எதனால் நான் ஈர்க்கப்பட்டேன்
அர்த்தமின்றி நானாக சிரிக்கிறேன்
யாருமின்றி தனிமையுடன் கதைக்கிறேன்
காரணமின்றி கவலையில் அழுகிறேன்
ஆகாயத்தில் அந்தரத்தில் மிதக்கிறேன்
வண்ணக் கனவுகளாய்
என் எண்ணங்கள்
நெஞ்சு நிறைய மகிழ்ச்சி
கண்கள் நிறையக் கனவுகள்
பார்க்கும் பொருளெல்லாம் நீ
பேசும் வார்த்தை எல்லாம் உன் பெயர்
உன்னை மட்டும் சுற்றி சுற்றி
விண்ணில் பறக்கும் எனது எண்ணங்கள்
உன்னையும் என்னையும் தவிர
உலகத்தை மறந்தேன்
உன் புன்னகைக்கு அர்த்தம் தேடி
அகராதிக்குள் அலைந்தேன்
சுலபமாக சிரித்துச் செல்கிறாய்
கொஞ்சம் வெட்கத்தோடு
கொஞ்சலாய், கொஞ்சமாய்
உதடு பிரியாமல் சிரித்து
நிறையவே என்னை மயக்கி விட்டாய்
உன் கொஞ்சல் சிரிப்புக்கு என்னை
கெஞ்ச வைக்கிறாய்
உன் புன்னகை முத்துக்களை சேகரிக்கிறேன்
என்று சொல்ல
நான் பித்தனல்ல
உன் புன்னகையின் அர்த்தம் தெரியாமல்
நிற்கும் பக்தன்
ஒரு முறையேனும் என்னைப்பற்றி
நீ யோசித்திருந்தால்......
ஒரு முறையேனும்
உன் பெண்மையை நான் இடரியிருந்தால்......
ஒரு முறையேனும்
என்னை பார்த்து நீ வெட்கப்பட்டிருந்தால்......
ஒரு முறையேனும்
என் நினைவுகள் உன்னை பரவசப்படுத்திருந்தால்.....
ஒரு முறையேனும்
என்னைப் பார்க்கவேண்டும் என நினைத்திருந்தால்.......
ஒரு முறையேனும்
என் நினைவுகளுடன் நீ விழித்தெழுந்தால்.....
சத்தியமாக உன்னுள் நான்