தமிழன் : என்னப்பா ஜெகா பொண்டாட்டிய பறிகொடுத்தது போல சோகமா இருக்க அட பக்கத்துல நம்ப பிரியனும் இருக்கார். நீங்க என்னப்பா சொறிநாய் கடிச்சி 21 ஊசி போட்டது போல சோகமா இருக்கிறீங்க ?
ஜெகா : அட போங்க தமிழன் அண்ணா, சொந்தக்கதை சோகக்கதை . வாழ்க்கையே வெறுத்துப் போய் இருக்கிறோம் நாங்க .
தமிழன் : என்னப்பா நடந்தது ? உங்க சோகக் கதையை எனக்கும் தான் சொல்லுங்களேன் .
பிரியன் : அது பெரிய கதை நண்பா . நான் இத்தனை நாளா watsuppல செட் பண்ணி வச்சிருந்த நமீதா என்ன வீடியோல பார்க்கணும் என்று சொன்னாப்பா.
தமிழன் : அட நம்ப நடிகை நமிதாவா ? அப்புறம் அப்புறம் ?
பிரியன் : தமிழ் நம்ப நமீதா இல்ல அது எனது நமிதா.
தமிழன்: அட சரிப்பா. உனது நமீதா தான். என்ன நடந்தது அதை சொல்லு முதல்ல .
பிரியன் : நானும் ஓடிப் போய் வீட்டுல இருந்த பவுடரை எல்லாம் போட்டுக்கிட்டு வீடியோவை ஒன் பண்ணினேன்.
தமிழன் : அட அப்புறம் ?
பிரியன் : எல்லோருக்கும் சனி வாயில என்று சொல்லுவாங்க . எனக்கு சனி வீடியோலோ இருந்திச்சி . வீடியோல என்னைப் பார்த்ததும் நமீதா சொன்ன வார்த்தைகளைத் தான் என்னால தாங்கி கொள்ள முடியல
தமிழன் : அப்படி என்ன தான் சொன்னா அவ?
பிரியன் : நீ கருப்பா இருந்தாலும் பரவா இல்ல, ஆனா கண்ட கண்ட பவுடரை எல்லாம் போட்டு சுடுகாட்டுல இருந்து எழும்பி வந்தவன் போல இருக்கிற என்று சொன்னதா மச்சி . எனக்கு ரொம்ப அவமானமா போச்சி தமிழ் .
தமிழன் : சரி ஜெகா நீ ஏண்டா பத்து நாள் திங்காத பரதேசி போல இடிஞ்சி போய் இருக்கிற ?
ஜெகா : அட ஏண்ணா எனது வைத்தெரிச்சல கூட்டுறீங்க, நானே ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் ,
தமிழன் : உனக்கு எந்த பொண்ணு பூட் வச்சா?
ஜெகா : அட இல்லண்ணா, நம்ப சாட்ல கஷ்டப்பட்டு ஒரு பிகரை புடிச்சேன்
தமிழன் : அட அதிஷ்டக்காரன் தாண்டா நீ . சொல்லவே இல்ல .
அதுக்கு சந்தோசமா இருக்காம கவலையா இருக்க ?
ஜெகா : இல்லண்ணா நேத்து அவ என்னை நேரா பார்க்கணும் என்று சொன்னா. நானும் நல்லபடி டிரஸ் பண்ணிக்கிட்டு வீட்டுல இருந்த பவுடர்ல குளிச்சிட்டு போனேன் அண்ணா .
தமிழன் : அப்புறம் அப்புறம் ?
ஜெகா : அவ செம பிகர் அண்ணா . பக்கத்துல போய் அமர்ந்ததும் எதோ கூவத்துல இருந்து வந்த பன்றியை பார்க்கிறது போல மூக்கை சுழிச்சிட்டு ஒரு மாதிரி பார்த்தா.
தமிழன் : ஏண்டா நீ குளிக்காம போனியா ?
ஜெகா : இல்லண்ணா நான் மூணு வாட்டி குளிச்சிட்டு தான் போனேனேன் .
தமிழன் : அப்போ அதுக்கு அவ மூக்கை சுழிச்சா?
ஜெகா : நான் போட்டிருந்த பவுடர் தான் கரணம் . அது பொணத்துக்கு போடுற பவுடர் போல வாசனை வருதாம். போய் செண்ட்ல குளி முதல்ல . ஒரு நல்ல பவுடர் வாங்க வக்கில்லை.உனக்கெல்லாம் காதல் கேட்குதா என்று கேவலமா பேசிட்டு போய்ட்டா .
தமிழன் : அட உங்க இரண்டு பேருக்கும் பவுடர் தான் பிரச்சனையா ? கண்ட கண்ட பவுடரை எல்லாம் பூசினா இப்படித்தான் நடக்கும் . அண்டங்காக்கா போல இருக்கிற நானே நம்ப சாட்ல இருக்கிற பேரழகி ரோஸ் கூட டூயட் பாடிட்டு வரேன்.
பிரியன் : எப்படிடா ரோச மடக்கின ? நம்ப முடியல
தமிழன் : எல்லாம் நான் போட்டு போன பவுடரோட மகிமை தான் கரணம் . அந்த பவுடரோட மணத்துல மயங்கி , எனது கரிச்சட்டி கலரை பத்திக் கூட கவலைப்படலன்ன பார்த்துக்கோயேன் .
பிரியன் : உண்மையாவா மச்சி ? நீ என்ன பவுடர் பாவிச்ச? எங்களுக்கும் சொல்லுடா பிளீஸ்.
தமிழன் : மங்கையர் மனதை மயக்கிட , கன்னியர் உள்ளங்களைக் கவர்ந்திட நான் பாவிப்பது கோகுல் சென்டெல்வுட் பவுடர். பவுடர்களின் ராணி கோகுல் சென்டெல்வுட் பவுடர் தான் .
பிரியன் : அடேய் ஜெகா இன்னும் ஏண்டா இஞ்சி தின்ன குரங்கு போல உட்கார்ந்து இருக்கிற ? உடனே போய் கோகுல் சென்டெல்வுட் பவுடரை வாங்கி வருவோம் . நாளைக்கு கோகுல் பவுடரை போட்டு நமிதாவை மடக்கிட வேண்டியது தான் .