Author Topic: கண்களால் என்னை கவர்ந்தவள்  (Read 712 times)

Offline thamilan

பெண்ணே
நீ அழகில்லை என்று சொன்னாய்
நானும் நம்பினேன்
உன்  கண்களைக் காணும் வரை
கண்ட பின்னோ
உன்னை விட பேரழகி எவருமில்லை
என்று புரிந்து கொண்டேன்

நான் பார்த்தது உன் கண்களை
மட்டும் தான்
சுனாமி வந்தால் தான் சேதம் வரும்
நீ பார்த்தாலே
பலத்த சேதம் என்
நெஞ்சுக்குள்

ஒரு முறையாவது
உன்னுடன் பேசலாம் என்று
தினமும் நினைத்தேன்
நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும்
உன் கருவிழி பேசும் பேச்சைக் கண்டு
பேச்சு மறந்து போகிறது

காந்த விழியால்
என்னை கவர்ந்தவளே
உன்னில் எனக்கு ஏதும் வேண்டாம்
உன் கண்களில் மட்டும் இடம் கொடு
உன் கண்வழியே
உன் இதயத்துக்குள்
இறங்கி விடுவேன் நான்

உன்னை படைத்த
இறைவனுக்கு கூட புரியாது
உன் பார்வையின் அர்த்தங்கள்
அதில் இருப்பது
ஏக்கமா , காதலா இல்லை தேடுதலா
தேடிப் பார்க்கிறேன்
இன்னும் புரியவில்லை எனக்கும்

உன் கண்களின் கீழே
அந்த அழகிய மூக்கும்
அதில் தொங்கும் வளையமும்
நான் கிளியாக வரம் கேட்கிறேன்
அந்த மூக்கை கொத்திட  ஆசை எனக்கு
அந்த வளையத்துக்குள் உட்கார்ந்து
ஊஞ்சல் ஆடிடவும் மிக ஆசை

பெண்ணே இதற்கு மேல்
உன் முகத்தை காட்டாதே
உன் செவ்விதழ் பார்த்தால்
சிதறிப் போவேன் நான்
உன் புன்சிரிப்பை பார்த்தால்
உன் பைத்தியம் ஆவேன் நான்

உன் கண்களுக்கே நான்
ஆயுள் கைதியாகி விட்டேன்
என்னை விடுதலை செய்யாதே   

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: கண்களால் என்னை கவர்ந்தவள்
« Reply #1 on: December 10, 2017, 03:17:35 PM »
Thamilaaaaannnnnn!!!  :D
Adadaaaaa adadaaaa, kangalai paarthe ippadi oru azhagana kavithaiya eluthividdeenga..  ;D Ithuvum antha Thenrala?  ;)

Offline SweeTie

Re: கண்களால் என்னை கவர்ந்தவள்
« Reply #2 on: December 15, 2017, 01:23:06 AM »
காந்த விழிகளில் உங்கள் இரும்பு இதயம்  ஈர்க்கப்பட்டது   இயற்கையே.
வாழ்த்துக்கள்