வார்த்தைகளற்ற வாழ்த்து
என்னவென்று வாழ்த்த
வலிகளையே வாழ்க்கையாக வாழ்பவள்
ரணங்களையே புன்னகையால் கடப்பவள்
தியாகங்களின் பிறப்பிடம்
அன்பின் பெட்டகம்
ஒருநாளின் வாழ்த்து அவளது
வாழ்க்கைக்கு ஈடாகாது...
ஈன்ற அவளின் வலிகளுக்கு மருந்தாகும்
எதிர்பார்ப்பே இல்லாத அவளது வாழ்வுக்கு
மயிலிறகாய், மலர்சொரிவாய் !
துவண்ட நேரங்களில் அன்னையாய் எனை
மடிதாங்கிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும்,
துயரங்களில் தோள் கொடுத்த
தோழர்களுக்கும் தோழிகளுக்கும் ,
அன்னையர் தின வாழ்த்துக்கள் !