Author Topic: ஒரு இனிய நண்பிக்கு காணிக்கை இந்த கவிதை  (Read 553 times)

Offline thamilan

 
ஒரு கவிதைக்கு
எனது கவிதை காணிக்கை
நண்பர்கள் இணையதளத்தில் சிறகடிக்கும்
ஒரு இளஞ்சிட்டு
இனிமையான ஒரு
மலர் கொத்து

சிலரைப் பார்த்தல் பிடிக்கும்
சிலரை பார்த்தாலும் பிடிக்காது
சிலரை பார்க்காமலேயே பிடிக்கும்
முகம் தெரியாவிட்டாலும்
 நல் அகம் காட்டும்
இனிய நண்பி இவள்
பார்க்காமலேயே பிடித்துப் போன
அருமையான பெண் இவள்

குறும்பும் கலகலப்பும்
இவள் கூடப்பிறத்த உடன்பிறப்புகள்
மனம் கோணாமல் மனதை வருத்தாமல்
இனிமையாக பேசி மகிழ்ந்திடும்
இனியவள் இவள்


FTCயில் அழகுக்கு அழகு சேர்க்கும்
கலகலப்பான பெண் இவள்

பெண்கள் என்றாலே
போனுக்கு ரீசார்ஜ் பண்ணச்சொல்லி கேட்பார்கள்
அல்லது அழகுசாதன  பொருட்களைத்தான் கேட்பார்கள்
என்று சொல்லுவார்கள்
ஆனால் இவள் கேட்பதெல்லாம்
முறுக்கும் அல்வாவும் தான்
நாடு விட்டு நாடு போனாலும்
எங்கள் நாட்டு உணவின் மேல்
அலாதி பிரியம் இவளுக்கு

அளவான வார்த்தைகள்
அமைதியான பேச்சு
யாருடைய மனதிலும் புண்படுத்தாமல்
கலகலவென்று பேசிடும் இவள்
பண்பட்ட இவள் குணம்
புண்பட்ட எவர் மனதிலும் ஆற்றிடும்

FTCயில் பல ரோசாக்கள் இருந்தாலும்
இவள் மட்டும் மாஷா
இவள் பேசும் போது
ஷா என்று பிரமிக்க வைக்கும்
அதனால் தானோ என்னவோ
இவள் பெயர் MASHA

Offline JeGaTisH

அருமை தமிழன் அண்ணா
உங்க கவிதை பெற மாஷா அக்கா
என்ன பலன் செய்தாரோ
கவிதைகள் தொடரட்டும் அண்ணா


Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
THAMILANNNN!!!!  :D

மிக்க நன்றி தமிழன், சூப்பரா இருக்கு உங்க கவிதை.
முறுக்கு சாப்பிட wait பண்ணித்து இருக்கிறேன் haha! ;D

Thank you, can't wait to read more of your poems, especially those u write for me  ;)

இப்படிக்கு உங்கள் நண்பி

MASHA