நிலவின் மேலான நேசம்..
இரவு தனை அலங்கரிக்கும் நிலவே,
கவிஞன் கற்பனையில் சிறகடிக்கும் உறவே..
ஏழைகளின் எழில்மிகு அரசியே, தெருவிளக்கு இல்லை
என்ற பொழுதும், முழு விளக்காய் மிளிர்ந்தவளே.
நட்சத்திரத்தினால் நெய்யப்பட்ட நீல நிற கம்பளத்தில்,
நாணத்துடன் அமர்ந்திருக்கும் அழகு சிலை அவள் - நிலா...
வழிதுனையாய் நீ இருக்க, வேறு துணை எதற்கு,
வழிபோக்கனின் ஸ்நேகிதியே..
மிளிரும் அழகு தனில், நீல வானில் வளம் வரும் வெண்மயிலே
உன்மேல் நேசம் கொள்ளாதோர் உலகினில் இல்லை..
தாய் அவள் தன் சேயிர்க்கு உணவூட்ட, உன் அழகு தனை
ஆதாரமாய் காட்டி உணவு புகட்டிய நொடி முதலே
புன்னகையுடன் புணர்ந்தது பச்சிளம் குழந்தையின் பாசமிகு நேசம்.
கார் முகிலும் காதல் கொண்டது நேசகி
உனை உறசி செனற நொடிமுதலே.
நீல வானமும் நெஞ்சுறுகியது, நிலவே நீ வராதிருப்பின்..
உனை காண்பது நிறைவேறா கனவென தெரிந்தும்,
கானல் நீரான காதலுடன் காத்திருக்கிறது கதிரவன்.
நிலவே உனை மடியினில் ஏந்த, கடல்களும் ,
நீரோடைகளும் காலத்தை கடந்த தவத்தினில்
ஒருதலை காதலுடன் காத்திருக்க,
வெண்ணிலவே உன் நேசம் தான் யாரிடமோ?.
கனவெல்லாம் நினைவுகளாய் உணர்ந்தேன்
நிலவே உனை கண்ட நொடி முதலே..
அன்றும், இன்றும் கவிதையின் பிறப்பிடமாய் உன் மிளிரும் அழகு.
மழலை காதலாய் அன்று, காவிய காதலாய் இன்று...
என்றும் உன்மேலான நேசத்தின் சாயலில். MNA.....