதுரியமாக கையாள்கிறது !
அப்பப்பா! எத்துணை ஆர்வம் எத்துணை ஆர்ப்பரிப்பு இவன் கண்களில் ,
நான் யார் என்றா கேட்கிறீர்கள்
அதற்குள்ளே மறந்தால் எப்படி,
பள்ளிக் காலங்களில்
அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசா காசுக்குள்
அவளுக்கு நீ வாங்கிக் கொடுத்த கைச்சுத்து முறுக்காகவும் வேர்கடலையகவும்
கல்லூரியில் அவனுக்கு நீ வாங்கிக் கொடுத்த ஐம்பது ரூபாய சாக்லெட் ஆகவும்
முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த கதர் சேலையாகவும்
தேவையையும் தவிப்பையும் ஒருசேர நிறைவேற்றும் நான்
எடுத்த பல அவதாரங்கள் தான் இவை
நான் இறைவனல்ல!
ஆனால் எங்கும் நிறைந்திருப்பேன்
விலை கொடுத்து வாங்கி விடலாம்
ஆனால் விலை மதிப்பில்லாதவன்
என் முதலாளியின் அன்பே என்னை தீர்மானிக்கும் மின்னணு தராசு .
அப்பாடா!சிறை வாசத்திலிருந்து விடுதலை.
ஆனால்;
"அன்பே மன்னித்துவிடு நான் உன்னை காதலிக்கிறேன் இனிமேல் நம் காலம் இனிதாய் அமையும் "
எனச் சொல்லி அவள் கைகளில் என்னை ஆயுள் கைதியாய் சேர்த்து விட்டான்
அவளோ எனக்கும் அவனுக்கும் முத்தமிட்டாள் !😊
யாருக்கு முதல் முத்தம் என்பதை கூட கணிக்க முடியாமல் இலயித்துப் போய் அவள் கைகளை பற்றிக் கொண்டேன் .
Glarina,lakshya,tinu,Saravanan,sunflower,vethanisha,hazel ஆகியோரின் கைகளில் தவழும் பரிசுகளும் என் அவதாரங்களே '
என்னை புகழும் அவர்களிடம் எப்படிச் சொல்லுவேன்
அவளுக்கு அவனும்
அவனுக்கு அவளும்
பரிசாய் மாறிப்போய் இருக்க இங்கே எனக்காக ஓர் பரிசு!😍
கைக்கடிகாரம் நான் இனி ஓட வேண்டியது இல்லை
அவள் முகம் பார்த்து என் இதயம் துடிப்பதே
நேரம் ஆகிப் போகும்.
இனி நிற்காது துடிக்கும் என் இதயம் !