நெஞ்சுக்கு மிக நெருக்கமாய் கொண்டலைகிறேன் உன்னை
இமைக்காத விழிகொண்டுன்
தெளிந்த முகம்நோக்கலில்
கழியும் பொழுதுகளில்
இளைப்பாறப் பழகிவிட்டிருக்கிறது மனம்.
உன் கதகதப்பிற்கு
பரிச்சயப்பட்ட விரல்களுக்கு
உன்மேனி தொட்டுணர்ந்து
ஸ்பரிசம் நுகர்தல்
அனிச்சையாகி
காலங்கள் ஆகி இருக்கிறது
சுதாரிக்காத ஒரு பொழுதில்
என் கைநழுவுகிறாய்..
பதறித்துடித்து மீண்டும் கைக்கொள்ள முயலுகிறேன் உன்னை..
இயலா நிலையொன்றில்
எனை வீழ்த்தி
சுயம் விழுந்து நொறுங்குகிறாய் சில்லுசில்லாய்...
இன்னும் பத்திரமாய் பாதுகாத்திருந்திருக்கலாம்
மெல்லிய மனம் கொண்ட
மெல்லிடையாள் உன்னை
அன்றலர்ந்த மலர் போலுன்னை மீட்டெடுக்கும் வரையில்
இனி ஆதங்கம் மட்டுமே
சூழ்ந்திருக்கும் என்னை
குழப்பங்கள் தாண்டியும்
யோசித்தே இருக்கும் மனம்
உன்னை மீட்டெடுக்கும்
உத்திகளை..
மீண்டு நீ மீண்டும் வரும்வரை.
உன்னை மீட்டெடுத்தல்
என்பது எனக்கானது.
நீ எனக்கானவள்...
#கைத்தவறி விழுந்து உடைந்து போன
கைப்பேசியின் சாக்கில் காதலோடு ஒரு கவிதை(?)😂😂